5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு செவிலிமேடு சபரி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. _________ காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த சபரி (வயது 30) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாலுக்கா காவல் எல்லைக்குட்பட்ட பகுதி சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது காஞ்சிபுரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, கொலையில் தொடர்புடையதாக செவிலிமேடு பகுதியை சேர்ந்த முருகவேல், அன்பு என்கிற ஆதி, மணிபாரதி, ஜனகுமார் மற்றும் தனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, திருட்டு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகவேல் மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் ஒரு கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு இடம்பெற்றுள்ளது. அதேபோல் அன்பு என்கிற ஆதி மீது மொத்தம் 15 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள், 4 தாக்குதல் வழக்குகள், 3 கஞ்சா வழக்குகள் மற்றும் 5 திருட்டு வழக்குகள் அடங்கும். மணிபாரதி மீது 8 வழக்குகளும், ஜனகுமார் மீது 13 வழக்குகளும் , தனுஷ் மீது 2 வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கருதி, 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு செவிலிமேடு சபரி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. _________ காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த சபரி (வயது 30) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாலுக்கா காவல் எல்லைக்குட்பட்ட பகுதி சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது காஞ்சிபுரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, கொலையில் தொடர்புடையதாக செவிலிமேடு பகுதியை சேர்ந்த முருகவேல், அன்பு என்கிற ஆதி, மணிபாரதி, ஜனகுமார் மற்றும் தனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, திருட்டு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகவேல் மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் ஒரு கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு இடம்பெற்றுள்ளது. அதேபோல் அன்பு என்கிற ஆதி மீது மொத்தம் 15 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள், 4 தாக்குதல் வழக்குகள், 3 கஞ்சா வழக்குகள் மற்றும் 5 திருட்டு வழக்குகள் அடங்கும். மணிபாரதி மீது 8 வழக்குகளும், ஜனகுமார் மீது 13 வழக்குகளும் , தனுஷ் மீது 2 வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கருதி, 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பிரபாகர் மற்றும் செயலாளர் சீனிவாசனை சந்தித்தனர். இந்த முக்கிய சந்திப்பிற்குப் பிறகு தலைமைச் செயலகத்திலிருந்து அவர்கள் புறப்பட்டனர்.1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறுவள்ளூர் கைலாசநாதர் ஆலயத்தில் இன்று வைகாசி பிரதோஷ சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீபாராதனை கண்டுகளித்தனர்.1
- கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தின் 15 மாணவர்கள் ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டியில் 12 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இன்று கும்மிடிப்பூண்டி திரும்பியவர்களுக்கு மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன.1
- Post by Arun Kumar1
- தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பள்ளிக்கூடத்தின் அருகில் டாஸ்மாக் கடை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2020 முதல் செயல்பட்டு வரும் இந்த கடையை அகற்றக்கோரி நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.1
- தர்மபுரி மாவட்டம், புளுதியூரில் நடைபெற்ற வாராந்திர கால்நடைச் சந்தையில் ஒரே நாளில் ₹46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையாயின. இதில் மாடுகள் ₹16 லட்சத்திற்கும், ஆடுகள் ₹30 லட்சத்திற்கும் வர்த்தகம் செய்யப்பட்டன.1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள பழமையான திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா மற்றும் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் துரியோதனன் படுகளம் சடங்குடன், காப்புக் கட்டிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வர, சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.1
- தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில், காலநிலை மாற்றத்தால் உருவாகும் எல்நினோ விளைவுகளை எதிர்கொள்வது குறித்து ஆட்சியர் சதீஷ் ஆலோசனை நடத்தினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.1
- மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்க சதி நடப்பதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சதி குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.1