Shuru
Apke Nagar Ki App…
போளூரில் வழக்கறிஞர்கள் காவல்துறையை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வழக்கறிஞர் சங்கத்தை சார்ந்த அன்பரசன் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் தாக்கிய எதிரிகளில் இருவரை கைது செய்யாததை கண்டித்தும் போளூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் நீதிமன்றம் புறக்கணிப்பால் எந்தவித வழக்குகளும் நடைபெறவில்லை
ரஞ்சித் வெங்கடேசன்
போளூரில் வழக்கறிஞர்கள் காவல்துறையை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வழக்கறிஞர் சங்கத்தை சார்ந்த அன்பரசன் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் தாக்கிய எதிரிகளில் இருவரை கைது செய்யாததை கண்டித்தும் போளூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் நீதிமன்றம் புறக்கணிப்பால் எந்தவித வழக்குகளும் நடைபெறவில்லை
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.1
- மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.1
- சாராயத்துக்கு இவ்வளவு தண்ணியா2
- தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார் உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.1
- திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1