logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆத்தூரில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் 20 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்பகனூர் ஊராட்சியை சேர்ந்த மாற்று கட்சி சேர்ந்த 20க்கும் மேற்பட்டோ ர் திமுக ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டனர் மேலும் திமுகவின் கொள்கைகள் சாதனைகளை பிடித்து வந்ததாகவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் கல்பகனூர் ஊராட்சியில் திமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்று தருவோம் என்றும் கூறினார்கள் அருகில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லம்மாள் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பத்திரம் மனோகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

on 22 March
user_Selva
Selva
ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
on 22 March
75bd5a25-69f4-46ca-a9a9-add9e389fd0b

ஆத்தூரில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் 20 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்பகனூர் ஊராட்சியை சேர்ந்த மாற்று கட்சி சேர்ந்த 20க்கும் மேற்பட்டோ ர் திமுக ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டனர் மேலும் திமுகவின் கொள்கைகள் சாதனைகளை பிடித்து வந்ததாகவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் கல்பகனூர் ஊராட்சியில் திமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்று தருவோம் என்றும் கூறினார்கள் அருகில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லம்மாள் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பத்திரம் மனோகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை புதூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் இருந்து அழகு குத்துதல் தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மங்கள மேளதாளங்கள் முழங்க வைபுதூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் வைபுதூர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை புதூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் இருந்து அழகு குத்துதல் தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மங்கள மேளதாளங்கள் முழங்க வைபுதூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் வைபுதூர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    7 hrs ago
  • கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியில் குடிநீர் பை உடைந்து போய்விட்டது பல மாதமாக குடிநீர் பைப்பை சரி பார்க்கவில்லை பலமுறை தகவல் கொடுத்தேன் சரி பார்க்கவில்லை
    6
    கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியில்
குடிநீர் பை உடைந்து போய்விட்டது பல மாதமாக குடிநீர் பைப்பை சரி பார்க்கவில்லை 
பலமுறை தகவல் கொடுத்தேன் சரி பார்க்கவில்லை
    user_ம ஜ க தாஜ்தின்
    ம ஜ க தாஜ்தின்
    Krishnarayapuram, Karur•
    12 hrs ago
  • செய்த திராவிட தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், எச்சனள்ளி கிராமத்தை சேர்ந்த திராவிட தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது சுவாரிசத்தை ஏற்படுத்தியது. இன்று மதியம் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் தர்மபுரி நகருக்கு வந்த ஆறுமுகம், கிருஷ்ணர் வேடத்தில் கையில் புல்லாங்குழல் ஏந்தியவாறு தேர்தல் அதிகாரி அலுவலகம் நோக்கி சென்றார். வழியெங்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்வையிட்டு கைஅசைத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி முன்னிலையில் தேவையான ஆவணங்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மனதை கவரும் விதமாகவும், நல்லாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வேடத்தில் வந்தேன். மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வருவதே எனது இலக்கு” என்று தெரிவித்தார். கிருஷ்ணர் வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த இந்த சம்பவம் தர்மபுரி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது
    1
    செய்த 
திராவிட தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் ஆறுமுகம் 
தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், எச்சனள்ளி கிராமத்தை சேர்ந்த திராவிட தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம்  கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது சுவாரிசத்தை ஏற்படுத்தியது.
இன்று மதியம்  தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் தர்மபுரி நகருக்கு வந்த ஆறுமுகம், கிருஷ்ணர் வேடத்தில் கையில் புல்லாங்குழல் ஏந்தியவாறு தேர்தல் அதிகாரி அலுவலகம் நோக்கி சென்றார். வழியெங்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்வையிட்டு கைஅசைத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி முன்னிலையில் தேவையான ஆவணங்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மனதை கவரும் விதமாகவும், நல்லாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வேடத்தில் வந்தேன். மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வருவதே எனது இலக்கு” என்று தெரிவித்தார்.
கிருஷ்ணர் வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த இந்த சம்பவம் தர்மபுரி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடியில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் பங்கேற்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக கூட்டம் தவெக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்‌ செல்வம் தலைமையில் நடைபெற்றது... இதில் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எடப்பாடியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது தமிழன் ஆ. பார்த்திபன் மற்றும் வேட்பாளர் அருண்குமாருக்கு மேளதாளங்களுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்... அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டு அதை வெற்றிவேலாக அனைத்து நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது... இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடியில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் பங்கேற்பு...
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் 
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக கூட்டம்  தவெக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்‌ செல்வம்  தலைமையில் நடைபெற்றது...
இதில் தவெக சேலம் மத்திய மாவட்ட  செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக   கலந்து கொண்டு  எடப்பாடியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது தமிழன் ஆ. பார்த்திபன் மற்றும் வேட்பாளர் அருண்குமாருக்கு மேளதாளங்களுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்...
அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டு அதை வெற்றிவேலாக அனைத்து நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது... இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    20 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது.
இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்   மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய்,
திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ்,
திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • பாலக்கோடு அருகே 75 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன் (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சொகுசுகார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது, தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    பாலக்கோடு அருகே 75  அடி ஆழமுள்ள  விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் 
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன்  (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை  பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, 
பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது 
சொகுசுகார்  திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது,
தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, 
சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன்  குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார்  கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர்.
சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.