Shuru
Apke Nagar Ki App…
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (11.07.2026) உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட குடும்ப நல செயலகம் ஒருங்கிணைத்திருந்தது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
Agarva manickam
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (11.07.2026) உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட குடும்ப நல செயலகம் ஒருங்கிணைத்திருந்தது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில், தாகம் காரணமாக தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று வழிமாறி கிராமத்திற்குள் புகுந்தது. கிராமப்பகுதிக்குள் மான் அங்கும் இங்கும் அலைந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி மக்கள், அந்த மான் நாய்களிடம் சிக்காமல் இருக்கத் துரிதமாகச் செயல்பட்டு அதனை மீட்டனர். மான் மீட்கப்பட்டவுடன் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் மீட்ட அந்தப் புள்ளி மானை ஒப்படைத்தனர். கிராம மக்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டிய வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மீட்கப்பட்ட அந்த மானைப் புதூர்நாடு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.1
- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமின் போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 114 பயனாளிகளுக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில் வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகையாக 1.82 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் 47 பேருக்கு 7.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 4 பேருக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி ஆட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருக லட்சுமி, தாசில்தார் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதால் மதுப்பிரியர்களிடையே பிரச்சனை எழுவதாகவும், இதனால் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சம்பளத்தை 25 சதவீதம் உயர்த்தியும் அறிவித்த நிலையில், தங்களது செலவுகளை ஈடு செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தனியார் மதுக்கடைகளில் அரசு மதுக்கடையை விட பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தனியார் கடைகள் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்பதால் மது பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தமிழக அரசு மதுக்கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.1
- இயற்கையைப் பாதுகாப்பதையும், மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு நீடுவாழ்வார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணியில் மேடவாக்கத்தைச் சேர்ந்த மன்சூர் பாய் இணைந்து களப்பணியாற்றி வருகிறார்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் பாலாற்றில், இன்று காலை 11 மணியளவில் பாலாறு நீர்நிலை பாதுகாப்பு தடுப்பு சுவர் மீது பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், உயிரிழந்தவரின் உடலை மீட்டதுடன், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.2