மாம்பழ சின்னத்திற்கு சௌமியா அன்புமணி வாக்கு சேகரிப்பு தருமபுரி- நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பாமாகா வேட்பாளர் திருமதி செளமியா அன்புமணி மாம்பழ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தேசிய ஜனநாயக கூட்டணி பாமா கா சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதிசெளமியா அன்புமணி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்படட சவலூர் , நல்லம்பள்ளி சேஷம் பட்டி கோவிலூர் உள்ளிட்ட.20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் சென்ற இடங்களில் பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர் வாக்கு சேகரிப்பின்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அதிமுக,பி.ஜே.பி நிர்வாகிகள் உடன் சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்
மாம்பழ சின்னத்திற்கு சௌமியா அன்புமணி வாக்கு சேகரிப்பு தருமபுரி- நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பாமாகா வேட்பாளர் திருமதி செளமியா அன்புமணி மாம்பழ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தேசிய ஜனநாயக கூட்டணி பாமா கா சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதிசெளமியா அன்புமணி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்படட சவலூர் , நல்லம்பள்ளி சேஷம் பட்டி கோவிலூர் உள்ளிட்ட.20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் சென்ற இடங்களில் பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர் வாக்கு சேகரிப்பின்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அதிமுக,பி.ஜே.பி நிர்வாகிகள் உடன் சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்
- Post by Salem_Updates1
- ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை1
- Post by Ashik2
- Post by Vinayagam Vinayagam1
- திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய 5 வது ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் குடியிருப்பு வளாகத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது இந்த கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சனையாக 1024 கலச பூஜைகளுடன் நடந்தது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து பலி வாஸ்து கலசம் தொடங்கி 24ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மூல பூஜையும் 25ஆம் தேதி சாந்தி ஹோமம், பகவதி சேவை என நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:15 மணியிலிருந்து 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து 1008 கலசம் அபிஷேகமும் நடந்தது. இந்த விழாவில் பெல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உட்பட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.2
- திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- Post by Vinayagam Vinayagam1