logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்த 29 ம் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

19 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
19 hrs ago

மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்த 29 ம் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்த 29 ம் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்த 29 ம் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் கப்பல் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி பொதுமக்களிடம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். உடன் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் கப்பல் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி பொதுமக்களிடம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். உடன் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் கரூர் மாவட்டம் குளித்தலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் இன்று குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
    1
    குளித்தலை தொகுதி  வேட்பாளர் சூரியனூர் சந்திரன்  பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் 
கரூர் மாவட்டம் குளித்தலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் இன்று குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    19 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் (193) புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன் நேற்று (6.4.26) வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் பாரதிராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுதாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இரும்பொறை சேதுராமன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரட்டுபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் (193) புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன் நேற்று  (6.4.26) வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் பாரதிராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுதாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இரும்பொறை சேதுராமன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரட்டுபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆரியநல்லூர், பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்துநகர், மற்றும் பஞ்சம்பட்டி ஊராட்சி பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட , ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், பிள்ளையார் நத்தம், 
பித்தளைப்பட்டி, 
வக்கம்பட்டி,
முன்னிலைக்கோட்டை,
ஆரியநல்லூர்,
பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளிலும்
ஆலமரத்துப்பட்டி  ஊராட்சியில் 
போக்குவரத்துநகர்,
மற்றும் பஞ்சம்பட்டி  ஊராட்சி பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன்
மாவட்ட , ஒன்றிய,  கிளை பொறுப்பாளர்கள்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக தேனி உழவர் சந்தை பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த த.வெ.க மகளிர் அணியினர்* *தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான், எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று விவசாயி தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த த.வெ.கவினர்* தேனி உழவர் சந்தையில் த.வெ.க மகளிர் அணியினர் சார்பில் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சபரி ஐங்கரனுக்கு ஆதரவாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிடம் துண்டு பிரசுரம் வழங்கி தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான் அதனால் எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று கூறியதால் த.வெ.கவினர் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து காய்கறி வாங்குவதற்கு வருகை தந்த வயதான பெண்மணியிடம் தளபதி விஜய்க்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்த நிலையில் தளபதி வந்து நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார் என கூறியதால் அதிர்ச்சியடைந்த கட்சியினர் அவர் மாதம் 2000 ரூபாய் தருகிறார், சிலிண்டர் தருகிறார் நல்லாட்சி தருவார் என கூறி தொடர்ந்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
    1
    *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக தேனி உழவர் சந்தை பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த த.வெ.க மகளிர் அணியினர்*
*தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான், எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று விவசாயி தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த த.வெ.கவினர்*
தேனி உழவர் சந்தையில் த.வெ.க மகளிர் அணியினர் சார்பில்  பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சபரி ஐங்கரனுக்கு ஆதரவாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் 
அப்போது உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிடம் துண்டு பிரசுரம் வழங்கி தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான் அதனால் எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று கூறியதால் த.வெ.கவினர் அதிர்ச்சி அடைந்தனர் 
தொடர்ந்து காய்கறி வாங்குவதற்கு வருகை தந்த வயதான பெண்மணியிடம் தளபதி விஜய்க்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்த நிலையில் தளபதி வந்து நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார் என கூறியதால் அதிர்ச்சியடைந்த கட்சியினர் அவர் மாதம் 2000 ரூபாய் தருகிறார், சிலிண்டர் தருகிறார் நல்லாட்சி தருவார் என கூறி தொடர்ந்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,  சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது.   அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது.  வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    1
    தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,  சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும்
சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது.  
அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது. 
வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தளபதி ஸ்டாலினின் வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனூரில் இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். கடந்த காலங்களில் நான் அளித்த வாக்குறுதிகள் மற்றும் மக்கள் வைத்த கோரிக்கைகளில் 100க்கு 99.9% நிறைவேற்றி உள்ளேன். அதிமுகவில் இருந்து நானாக வெளியேறவில்லை, அவர்கள் என்னை விரட்டினார்கள், பொதுக்குழுவில் என் மீது தண்ணீர் பாட்டில் வீசியது யாரென்று அனைவருக்கும் தெரியும். 50 ஆண்டுகால அரசியலில் 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 5 ஆண்டுகள் நகர்மன்ற தலைவர் என பொதுவாழ்வில் என்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளேன். என்மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை. மக்களின் ஆதரவு மற்றும் அபிமானத்துடன் தான் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும். இருக்க வேண்டும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு வந்த வழி தவறு. சசிகலாவால் முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி, சூரியனை பார்த்து ஏதோ குறைக்கிறது என்று கூறி நன்றி உணர்வு இல்லாத மனிதராக இருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் கிடையாது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஓபிஎஸ் பேட்டியில் தெரிவித்தார். பேட்டி : ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர்
    1
    தளபதி ஸ்டாலினின் வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனூரில் இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். 
தமிழ்நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.
கடந்த காலங்களில் நான் அளித்த வாக்குறுதிகள் மற்றும் மக்கள் வைத்த கோரிக்கைகளில் 100க்கு 99.9% நிறைவேற்றி உள்ளேன்.
அதிமுகவில் இருந்து நானாக வெளியேறவில்லை, அவர்கள் என்னை விரட்டினார்கள், பொதுக்குழுவில் என் மீது தண்ணீர் பாட்டில் வீசியது யாரென்று அனைவருக்கும் தெரியும். 
50 ஆண்டுகால அரசியலில் 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 5 ஆண்டுகள் நகர்மன்ற தலைவர் என பொதுவாழ்வில் என்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளேன். என்மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை.
மக்களின் ஆதரவு மற்றும் அபிமானத்துடன்  தான் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும். இருக்க வேண்டும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு வந்த வழி தவறு.
சசிகலாவால் முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி, சூரியனை பார்த்து ஏதோ குறைக்கிறது என்று கூறி நன்றி உணர்வு இல்லாத மனிதராக இருக்கிறார். 
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் கிடையாது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஓபிஎஸ் பேட்டியில் தெரிவித்தார்.
பேட்டி : ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.