தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். வீட்டு வசதி, குடிநீர், நிலம் தொடர்பான பிரச்சினைகள், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை உடனடியாக பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அலுவலர் வே பண்டரிநாதன் பழங்குடியின நல வாரிய அலுவலர் அசோக் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். வீட்டு வசதி, குடிநீர், நிலம் தொடர்பான பிரச்சினைகள், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை உடனடியாக பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அலுவலர் வே பண்டரிநாதன் பழங்குடியின நல வாரிய அலுவலர் அசோக் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக சரிவு கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 300 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக நீடித்து வந்த நிலையில், நேற்று இந்த நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 500 கன அடியாக நீடித்து வந்தன. இன்று மேலும் குறைந்து வினாடிக்கு 300 கன அடியாக சரிந்து நீடித்து வருகிறது. தற்போது வரக்கூடிய இந்த உபரி நீரின் வேகம் குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டக்கூடிய தண்ணீரின் வேகமும் குறைந்தது. மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை பொறுத்து உள்ளது1
- கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பாக மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது1
- பஞ்சாயத்தில் முறைகேடு உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் என்னை கேட்காதீர்கள் பஞ்சாயத்தில் கேளுங்கள் என அலட்சியமாக அதிகாரி பொதுமக்களிடம் பதில் அளித்ததால் வாக்குவாதம். திரும்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காக்கங்கரை கிராம பஞ்சாயத்தின் முறைகேடு குறித்து பதில் அறிக்கையில் பழைய பொருட்களின் இருப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளது என்று பதிவேடு சரியாக பராமரிக்கப்படுகிறது என்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு இல்லை என்றும் கழிவு நீர் கால்வாய் சரியான அளவிற்கு போடப்படுகிறது என்றும் சுந்தரம் பள்ளி தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் விற்பனை செய்ததில் முறைகேடு இல்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கின்றது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என சுரேஷ்குமார் அளித்த மானுவில் தெரிவித்து இருந்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். வீட்டு வசதி, குடிநீர், நிலம் தொடர்பான பிரச்சினைகள், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை உடனடியாக பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அலுவலர் வே பண்டரிநாதன் பழங்குடியின நல வாரிய அலுவலர் அசோக் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை தெற்கு ஒன்றியத்தில், அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது.1