தமிழகத்தில் மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை புதுக்கோட்டை* மாநகராட்சி 6வது வார்டில் எம்எல்ஏ நிதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது இதில் எம்எல்ஏ முத்துராஜா மேயர் திலகவதி துணை மேயர் லியாகத் அலி மாநகரச் செயலாளர் ராஜேஷ் மற்றும் கவுன்சிலர் சத்யா மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர் *கடலூர்* சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் ஓட்டுநரின் முகத்தில் ஸ்பிரே அடித்து ரூ.5.23 லட்சம் மதிப்பிலான 60 ஆடுகளை திருடிச் சென்ற கும்பலுக்கு போலீஸ் வலை. ஆடுகளை வாங்கிக் கொள்வதாக வரச்சொல்லி நூதன திருட்டில் ஈடுபட்டதாக ஆடுகளின் உரிமையாளர் சுடலைக்கனி புகார். முன்பணம் செலுத்தியதால் ஓட்டுநரிடம் ஆடுகளை கொடுத்தனுப்பியதாக விளக்கம். *சென்னையில்* பிறந்து 2 நாள் ஆன பிஞ்சுக் குழந்தை விற்பனை. வில்லிவாக்கத்தில் வறுமையின் காரணமாக பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ததாக குழந்தையின் தாய் பவித்ரா வாக்குமூலம். குழந்தையின் தாய், இடைத்தரகர்கள் தனம், ஆண்டாள், தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு *நெல்லை*: சர்க்கரை, உளுந்து, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை ஏற்றத்தால் டீக்கடையில் விற்கும் பொருட்களின் விலை உயர்வு. வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதை தவிர்ப்பதாக டீக்கடை வியாபாரிகள் வேதனை. சட்டசபையில் விலை உயர்வு குறித்து யாரும் பேசுவதில்லை என வியாபாரிகள் வேதனை *திண்டுக்கல் மாவட்டம்* ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெயில்அடிச்சான் பட்டி அருகே உள்ள சுமார் 125 ஏக்கர் உள்ள பொதுப்பணித்துறை குளத்தில் வண்டல் மண் அள்ளுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஐந்துக்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி கரிசல் மண் மற்றும் கிராவல் மண் அள்ளிச் செல்லும் மண் கொள்ளையர்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆதரவோடு மண்ணை அள்ளிச் செல்வதாக மண் கொள்ளையர்கள் கூறுகின்றனர் *புதுக்கோட்டை* விராலிமலையில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 10க்கும் மேற்பட்டோரை கடித்த தெருநாய். நாய்க்கடி சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதையடுத்து, நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை *சென்னை* மதுரவாயல் ஓம் சக்தி நகர் சுடுகாட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும் பெண் ரவுடி தாரணி ஆகியோர் கைது. கைதான பெண் ரவுடி தாரணியிடம் இருந்து 1,020 போதை மாத்திரைகள் பறிமுதல். தாரணி மீது ஏற்கனவே கொலை முயற்சி,போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன *திண்டுக்கல்லில்* மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் தற்செயல் விடுப்பு போராட்டம் அலுவலர்கள் இல்லாததால் பணிகள் முடங்கி வெறிச்சோடி காணப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம். *காஞ்சிபுரத்தில்* இருந்து 6 பேர் நேபாளம் பயணம் மீட்க கோரி மனு. சந்திரன், அருட்செல்வன், லதா பானுமதி, மீனாட்சி, சரஸ்வதி, கோபால் ஆகிய ஆறு நபர்கள் காஞ்சிபுரத்திலிருந்து நேபாளத்திற்கு பயணம் சென்றவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். *புதுக்கோட்டை மாவட்டம்* பொன்னமராவதி புதுப்பட்டி சேங்கை ஊரணியில் மூழ்கி சொக்கலிங்கம் என்பவர் பலி. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
தமிழகத்தில் மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை புதுக்கோட்டை* மாநகராட்சி 6வது வார்டில் எம்எல்ஏ நிதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது இதில் எம்எல்ஏ முத்துராஜா மேயர் திலகவதி துணை மேயர் லியாகத் அலி மாநகரச் செயலாளர் ராஜேஷ் மற்றும் கவுன்சிலர் சத்யா மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர் *கடலூர்* சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் ஓட்டுநரின் முகத்தில் ஸ்பிரே அடித்து ரூ.5.23 லட்சம் மதிப்பிலான 60 ஆடுகளை திருடிச் சென்ற கும்பலுக்கு போலீஸ் வலை. ஆடுகளை வாங்கிக் கொள்வதாக வரச்சொல்லி நூதன திருட்டில் ஈடுபட்டதாக ஆடுகளின் உரிமையாளர் சுடலைக்கனி புகார். முன்பணம் செலுத்தியதால் ஓட்டுநரிடம் ஆடுகளை கொடுத்தனுப்பியதாக விளக்கம். *சென்னையில்* பிறந்து 2 நாள் ஆன பிஞ்சுக் குழந்தை விற்பனை. வில்லிவாக்கத்தில் வறுமையின் காரணமாக பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ததாக குழந்தையின் தாய் பவித்ரா வாக்குமூலம். குழந்தையின் தாய், இடைத்தரகர்கள் தனம், ஆண்டாள், தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு *நெல்லை*: சர்க்கரை, உளுந்து, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை ஏற்றத்தால் டீக்கடையில் விற்கும் பொருட்களின் விலை உயர்வு. வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதை தவிர்ப்பதாக டீக்கடை வியாபாரிகள் வேதனை. சட்டசபையில் விலை உயர்வு குறித்து யாரும் பேசுவதில்லை என வியாபாரிகள் வேதனை *திண்டுக்கல் மாவட்டம்* ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெயில்அடிச்சான் பட்டி அருகே உள்ள சுமார் 125 ஏக்கர் உள்ள பொதுப்பணித்துறை குளத்தில் வண்டல் மண் அள்ளுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஐந்துக்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி கரிசல் மண் மற்றும் கிராவல் மண் அள்ளிச் செல்லும் மண் கொள்ளையர்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆதரவோடு மண்ணை அள்ளிச் செல்வதாக மண் கொள்ளையர்கள் கூறுகின்றனர் *புதுக்கோட்டை* விராலிமலையில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 10க்கும் மேற்பட்டோரை கடித்த தெருநாய். நாய்க்கடி சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதையடுத்து, நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை *சென்னை* மதுரவாயல் ஓம் சக்தி நகர் சுடுகாட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும் பெண் ரவுடி தாரணி ஆகியோர் கைது. கைதான பெண் ரவுடி தாரணியிடம் இருந்து 1,020 போதை மாத்திரைகள் பறிமுதல். தாரணி மீது ஏற்கனவே கொலை முயற்சி,போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன *திண்டுக்கல்லில்* மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் தற்செயல் விடுப்பு போராட்டம் அலுவலர்கள் இல்லாததால் பணிகள் முடங்கி வெறிச்சோடி காணப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம். *காஞ்சிபுரத்தில்* இருந்து 6 பேர் நேபாளம் பயணம் மீட்க கோரி மனு. சந்திரன், அருட்செல்வன், லதா பானுமதி, மீனாட்சி, சரஸ்வதி, கோபால் ஆகிய ஆறு நபர்கள் காஞ்சிபுரத்திலிருந்து நேபாளத்திற்கு பயணம் சென்றவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். *புதுக்கோட்டை மாவட்டம்* பொன்னமராவதி புதுப்பட்டி சேங்கை ஊரணியில் மூழ்கி சொக்கலிங்கம் என்பவர் பலி. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன? போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.1
- முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.1
- திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.1
- மணப்பாறையில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ : கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.4