logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏

16 hrs ago
user_J.MUTHU
J.MUTHU
Auto Rickshaw Driver மணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
16 hrs ago
5a304336-c73e-40b9-a6b9-a92f4eef4e8c

காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏

More news from தமிழ்நாடு and nearby areas
  • பொன்னமராவதி: புதிய பேருந்தை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்னமராவதி அருகே உள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் அப்போது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் அரசுக்கும், அமைச்சர் ரகுபதியிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அமைச்சர் ரகுபதி புதிய பேருந்து வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
    1
    பொன்னமராவதி: புதிய பேருந்தை தொடங்கி வைத்த அமைச்சர்
பொன்னமராவதி அருகே உள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் அப்போது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் அரசுக்கும், அமைச்சர் ரகுபதியிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அமைச்சர் ரகுபதி புதிய பேருந்து வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது அமைச்சர் பேச்சு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.
    1
    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது அமைச்சர் பேச்சு
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள் போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்
    1
    தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம்  சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய்  வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று  மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள்  போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • மாணவருடன் முன்னாள் அமைச்சர் கலந்துரையாடல் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மோளையானூரில் முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் தலைமையில் 'காபி வித் பிபி', என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளை சார்ந்த பொறுப்பாளர்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் பகிர்ந்து கொண்டு உரையாடினர். மேலும், இந்த நிகழ்வு சிறப்பாக அரங்கேறியதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்
    1
    மாணவருடன் முன்னாள் அமைச்சர் கலந்துரையாடல்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மோளையானூரில் முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் தலைமையில் 'காபி வித் பிபி', என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளை சார்ந்த பொறுப்பாளர்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் பகிர்ந்து கொண்டு உரையாடினர். மேலும், இந்த நிகழ்வு சிறப்பாக அரங்கேறியதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்லம்பட்டி மோப்பிரிப்பட்டி அச்சல்வாடி பெரியப்பட்டி மொரப்பூர் போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுக,தவெக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக நிர்வாகி விக்னேஷ் தலைமையில் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.புதியதாக இணைந்தவர்களுக்கு கழக துண்டினை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம்,பழனி, முருகன்,மருத்துவர் சந்திரமோகன்,ஐடி விங் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்லம்பட்டி மோப்பிரிப்பட்டி அச்சல்வாடி பெரியப்பட்டி மொரப்பூர் போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுக,தவெக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக நிர்வாகி விக்னேஷ் தலைமையில் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.புதியதாக இணைந்தவர்களுக்கு கழக துண்டினை அணிவித்து வரவேற்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம்,பழனி, முருகன்,மருத்துவர் சந்திரமோகன்,ஐடி விங் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    4 hrs ago
  • உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை... சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு... உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    1
    உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை...
சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு...
உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    12 hrs ago
  • பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை சென்னையில் ஜன.8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பொங்கல் தொகுப்பு உள்ளிட்டவற்றை அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை சென்னையில் ஜன.8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பொங்கல் தொகுப்பு உள்ளிட்டவற்றை அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் திமுகவில் இணைந்த தவெகவினர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தவெக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி தலைமையில் 37 நிர்வாகிகள் 300 உறுப்பினர்கள் சித்தரேவு ஊராட்சியில் இருந்து கொடைக்கானல் திமுக கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மூலமாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளரும் ஆத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் ஐ பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் வாழ்த்துக்களை தெராவித்தனர்
    1
    திண்டுக்கல் திமுகவில் இணைந்த தவெகவினர்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்  தவெக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி தலைமையில் 37 நிர்வாகிகள் 300 உறுப்பினர்கள் சித்தரேவு ஊராட்சியில் இருந்து  கொடைக்கானல் திமுக கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மூலமாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளரும் ஆத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் ஐ பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் வாழ்த்துக்களை தெராவித்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 94 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன்,திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான ஆர் நடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
    2
    கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 94 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன்,திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான ஆர் நடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.