logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அஞ்சுகிராமம் அருகே வாலிபர் தற்கொலை! போலிசார் தீவிர விசாரணை கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த 26 வயதான பட்டதாரி இளைஞர் ஜினேஷ் மூர்த்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப்பைத் தொடருமாறு பெற்றோர் அறிவுறுத்தியிருந்த நிலையில், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hrs ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer விளவங்கோடு, கன்னியாகுமரி, தமிழ்நாடு•
2 hrs ago
bca5ee9f-56e0-40d1-8631-4c5a58042487

அஞ்சுகிராமம் அருகே வாலிபர் தற்கொலை! போலிசார் தீவிர விசாரணை கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த 26 வயதான பட்டதாரி இளைஞர் ஜினேஷ் மூர்த்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப்பைத் தொடருமாறு பெற்றோர் அறிவுறுத்தியிருந்த நிலையில், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிக்கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழி ஏற்றி செல்லும் வாகனங்களும் தயாரான நிலையில் தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு பின்பற்றுவதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக கோழிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிக்கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழி ஏற்றி செல்லும் வாகனங்களும் தயாரான நிலையில் தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு பின்பற்றுவதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக கோழிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது
    2
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது 
நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார் 
நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • கயத்தாறில் தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மூவிஸ் சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,வருகை புரிந்த அனைவரையும் மாநில துணைத் செயலாளர் சீனிவாச ராகவன்,வரவேற்புரையாற்றினார், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கயத்தாறு டு தேவர்குளம் சாலையை சீரமைக்க கோரியும், அய்யனார்ஊத்து கிராமத்தில் செயல் பட்டு வரும் கல்கோரியால் அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் அழிவும் பாதையில் உள்ளது.இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் அமையப்பட்டுள்ள கல்கோரியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்கோரியை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும்அதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், கடந்த 25 -26ஆண்டு பயிர் காப்பீடு திட்டம், வழங்க வேண்டும் எனவும்,முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காட்டுப்பன்றி அழிவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், இப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவேண்டுமமாவட்ட செயலாளர் மாரீஸ்வரன் மாவட்ட தலைவர் பெரியசாமி ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் நெல்லை மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    3
    கயத்தாறில் தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மூவிஸ் சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,வருகை புரிந்த அனைவரையும் மாநில துணைத் செயலாளர் சீனிவாச ராகவன்,வரவேற்புரையாற்றினார், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கயத்தாறு டு தேவர்குளம் சாலையை சீரமைக்க கோரியும், அய்யனார்ஊத்து கிராமத்தில்  செயல் பட்டு வரும் கல்கோரியால் அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் அழிவும் பாதையில் உள்ளது.இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் அமையப்பட்டுள்ள கல்கோரியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்கோரியை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும்அதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், கடந்த 25 -26ஆண்டு பயிர் காப்பீடு திட்டம்,  வழங்க வேண்டும் எனவும்,முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காட்டுப்பன்றி அழிவில்  இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், இப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவேண்டுமமாவட்ட செயலாளர் மாரீஸ்வரன் மாவட்ட தலைவர் பெரியசாமி ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் நெல்லை மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • அயோத்தி நன்கொடை விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; நடித்துக் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு! அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடை கணக்குகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்பொழுது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இவ்விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்களின் நன்கொடைப் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் அதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் திருட்டு முறைகேடுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடக பாணியில் நடித்துக் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். பக்தர்கள் செலுத்தும் நன்கொடை உண்மையில் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டமும், ராகுல் காந்தியின் விசித்திரமான போராட்ட வடிவமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    2
    அயோத்தி நன்கொடை விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; நடித்துக் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடை கணக்குகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்பொழுது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இவ்விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்களின் நன்கொடைப் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் அதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் திருட்டு முறைகேடுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடக பாணியில் நடித்துக் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
பக்தர்கள் செலுத்தும் நன்கொடை உண்மையில் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டமும், ராகுல் காந்தியின் விசித்திரமான போராட்ட வடிவமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    1
    பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
*விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த  விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...*
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்
    1
    ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் 
ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது 
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் 
இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • குற்றால மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் நிலையில் அருவியின் ஆண்கள் குளிக்கும் பகுதியில் வனப்பகுதியில் இருந்து அருவி நீரில் அடித்து வரப்பட்ட உடும்பு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அலறியடித்து சுற்றுலா பயணிகள் வெளியேறினர் உடனடியாக அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் அதனை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    1
    குற்றால மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் நிலையில் அருவியின் ஆண்கள் குளிக்கும் பகுதியில் வனப்பகுதியில் இருந்து அருவி நீரில் அடித்து வரப்பட்ட உடும்பு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அலறியடித்து சுற்றுலா பயணிகள் வெளியேறினர் உடனடியாக அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் அதனை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து  பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு  ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து 

பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு 



ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.