logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் வி. முத்தையா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மேலாளர் ராமகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் குமரன், துணை வட்டாட்சியர் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ராம்ஜி, வட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேல், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று பெருமாள்நத்தம், கீழ்நிலவூர், மேல்நிலவூர், வில்வித்தி, கீழாத்துக்குழி மற்றும் மேலாத்துக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

5 hrs ago
user_M.P.Palani Samy
M.P.Palani Samy
கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
5 hrs ago

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் வி. முத்தையா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மேலாளர் ராமகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் குமரன், துணை வட்டாட்சியர் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ராம்ஜி, வட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேல், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று பெருமாள்நத்தம், கீழ்நிலவூர், மேல்நிலவூர், வில்வித்தி, கீழாத்துக்குழி மற்றும் மேலாத்துக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • chanakasava 💗💗💗💗💗💗💗🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    1
    chanakasava 💗💗💗💗💗💗💗🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    user_Chanakasava44
    Chanakasava44
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஓம் தர்மராஜன் சுவாமி - திரவுபதி அம்மன் கோயில் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே ஓம் தர்மராஜா, திரவுபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொலசனஅள்ளி, வேப்பிலஅள்ளி, நல்லாம்பட்டி ஆகிய மூன்று கிராம மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய இத்திருவிழாவில், பக்தர்கள் ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஓம் தர்மராஜன் சுவாமி - திரவுபதி அம்மன் கோயில் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே ஓம் தர்மராஜா, திரவுபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கொலசனஅள்ளி, வேப்பிலஅள்ளி, நல்லாம்பட்டி ஆகிய மூன்று கிராம மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய இத்திருவிழாவில், பக்தர்கள் ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    6 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகேயுள்ள மகராஜகடை அடுத்த பெலவர்த்தி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள காட்டூர், தின்னூர், நாகமரத்துப்பள்ளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், தங்களுக்கு சோலார் மின்வேலிகள் அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி அருகேயுள்ள மகராஜகடை அடுத்த பெலவர்த்தி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள காட்டூர், தின்னூர், நாகமரத்துப்பள்ளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், தங்களுக்கு சோலார் மின்வேலிகள் அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள கச்சேரி சாலையில் அமைந்துள்ள ஒரு மருந்தகத்தில் இன்று (15) ஒரு நூதன செல்போன் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருந்து வாங்குவது போல் கடைக்கு வந்த ஒரு நபர், அங்கிருந்த பெண்ணிடம், தனது உறவினர் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவசர அழைப்பு செய்ய வேண்டும் என்றும் கூறி செல்போன் கேட்டுள்ளார். அந்தப் பெண் கடையில் இருந்த செல்போனை கொடுத்தபோது, அந்நபர் பேசிவிட்டு தருவதாகக் கூறி அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், வாணியம்பாடி நகர போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள கச்சேரி சாலையில் அமைந்துள்ள ஒரு மருந்தகத்தில் இன்று (15) ஒரு நூதன செல்போன் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருந்து வாங்குவது போல் கடைக்கு வந்த ஒரு நபர், அங்கிருந்த பெண்ணிடம், தனது உறவினர் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவசர அழைப்பு செய்ய வேண்டும் என்றும் கூறி செல்போன் கேட்டுள்ளார்.

அந்தப் பெண் கடையில் இருந்த செல்போனை கொடுத்தபோது, அந்நபர் பேசிவிட்டு தருவதாகக் கூறி அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், வாணியம்பாடி நகர போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    1 hr ago
  • கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காவாய் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த காவாய் மற்றும் சாலையின் வழியே செல்ல முடியாததால், பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    2
    கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காவாய் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த காவாய் மற்றும் சாலையின் வழியே செல்ல முடியாததால், பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_Mohanraj
    Mohanraj
    ஆரணி, திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரப்பூரில் அமைந்துள்ள பெரியகாண்டி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரப்பூரில் அமைந்துள்ள பெரியகாண்டி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. பள்ளி மாணவர்களின் ஆதார் திருத்தம், புதிய ஆதார் பதிவு மற்றும் விவரங்களைப் புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக பெற்றோர்கள் காலை 9 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து ஆதார் சேவைகளைப் பெற்ற பொதுமக்கள், அலைமோதும் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் ஆதார் மையத்தில் கூடுதல் வசதிகளையும், கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆதார் சேவை மையத்தில் ஏற்பட்ட இந்த மக்கள் கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. பள்ளி மாணவர்களின் ஆதார் திருத்தம், புதிய ஆதார் பதிவு மற்றும் விவரங்களைப் புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக பெற்றோர்கள் காலை 9 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்து ஆதார் சேவைகளைப் பெற்ற பொதுமக்கள், அலைமோதும் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் ஆதார் மையத்தில் கூடுதல் வசதிகளையும், கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆதார் சேவை மையத்தில் ஏற்பட்ட இந்த மக்கள் கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகியும், ரேஷன்கடை, சுகாதார நிலையம், பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இங்கு வசிப்பவர்களுக்கு நிலம் மற்றும் வீடுகளுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களின் பிரதான தொழில்களாக ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லுதல் ஆகியவை உள்ளன, மேலும் இங்கு படிப்பறிவு குறைந்த மக்களே வாழ்கின்றனர். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளதால், மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். 9 ஆம் வகுப்பிற்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரண்டஅள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதனால் சில மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுகின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்வதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், உடல்நலம் சரியில்லாதபோது மருத்துவமனைக்கு செல்லவும் வாகன வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறும், குறிப்பாக பேருந்து வசதியை ஏற்படுத்தித் தருமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகியும், ரேஷன்கடை, சுகாதார நிலையம், பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இங்கு வசிப்பவர்களுக்கு நிலம் மற்றும் வீடுகளுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களின் பிரதான தொழில்களாக ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லுதல் ஆகியவை உள்ளன, மேலும் இங்கு படிப்பறிவு குறைந்த மக்களே வாழ்கின்றனர்.

இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளதால், மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். 9 ஆம் வகுப்பிற்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரண்டஅள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதனால் சில மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுகின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்வதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், உடல்நலம் சரியில்லாதபோது மருத்துவமனைக்கு செல்லவும் வாகன வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறும், குறிப்பாக பேருந்து வசதியை ஏற்படுத்தித் தருமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    12 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.