*கள்ளச்சாராய தடுப்பு சட்டவிழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி கிருஷ்ணகிரி, கனக முட்டலு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது*. மதுவிலக்கு சட்டம்- 1937 மற்றும் மதுவிலக்கு திருத்த சட்டம்- 2024 விழிப்புணர்வு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம் கனகமுட்லு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஈஸ்வரன் முன்னிலையில், தமிழ்நாடு காவல்துறை குற்றப்புலனாய்வு துறை சென்னை அமலாக்கபணியகம் D.I.G-துணைத் தலைவர் திரு மூர்த்தி. I.P.S, கிருஷ்ணகிரி S P- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அனிதா I.P.S, தலைமை ஆசிரியர் திரு.ஈஸ்வரன் மற்றும் திரு.ஏஜி.ஜாய் மாநிலதலைவர் & பயிற்சி இயக்குனர். நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம், காவல்துறை பிரிவு காவலர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சோமசுந்தரம் D.S.P., திரு ராமச்சந்திரன் D.S.P., ஆய்வாளர்கள்.. திருமதி. உமா பிரியதர்ஷினி ஊத்தங்கரை .மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், இருபால் ஆசிரியர்கள் என கலந்து கொண்டதில் தமிழ்த்தாய் வாழ்த்து துவக்கத்துடன், அமலாக்க பணியகத்தின்D.I.G., துணைத் தலைவர் திருமூர்த்தி அவர்கள் பேசும் பொழுது கள்ளச்சாராயம் வெறுப்புக்குரியது கடும் சட்டத்திற்கு ஆளாக கூடிய அவமானத்திற்குரிய செயலாகும். நம் முன்மாதிரியாக சட்டத்தை மதித்து நமது சுற்றமும், நமது ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் குடும்பத்தை மேம்படுத்தக்கூடிய தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் சட்டத்தை குறித்தும் பேசினார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி S.P காவல் கண்காணிப்பாளர் திருமதி அனிதா. பேசுகையில் கள்ளச்சாராயத்தால் ஏற்படக்கூடிய இழப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். சட்ட- ஒழங்கு பேணிக்காப்பதில் ஒவ்வொருவருக்கும் கடமை போன்ற பல கருத்துக்களை பேசினார். இதனைத் தொடர்ந்து திரு. ஏஜி. ஜாய் பேசுகையில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பழக்கம் நோய்க்குரியது...பொருளாதார இழப்பு, குடும்ப முன்னேற்ற தடை, சமுதாய சீர்கேடு, அவமானம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெருமை- 4000 ஆண்டுகள் இரும்பு வணிக ஆதாரம் கலாச்சாரம் கொண்ட மக்கள் இதுபோன்ற செயல்கள் செயல்படுவது அவமானத்திற்குரியது மற்றும் கள்ளச்சாராயினத்தினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் பேசினார். மேலும் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பேச்சுப்போட்டி ஓசூர், ஊத்தங்கரை, சூளகிரி, கிருஷ்ணகிரி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலைநிகழ்ச்சிகுழு விழிப்புணர்வுடன் நாடகங்களும், நடைபெற்று நாட்டுப்பண்ணுடன் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. Awareness Seminar and Cultural Programme on the Prevention of Illicit Liquor Held at Kanagamudlu Government Higher Secondary School, Krishnagiri An awareness seminar on the Tamil Nadu Prohibition Act, 1937 and the Prohibition Amendment Act, 2024 was conducted at the campus of Kanagamudlu Government Higher Secondary School, Krishnagiri Taluk, Krishnagiri District. The programme was held in the presence of Mr. Eeswaran, Headmaster of the Government Higher Secondary School. The distinguished participants included Mr. Moorthy, IPS, Deputy Inspector General (DIG) and Deputy Director, Enforcement Bureau, Chennai, Tamil Nadu Police Crime Branch; Mrs. Anitha, IPS, Superintendent of Police, Krishnagiri District; Mr. Eeswaran, Headmaster; and Mr. A.G. Joy, State President & Training Director, Consumer Awareness Welfare Association – Tamil Nadu. Police personnel from the Enforcement Bureau, Deputy Superintendents of Police including Mr. Somasundaram, DSP, and Mr. Ramachandran, DSP, Inspectors including Mrs. Uma Priyadarshini, Uthangarai, teachers, students and parents also participated in the programme. The programme commenced with Tamil Thai Vazhthu. Addressing the gathering, Mr. Moorthy, IPS, DIG and Deputy Director, Enforcement Bureau, stated that illicit liquor is a reprehensible and shameful activity that can attract stringent legal action. He emphasised the importance of respecting the law, setting a good example for others, bringing pride to one's family and community, and maintaining both personal discipline and social responsibility. He also explained the importance of understanding and obeying the law. Following this, Mrs. Anitha, IPS, Superintendent of Police, Krishnagiri District, spoke about the serious losses and dangers caused by illicit liquor. She stressed that every individual has a responsibility to respect the law and contribute to maintaining law and order in society. She also highlighted the need for public awareness and collective responsibility to prevent illicit liquor and related activities. Subsequently, Mr. A.G. Joy, State President & Training Director, Consumer Awareness Welfare Association – Tamil Nadu, addressed the gathering. He explained that illicit liquor and substance addiction can become a serious social and personal problem. He spoke about the resulting economic losses, obstacles to family development, social deterioration and loss of dignity. He further emphasised the historical pride of Krishnagiri District, which has a rich cultural heritage and historical evidence associated with iron production and trade dating back thousands of years. He stated that activities such as the manufacture, sale or consumption of illicit liquor are contrary to the dignity and heritage of the people of such a historically significant district. He also explained the various harmful consequences of illicit liquor and the importance of protecting young people and families from addiction. The programme was followed by several cultural and awareness activities, including awareness dramas, speeches and competitions. School students—both boys and girls—from Hosur, Uthangarai, Shoolagiri and Krishnagiri participated enthusiastically. Prizes were distributed to the students who secured winning positions in the competitions. The cultural team also presented awareness-oriented dramas and performances, conveying powerful messages about the dangers of illicit liquor and substance abuse. The awareness seminar and cultural programme concluded with the National Anthem, reinforcing the message of law-abiding citizenship, social responsibility, family welfare and the collective commitment to creating a drug-free and illicit-liquor-free society.
*கள்ளச்சாராய தடுப்பு சட்டவிழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி கிருஷ்ணகிரி, கனக முட்டலு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது*. மதுவிலக்கு சட்டம்- 1937 மற்றும் மதுவிலக்கு திருத்த சட்டம்- 2024 விழிப்புணர்வு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம் கனகமுட்லு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஈஸ்வரன் முன்னிலையில், தமிழ்நாடு காவல்துறை குற்றப்புலனாய்வு துறை சென்னை அமலாக்கபணியகம் D.I.G-துணைத் தலைவர் திரு மூர்த்தி. I.P.S, கிருஷ்ணகிரி S P- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அனிதா I.P.S, தலைமை ஆசிரியர் திரு.ஈஸ்வரன் மற்றும் திரு.ஏஜி.ஜாய் மாநிலதலைவர் & பயிற்சி இயக்குனர். நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம், காவல்துறை பிரிவு காவலர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சோமசுந்தரம் D.S.P., திரு ராமச்சந்திரன் D.S.P., ஆய்வாளர்கள்.. திருமதி. உமா பிரியதர்ஷினி ஊத்தங்கரை .மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், இருபால் ஆசிரியர்கள் என கலந்து கொண்டதில் தமிழ்த்தாய் வாழ்த்து துவக்கத்துடன், அமலாக்க பணியகத்தின்D.I.G., துணைத் தலைவர் திருமூர்த்தி அவர்கள் பேசும் பொழுது கள்ளச்சாராயம் வெறுப்புக்குரியது கடும் சட்டத்திற்கு ஆளாக கூடிய அவமானத்திற்குரிய செயலாகும். நம் முன்மாதிரியாக சட்டத்தை மதித்து நமது சுற்றமும், நமது ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் குடும்பத்தை மேம்படுத்தக்கூடிய தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் சட்டத்தை குறித்தும் பேசினார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி S.P காவல் கண்காணிப்பாளர் திருமதி அனிதா. பேசுகையில் கள்ளச்சாராயத்தால் ஏற்படக்கூடிய இழப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். சட்ட- ஒழங்கு பேணிக்காப்பதில் ஒவ்வொருவருக்கும் கடமை போன்ற பல கருத்துக்களை பேசினார். இதனைத் தொடர்ந்து திரு. ஏஜி. ஜாய் பேசுகையில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பழக்கம் நோய்க்குரியது...பொருளாதார இழப்பு, குடும்ப முன்னேற்ற தடை, சமுதாய சீர்கேடு, அவமானம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெருமை- 4000 ஆண்டுகள் இரும்பு வணிக ஆதாரம் கலாச்சாரம் கொண்ட மக்கள் இதுபோன்ற செயல்கள் செயல்படுவது அவமானத்திற்குரியது மற்றும் கள்ளச்சாராயினத்தினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் பேசினார். மேலும் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பேச்சுப்போட்டி ஓசூர், ஊத்தங்கரை, சூளகிரி, கிருஷ்ணகிரி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலைநிகழ்ச்சிகுழு விழிப்புணர்வுடன் நாடகங்களும், நடைபெற்று நாட்டுப்பண்ணுடன் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. Awareness Seminar and Cultural Programme on the Prevention of Illicit Liquor Held at Kanagamudlu Government Higher Secondary School, Krishnagiri An awareness seminar on the Tamil Nadu Prohibition Act, 1937 and the Prohibition Amendment Act, 2024 was conducted at the campus of Kanagamudlu Government Higher Secondary School, Krishnagiri Taluk, Krishnagiri District. The programme was held in the presence of Mr. Eeswaran, Headmaster of the Government Higher Secondary School. The distinguished participants included Mr. Moorthy, IPS, Deputy Inspector General (DIG) and Deputy Director, Enforcement Bureau, Chennai, Tamil Nadu Police Crime Branch; Mrs. Anitha, IPS, Superintendent of Police, Krishnagiri District; Mr. Eeswaran, Headmaster; and Mr. A.G. Joy, State President & Training Director, Consumer Awareness Welfare Association – Tamil Nadu. Police personnel from the Enforcement Bureau, Deputy Superintendents of Police including Mr. Somasundaram, DSP, and Mr. Ramachandran, DSP, Inspectors including Mrs. Uma Priyadarshini, Uthangarai, teachers, students and parents also participated in the programme. The programme commenced with Tamil Thai Vazhthu. Addressing the gathering, Mr. Moorthy, IPS, DIG and Deputy Director, Enforcement Bureau, stated that illicit liquor is a reprehensible and shameful activity that can attract stringent legal action. He emphasised the importance of respecting the law, setting a good example for others, bringing pride to one's family and community, and maintaining both personal discipline and social responsibility. He also explained the importance of understanding and obeying the law. Following this, Mrs. Anitha, IPS, Superintendent of Police, Krishnagiri District, spoke about the serious losses and dangers caused by illicit liquor. She stressed that every individual has a responsibility to respect the law and contribute to maintaining law and order in society. She also highlighted the need for public awareness and collective responsibility to prevent illicit liquor and related activities. Subsequently, Mr. A.G. Joy, State President & Training Director, Consumer Awareness Welfare Association – Tamil Nadu, addressed the gathering. He explained that illicit liquor and substance addiction can become a serious social and personal problem. He spoke about the resulting economic losses, obstacles to family development, social deterioration and loss of dignity. He further emphasised the historical pride of Krishnagiri District, which has a rich cultural heritage and historical evidence associated with iron production and trade dating back thousands of years. He stated that activities such as the manufacture, sale or consumption of illicit liquor are contrary to the dignity and heritage of the people of such a historically significant district. He also explained the various harmful consequences of illicit liquor and the importance of protecting young people and families from addiction. The programme was followed by several cultural and awareness activities, including awareness dramas, speeches and competitions. School students—both boys and girls—from Hosur, Uthangarai, Shoolagiri and Krishnagiri participated enthusiastically. Prizes were distributed to the students who secured winning positions in the competitions. The cultural team also presented awareness-oriented dramas and performances, conveying powerful messages about the dangers of illicit liquor and substance abuse. The awareness seminar and cultural programme concluded with the National Anthem, reinforcing the message of law-abiding citizenship, social responsibility, family welfare and the collective commitment to creating a drug-free and illicit-liquor-free society.
- காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.1
- மாரண்டஅள்ளி அருகே ஏரியில் கிராவல் மண் கடத்தல் – 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, பஞ்சப்பள்ளி, செவத்தம்பட்டு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் புவனமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, அதற்கு பதிலாக அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் அவற்றில் இருந்த 4 யூனிட் கிராவல் மண்ணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், லாரிகள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஞ்சப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் அருள் (36), தொட்டபடகாண்டஅள்ளியை சேர்ந்த ஓட்டுநர் முனியப்பன் (29), செவத்தம்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் அருண்குமார் (48), வீரமணி (53) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரிகளில் இருந்து தொடர்ந்து சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- பாலக்கோடு அருகே கெயில் குழாயிலிருந்து வெளியேறிய நச்சுநீர் – விவசாய நிலத்தில் கலந்ததால் பசுமாடு உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது ஆயில் கலந்த நச்சுநீர் விவசாய நிலத்தில் விடப்பட்டதால் நச்சு நீர் கலந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிற்கு கொச்சி முதல் பெங்களூரு வரை செல்லும் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமப் பகுதியில் கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது குழாயில் இருந்து வெளியேறிய ஆயில் கலந்த கழிவுநீர் அதிக அளவில் விவசாய நிலப்பகுதியில் விடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலும், அப்பகுதியில் வளர்ந்திருந்த புல் மற்றும் பயிர்களிலும் நச்சுத்தன்மை கலந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள், அந்த நிலத்தில் இருந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்துள்ளன. இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வாந்தி, சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்த நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாய நிலங்களிலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் பகுதிகளிலும் விடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மற்ற கால்நடைகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் ஆயில் கலந்த கழிவுநீரால் விவசாய நிலமும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.1
- லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்1
- மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.1
- காவேரிப்பட்டணம்கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்தவிஜயகாந்தின் பிறந்த நாள்விழா காவேரிப்பட்டணம் பனந்தோப்பு அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது1
- ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1