logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

7 hrs ago
user_ஸ்ரீதர் கரைமேடு7708698199
ஸ்ரீதர் கரைமேடு7708698199
Carpenter சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
7 hrs ago
211be577-e441-4b17-a2af-e40c2f5ed46f

More news from தமிழ்நாடு and nearby areas
  • விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ,தாலுக்கா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் பவானி தாய்-தந்தை இறந்துவிட்டதால் ஆதரவின்றி தவிக்கும் அண்ணன்-தங்கை அரசு உதவ கோரிக்கை வைத்தனர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் திப்பரசன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் விவசாய தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 17) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்வின் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பும், பவானி பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந் துவிட்டதால் அலமேலு கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து கவனித்து வந்தார். இந்தநிலையில் அலுமேலுவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அலுமேலுவுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது. பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை | அரசு மருத்துவ கல்லூரி மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அல மேலு பரிதாபமாக உயிரிழந்தார். தாய்-தந்தை இருவருமே உயிரிழந்துவிட்டதால் ஏழ்மை நிலையில் உள்ள அஸ்வின், பவானி ஆகியோர் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். உறவினர்களும் மும்பையில் இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தாய்-தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் அண்ணன்-தங்கைக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் திருவெண்ணெய்நல்லூரில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் இணைந்து ஒரு மாதத்திற்கான காய்கறி மளிகை பொருள் அரிசி எண்ணெய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காவல்துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு சென்று கொடுத்தனர் அப்போது இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் காவல்துறை சார்பில் நீங்கள் படிப்பதற்கான முழு செலவையும் திருமணத்திற்கான செலவையும் காவல்துறை சார்பில் எங்களால் முடிந்த உதவியை செய்ய நான் தயாராக உள்ளேன் என்று உறுதி அளித்தார்
    1
    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ,தாலுக்கா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் பவானி
தாய்-தந்தை இறந்துவிட்டதால்
ஆதரவின்றி தவிக்கும் அண்ணன்-தங்கை
அரசு உதவ கோரிக்கை வைத்தனர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் திப்பரசன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் விவசாய தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 17) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்வின் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பும், பவானி பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந் துவிட்டதால் அலமேலு கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து கவனித்து வந்தார்.
இந்தநிலையில் அலுமேலுவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அலுமேலுவுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது. பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை | அரசு மருத்துவ கல்லூரி மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அல மேலு பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய்-தந்தை இருவருமே உயிரிழந்துவிட்டதால் ஏழ்மை நிலையில் உள்ள அஸ்வின், பவானி ஆகியோர் படிப்பை தொடர முடியாமல் தவித்து
வருகின்றனர். உறவினர்களும் மும்பையில் இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தாய்-தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் அண்ணன்-தங்கைக்கு  அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர்  அழகிரி அவர்கள் திருவெண்ணெய்நல்லூரில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் இணைந்து ஒரு மாதத்திற்கான காய்கறி  மளிகை பொருள் அரிசி எண்ணெய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காவல்துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு சென்று கொடுத்தனர் அப்போது இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் காவல்துறை சார்பில் நீங்கள் படிப்பதற்கான முழு செலவையும் திருமணத்திற்கான செலவையும் காவல்துறை சார்பில் எங்களால் முடிந்த உதவியை செய்ய நான் தயாராக உள்ளேன் என்று உறுதி அளித்தார்
    user_செல்வம்
    செல்வம்
    திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by கலியபெருமாள்
    4
    Post by கலியபெருமாள்
    user_கலியபெருமாள்
    கலியபெருமாள்
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • 18.02.2026 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் திருக்குவளையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்... நாகை மாவட்டம் திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் மலர்வண்ணன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் உமா, முதன்மை மருத்துவ அலுவலர் சசிக்குமார் மற்றும் மருத்துவர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
    1
    18.02.2026
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
திருக்குவளையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்...
நாகை மாவட்டம் திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , நாகை  நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் மலர்வண்ணன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் உமா, முதன்மை மருத்துவ அலுவலர் சசிக்குமார் மற்றும் மருத்துவர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள்  கலந்துக்கொண்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு அப்துல் கலாம் நகரில் உள்ள, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை பள்ளிவாசலில், இன்று பிப்ரவரி ( 18) ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு இரவு தராவீஹ் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த கிளைத் தலைவர் பாரூக் சிறப்பு பயான் ஆற்றினார். இதில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
    1
    பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு அப்துல் கலாம் நகரில் உள்ள, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை பள்ளிவாசலில், இன்று பிப்ரவரி ( 18) ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக  சிறப்பு இரவு தராவீஹ் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த கிளைத் தலைவர் பாரூக்  சிறப்பு பயான் ஆற்றினார். இதில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
    user_Saleem cctv technician
    Saleem cctv technician
    Electrician பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா வேங்கூர் ஊராட்சி கிழமுறுக்கூர் பகுதியில் தார் சாலை மற்றும் பேருந்து நிழல்குடை அமைத்து தர வேண்டி
    1
    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா வேங்கூர் ஊராட்சி கிழமுறுக்கூர் பகுதியில் தார் சாலை மற்றும் பேருந்து 
நிழல்குடை அமைத்து தர வேண்டி
    user_ஏஞ்சல் கார்த்திகேயன்
    ஏஞ்சல் கார்த்திகேயன்
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காம் நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டு வாரங்களாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள ரூபாய் 57.7 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பைட்: 1 அனிதாலெட்சுமி பைட்: 2 ஸ்ரீனிவாசன்
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காம் நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டு வாரங்களாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள ரூபாய் 57.7 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பைட்: 1 அனிதாலெட்சுமி
பைட்: 2 ஸ்ரீனிவாசன்
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வட்ட செயலாளர் அழகுவேல் தலைமையில் சென்னையில் மாற்று திறனாளிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி காவல்துறையினர் எதிராக 35 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    1
    ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  வட்ட செயலாளர் அழகுவேல் தலைமையில்  சென்னையில் மாற்று திறனாளிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடந்து கொண்டதாக குற்றம்  சாட்டி காவல்துறையினர் எதிராக  35 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    1
    சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி  தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.