Shuru
Apke Nagar Ki App…
மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு மதுரை .. மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு நடைபெற்றது. சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம் மற்றும் பெத்தானியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டனர். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் விஜயராஜன், பொன்னுத்தாய், பொறுப்பு மேயர் நாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
N-KIPSRA
மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு மதுரை .. மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு நடைபெற்றது. சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம் மற்றும் பெத்தானியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டனர். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் விஜயராஜன், பொன்னுத்தாய், பொறுப்பு மேயர் நாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பத்மநாதன் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் இதில் போடி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பகுதியில் இருந்து , திருவள்ளுவர் சிலை, காவல் நிலையம், தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து தென்னந்தோப்பு சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்1
- Post by G.thangarasu1
- தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.1
- தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்1