மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வேட்பு மனு பென்னாகரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பென்னாகரம். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது,வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜி கே எம் தமிழ்குமரன் அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும், இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி கே எம் தமிழ்குமரன் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு ( உதவி ஆணையர், ஆயம்) அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் கலைச்செல்வம்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், விசிக மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வேட்பு மனு பென்னாகரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பென்னாகரம். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது,வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜி கே எம் தமிழ்குமரன் அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும், இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி கே எம் தமிழ்குமரன் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு ( உதவி ஆணையர், ஆயம்) அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் கலைச்செல்வம்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், விசிக மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தை அருள்தாஸ் அவர்களை மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் நேரில் சந்தித்து பொன்னடை அணிவித்து ஆசிப் பெற்றார்.மேலும் காங்கிரஸ் நகர தலைவர்லலித் ஆண்டனி,முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முபாரக்,திமுக நகர பொறுப்பாளர்கள் வேலுமணி,அஸ்லாம்,மருத்துவர் சுரேஷ்மற்றும் பலர் உடன் இருந்தன1
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்ந்துறை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர் பின்பு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை தங்களது கைகளாலே அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்1
- திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்த 29 ம் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது. அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது. வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சரளபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, காளியாபுரம் சோமநாதபுரம் பிரிவு, எட்டிதுரை, KPM காலனி மற்றும் நரிக்கல்பதி பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது!#BJP#ADMK#1
- திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆரியநல்லூர், பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்துநகர், மற்றும் பஞ்சம்பட்டி ஊராட்சி பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட , ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தருமபுரி சட்டமன்ற தேசியஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராக பாமகவின் பசுமை தாயக மாநில தலைவர் செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி முதல் நடந்து வருகிறது, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்திரியிடம் தனது வேப்புமனு தாக்கல் செய்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று கழக பொதுசெயலாளர் எடப்பாடியர் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி நல்லாட்சி அமையும் என தெரிவித்தார். வேட்பு மனு தாக்கலின் போது பாமக எம் எல் ஏ எஸ்.பி. வெங்கடேஷ்வரன், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, அமமுக மாநில நிர்வாகி பாலு பாஜக மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.1
- பர்கூர் சட்டமன்ற தொகுதியான இன்று காட்டுசிமனூர் சத்தலப்பள்ளி கொல்லப்பட்டி அச்சமங்கலம் கெட்டூர் பல்வேறு பகுதிகளில் பர்கூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் மதியழகன் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.திமுக வேட்பாளர் மதியழகனை சிறப்பான வரவேற்பு அளித்தனர்.மேலும் திரைப்பட நடிகர் போஸ் ,அவைத்தலைவர் நாகராஜ்,பர்கூர் ஒன்றியம்செயலாளர் காந்தி,திமுக சென்ற நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் (193) புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன் நேற்று (6.4.26) வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் பாரதிராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுதாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இரும்பொறை சேதுராமன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரட்டுபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது1