logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

chanakasava 💗💗💗💗💗💗💗🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

5 hrs ago
user_Chanakasava44
Chanakasava44
அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
5 hrs ago

chanakasava 💗💗💗💗💗💗💗🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

More news from தமிழ்நாடு and nearby areas
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் வி. முத்தையா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மேலாளர் ராமகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் குமரன், துணை வட்டாட்சியர் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ராம்ஜி, வட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேல், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று பெருமாள்நத்தம், கீழ்நிலவூர், மேல்நிலவூர், வில்வித்தி, கீழாத்துக்குழி மற்றும் மேலாத்துக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் வி. முத்தையா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மேலாளர் ராமகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் குமரன், துணை வட்டாட்சியர் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ராம்ஜி, வட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேல், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று பெருமாள்நத்தம், கீழ்நிலவூர், மேல்நிலவூர், வில்வித்தி, கீழாத்துக்குழி மற்றும் மேலாத்துக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சாலையோர முட்புதரில் தங்க நாணயங்கள் கிடப்பதாகப் பரவிய வதந்தியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்கள் மற்றும் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவியது. கட்டணாச்சம்பட்டி மயானம் அருகே உள்ள சாலையோர முட்புதர்ப் பகுதியில் தங்க நிறத்தில் சிறிய நாணயங்கள் சிதறிக் கிடப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் சம்பவ இடத்திற்குத் திரண்டு வந்து முட்புதருக்குள் இறங்கி நாணயங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு தேடிய சிலருக்கு தங்க நிறத்தில் சிறிய காயின்கள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தக் காயின்களைச் சோதித்துப் பார்த்தபோது, அவற்றின் தங்க நிறம் மங்கி வெளிர் நிறமாக மாறியது. இதன் மூலம் அவை உண்மையான தங்க நாணயங்கள் அல்ல என்பது உறுதியானது. பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் யாரோ போலி நாணயங்களை வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சாலையோர முட்புதரில் தங்க நாணயங்கள் கிடப்பதாகப் பரவிய வதந்தியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்கள் மற்றும் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவியது. கட்டணாச்சம்பட்டி மயானம் அருகே உள்ள சாலையோர முட்புதர்ப் பகுதியில் தங்க நிறத்தில் சிறிய நாணயங்கள் சிதறிக் கிடப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் சம்பவ இடத்திற்குத் திரண்டு வந்து முட்புதருக்குள் இறங்கி நாணயங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தேடிய சிலருக்கு தங்க நிறத்தில் சிறிய காயின்கள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தக் காயின்களைச் சோதித்துப் பார்த்தபோது, அவற்றின் தங்க நிறம் மங்கி வெளிர் நிறமாக மாறியது. இதன் மூலம் அவை உண்மையான தங்க நாணயங்கள் அல்ல என்பது உறுதியானது. பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் யாரோ போலி நாணயங்களை வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    46 min ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் வருகை புரிந்தார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, திருமயம் காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் அடர்ந்து காணப்பட்ட செடி கொடிகளை திருமயம் நெடுஞ்சாலைத் துறையினர் விறுவிறுப்பாக அகற்றினர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் வருகை புரிந்தார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, திருமயம் காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் அடர்ந்து காணப்பட்ட செடி கொடிகளை திருமயம் நெடுஞ்சாலைத் துறையினர் விறுவிறுப்பாக அகற்றினர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காவாய் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த காவாய் மற்றும் சாலையின் வழியே செல்ல முடியாததால், பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    2
    கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காவாய் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த காவாய் மற்றும் சாலையின் வழியே செல்ல முடியாததால், பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_Mohanraj
    Mohanraj
    ஆரணி, திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச்சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பீமன் மற்றும் மாவட்ட செயலாளர் கிரிண்லேன்ட் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட இணைச் செயலாளர் பாபு, நகரச் செயலாளர் அண்ணாமலை, தொகுதி தலைவர் நயாஸ் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேசிய தலைவர் விருகை கண்ணன், ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் தொகுதி பொருளாளர் கே.பி. செல்லன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், எலும்பு முறிவு, குழந்தை நல மருத்துவம், இருதய நல சிறப்பு மருத்துவம், உப்பு மற்றும் சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, அகில இந்திய தலைவர் விருகை கண்ணன் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இறுதியாக, ஒன்றிய செயலாளர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.
    1
    தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச்சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பீமன் மற்றும் மாவட்ட செயலாளர் கிரிண்லேன்ட் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட இணைச் செயலாளர் பாபு, நகரச் செயலாளர் அண்ணாமலை, தொகுதி தலைவர் நயாஸ் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேசிய தலைவர் விருகை கண்ணன், ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் தொகுதி பொருளாளர் கே.பி. செல்லன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் ரத்த அழுத்தம், எலும்பு முறிவு, குழந்தை நல மருத்துவம், இருதய நல சிறப்பு மருத்துவம், உப்பு மற்றும் சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, அகில இந்திய தலைவர் விருகை கண்ணன் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இறுதியாக, ஒன்றிய செயலாளர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக விளம்பர பதாகைகள் (பிளக்ஸ் போர்டுகள்) வைப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் நலச்சங்கம் மற்றும் அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மனுவை சமர்ப்பித்தனர். பிளக்ஸ் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக விளம்பர பதாகைகள் (பிளக்ஸ் போர்டுகள்) வைப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் நலச்சங்கம் மற்றும் அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மனுவை சமர்ப்பித்தனர். பிளக்ஸ் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. பள்ளி மாணவர்களின் ஆதார் திருத்தம், புதிய ஆதார் பதிவு மற்றும் விவரங்களைப் புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக பெற்றோர்கள் காலை 9 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து ஆதார் சேவைகளைப் பெற்ற பொதுமக்கள், அலைமோதும் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் ஆதார் மையத்தில் கூடுதல் வசதிகளையும், கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆதார் சேவை மையத்தில் ஏற்பட்ட இந்த மக்கள் கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. பள்ளி மாணவர்களின் ஆதார் திருத்தம், புதிய ஆதார் பதிவு மற்றும் விவரங்களைப் புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக பெற்றோர்கள் காலை 9 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்து ஆதார் சேவைகளைப் பெற்ற பொதுமக்கள், அலைமோதும் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் ஆதார் மையத்தில் கூடுதல் வசதிகளையும், கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆதார் சேவை மையத்தில் ஏற்பட்ட இந்த மக்கள் கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் பல்சர் இருசக்கர வாகனம் நள்ளிரவில் திருடப்பட்டது. வழக்கம் போல் தனது வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் மெய்ஞானமூர்த்தி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஓர் இளைஞர் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, பல்சர் வாகனத்தைத் திருடி தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் பகுதியில் அண்மைக் காலமாக இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரவு நேரக் காவல் ரோந்தினை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் பல்சர் இருசக்கர வாகனம் நள்ளிரவில் திருடப்பட்டது. வழக்கம் போல் தனது வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் மெய்ஞானமூர்த்தி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஓர் இளைஞர் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, பல்சர் வாகனத்தைத் திருடி தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராசிபுரம் பகுதியில் அண்மைக் காலமாக இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரவு நேரக் காவல் ரோந்தினை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மிதமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, அப்பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த மழையால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இந்த மிதமான மழை கனமழையாகப் பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மிதமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, அப்பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த மழையால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இந்த மிதமான மழை கனமழையாகப் பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.