Shuru
Apke Nagar Ki App…
மக்கள் வெள்ளத்தில் அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் கப்பல் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி பொதுமக்களிடம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். உடன் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Farmers joint Liability Group
மக்கள் வெள்ளத்தில் அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் கப்பல் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி பொதுமக்களிடம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். உடன் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆண்டிபட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை அவமானப்படுத்தியதாக டிஎஸ்பி மீது குற்றச்சாட்டு; பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் ஆசிர்வாதம் பேட்டி பகுஜன் சமாஜ் தேனி மாவட்ட தலைவர் ஆசிர்வாதம் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் இசக்கியம்மாள் என்பவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 4.4.2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பி ஃபார்ம் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். அதை வருகிற ஆறாம் தேதி தருகிறோம் என்று சொல்லிவிட்டு தாக்கல் செய்தோம் இன்று 6 4 26 இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மாவட்ட தலைவராகிய ஆசிர்வாதமாகிய நானும் வேட்பாளர் மு இசக்கியம்மாளும் பி ஃபார்ம் கொடுப்பதற்காக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் சென்றோம் . தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கிய பாதை வழியாக சென்றோம் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் இந்த வழி நீங்கள் வரக்கூடாது மாற்று வழி இருக்கிறது அந்த வழியில் வாருங்கள் என்று சொன்னாங்க நாங்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு மாற்று வழியில் சென்றோம் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் இந்த வலி வரக்கூடாது நீங்கள் அந்த வழியில் வாருங்கள் என்று சொன்னார்கள் அந்த வழியில் சென்றால் அவங்களும் வரக்கூடாது என்றாங்க இந்த வழி வந்தால் நீங்களும் வரக்கூடாது என்றிங்க நாங்க எந்த வழி தான் போறதுன்னு கேட்டோம். நீங்க என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் பி ஃபார்ம் கொண்டு வந்திருக்கிறோம். அதை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அதற்கு அங்கு இருந்த ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு, நீங்கள் மாலை மூன்று மணிக்கு மேல் வந்து பி ஃபார்ம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே தேனி மாவட்ட தலைவராகிய என்னையும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகிய மு . இசக்கியம்மாளையும் போங்கடா என்று கழுத்துப் பகுதியில் கை வைத்து அங்கு இருக்கும் பேரிக்காட்டில் தள்ளிவிட்டார். ஏன் சார் எங்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்டோம் அதற்கு அவர் எங்கள் (எஸ் பி) அதாவது (தேனி மாவட்ட எஸ்பி) இப்படித்தான் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறார் என்று சொன்னார். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை இதற்கு எஸ் பி ஆண்டிபட்டி டிஎஸ்பி சிவசுப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று (BSP) கட்சியின் மூலமாக வேண்டுகோள் விடுகிறோம். என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.3
- சுந்தரபுரி கிராமத்தில் பழமை வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த அருள்மிகு கருப்பு சுவாமி திருக்கோவில்🙏1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது. அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது. வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- Post by Rajalakshmi sivasangaran2
- பென்னாகரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பென்னாகரம். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது,வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜி கே எம் தமிழ்குமரன் அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும், இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி கே எம் தமிழ்குமரன் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு ( உதவி ஆணையர், ஆயம்) அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் கலைச்செல்வம்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், விசிக மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் ஐந்தாம் தமிழ் சங்கம் சார்பில் வேட்பாளர் ஜெய் விஷ்ணு தேவி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.1
- *பெண்களுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு* *திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் தொகை 2000 ஆகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 ரூபாய் கூப்பன் மூலம் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொள்ளாம என கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம்* போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சராகிய ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார் முதல் கட்டமாக போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட ஆதிபட்டி, பூதிபுரம், மஞ்சுநாயக்கன்பட்டி, வலையப்பட்டி, கோடாங்கி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்றனர் தொடர்ந்து பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி இருக்கிறார் பெண்களை முன்னிலைப்படுத்தி திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்கள், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார், அதுமட்டுமல்லாமல் குடும்பத்திற்கு 8000 ரூபாய் கூப்பன் அறிவித்துள்ளார்கள் அதன் மூலம் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கடந்த தேர்தலில் நான் எம்.எல்.ஏ வாக இருந்த போது உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் 100க்கு 99 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என்று தெரிவித்த அவர் உங்களது வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் செலுத்தி என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோளா விடுத்தார்1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சரளபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, காளியாபுரம் சோமநாதபுரம் பிரிவு, எட்டிதுரை, KPM காலனி மற்றும் நரிக்கல்பதி பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது!#BJP#ADMK#1
- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 6 முறை வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் 6வது முறையாக போட்டியிடும் அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன், தனதுவேட்பு மனுவை, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று அதிமுக சார்பில் 6-வது முறையாக கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். உடன் தருமபுரி பாஜக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் , பாமக கிருஷ்ணன், அமமுக தலைமை நிலைய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.1