Shuru
Apke Nagar Ki App…
சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து காமராஜர் சிலை வரை சாலைவலம். பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.
Lakshmanan
சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து காமராஜர் சிலை வரை சாலைவலம். பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.
More news from தமிழ்நாடு and nearby areas
- பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.1
- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.1
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்1
- 🙏 சிறப்பு பொது சுகாதார பெருநகரம் பழனி4
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வள்ளியப்பா செட்டியார் ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 23 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த ஆன்மீக வழிபாட்டில் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் ஓத, வரிசையாக அமர்ந்து பெண்கள் தீபமேற்றி அர்ச்சனை செய்தனர்.சுமங்கலிப் பூஜையாகவும், ஊர் நலம் காக்கும் வழிபாடாகவும் கருதப்படும் இந்த பூஜையில், கோவில் வளாகம் முழுவதும் விளக்குகளின் ஒளியால் களைகட்டியதுடன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.1