பொதுமக்களுக்கும் பயன்படுத்தும் மனுசாலையின் கற்களை கொட்டியதால் பரபரப்பு. பொதுமக்கள் பயன்படுத்தும் மண் சாலையில் கற்களைக் கொட்டியதால் பரபரப்பு. சாலையில் நடந்து செல்ல முடியாமல் முதியவர்கள் அவதி. சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்பதாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தில்லை கவுண்டன் புதூர் கிராமத்தில் அனைத்து சமுதாய பொதுமக்களும் வகுத்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் பொது மக்களில் சுமார் என்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலங்காலமாக பயன்படுத்தி வரும் மண்பாதையை ஒரு சிலர் கற்களை கொண்டு அடைத்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அந்தச் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கற்கள் தடுக்கி கீழே விழும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருவாய் அலுவலரிடமும் , வருவாய் தாசில்தார் இடமும் மூலனூர் போலீசார் இடமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சாலையை தனிப்பட்ட இரண்டு நபர்கள் கற்களைக் கொட்டி அந்த வழியில் செல்ல முடியாத அளவிற்கு கற்களை குவித்து வைத்துள்ளனர் இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சுமார் 30க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடியை கையில் ஏந்தியவாறு வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் அரசு தரப்பில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகல்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கும் பயன்படுத்தும் மனுசாலையின் கற்களை கொட்டியதால் பரபரப்பு. பொதுமக்கள் பயன்படுத்தும் மண் சாலையில் கற்களைக் கொட்டியதால் பரபரப்பு. சாலையில் நடந்து செல்ல முடியாமல் முதியவர்கள் அவதி. சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்பதாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தில்லை கவுண்டன் புதூர் கிராமத்தில் அனைத்து சமுதாய பொதுமக்களும் வகுத்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் பொது மக்களில் சுமார் என்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலங்காலமாக பயன்படுத்தி வரும் மண்பாதையை ஒரு சிலர் கற்களை கொண்டு அடைத்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அந்தச் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கற்கள் தடுக்கி கீழே விழும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருவாய் அலுவலரிடமும் , வருவாய் தாசில்தார் இடமும் மூலனூர் போலீசார் இடமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சாலையை தனிப்பட்ட இரண்டு நபர்கள் கற்களைக் கொட்டி அந்த வழியில் செல்ல முடியாத அளவிற்கு கற்களை குவித்து வைத்துள்ளனர் இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சுமார் 30க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடியை கையில் ஏந்தியவாறு வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் அரசு தரப்பில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகல்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதியில், நூல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள சண்முகவேல் மில்லில் இருந்து, கருவராயன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் அங்கமுத்து, அசோக் லேலாண்டு லாரியில் எட்டு டன் நூல்களை ஏற்றி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை மில்லிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். தாராபுரம் வழியாக குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதிக்கு வந்தபோது, அதிக வெப்பத்தால் லாரியின் சைலன்சர் பகுதியில் இருந்து எழுந்த தீப்பொறி, மேலே ஏற்றியிருந்த நூல் மூட்டைகளின் மீது பட்டு, திடீரென தீப்பிடித்தது. சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை கவனித்து, லாரி ஓட்டுனர் அங்கமுத்துவிடம் தெரிவித்தனர். உடனே அவர் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாகப் பரவி, கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அங்கமுத்துவுக்கு கை, கால், முகம் போன்ற இடங்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், நூல் மூட்டைகள் அதிகமாக இருந்ததால் தீ நீண்ட நேரம் எரிந்தது. இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் புறவழிச் சாலை பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.1
- சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்2
- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்ற வருகிறது. கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் ஊராட்சி தாசிர் பட்டியில் ஊர் நுழைவாயில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெருக் குழாயில் தண்ணீர் என்பது ஒரு வருங்களாக பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை ஊராட்சி செயலாளர் ஜோனல் அவர்களிடம் கூறியும் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு சின்டெக்ஸ் தனியாக வைத்துக் கொடுத்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும் என ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்கள் கூறினார் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளவில்லை தற்போது வெயில் காலங்கள் தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் தண்ணீருக்காக பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது தமிழக அரசின் திமுக அரசு இது சம்பந்தமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்களும் ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று கூறுகின்றனர் என்று கூறுபவர்கள் யாருக்கு அந்த அசிங்கம் என்று தெரியவில்லையா உங்கள் கட்சிக்கு தானே அந்த அசிங்கம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத கட்சியாக உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என கூறி வருகின்றனர் ...1
- Post by அன்பரசு1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1