Shuru
Apke Nagar Ki App…
ஜனவரி 09ல் கடலூர் மாவட்டம் பாசார் கிராமம் வேப்பூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O அமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து அவர்கள்...
N balu Nbalu
ஜனவரி 09ல் கடலூர் மாவட்டம் பாசார் கிராமம் வேப்பூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O அமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து அவர்கள்...
More news from Tuticorin and nearby areas
- தூத்துக்குடி வேதாந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை குழுமம் தலைவர் அணில் அகர்வார் மகன் அக்னி வேஷ் அகர்வால் அமெரிக்காவில் உயிர் இழப்பு பணிச்சறுக்கு விளையாட்டில் படுகாயம் அடைந்து நியூ யார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு1
- திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் ஐஏஎஸ் அறிவுறுத்தலின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு சேரன் மகாதேவியில் இன்று நடைபெறது. சேரை காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, மற்றும் நெய்னா முகமது ஸ்காட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை பேரூராட்சி பகுதியில் அண்ணா நகரைச் சார்ந்த திருமலைச்சாமி என்பவர் உடைய ஆட்டு கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் வனவிலங்கு புகுந்து மர்மமான முறையில் 30 ஆடுகளை சேதப்படுத்தி கொன்று உள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம் இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு வனத்துறை வீரியமாக செயல்பட வேண்டும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று வனத்துறையை எஸ்டிபிஐ கட்சி வடகரை நகரத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்1
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியதை கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள் அதுபோல ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய அநீதி வன்மையாக கண்டிக்கத்தக்கது விஜய் என்ற ஒரு தனி நபர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துவது வந்து மிகப்பெரிய அநீதி கமலஹாசன் அவர்களும் நான் ஏற்றுக்கொண்ட எனது தலைவர் ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுவரை இந்த தணிக்கை சான்றிதழ் விஷயமாகவோ ஜனநாயகம் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக பேசாமல் மௌனமாக இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.1
- மகனை படுகொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மனைவி ராஜா மணி தம்பதியருக்கு அஜித்குமார் (வயது 27) என்ற மகன் இருந்து வந்துள்ளார். அஜித் குமார் எந்த வேலைக்கும் போகாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகன் அஜித்குமாரை கயிற்றால் கழுத்தை இருக்கியதோடு அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான தந்தை அபிமன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், இரண்டாவது குற்றவாளியான தாய் ராஜாமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதித்ததோடு, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.1
- கன்னியாகுமரி மாவட்டம் திருப்பரப்பு அருகே களியல் ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளது முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஆற்றில் ஒரு கோழியை விட்டுள்ளனர்.1