Shuru
Apke Nagar Ki App…
63KVA புதிய மின் மாற்றி திறப்புவிழா. கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, சத்ரபதி சிவாஜி நகரில் ரூ.6.5 லட்சம் மத்திப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 63KVA புதிய மின் மாற்றி திறப்புவிழா
FAYAZ
63KVA புதிய மின் மாற்றி திறப்புவிழா. கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, சத்ரபதி சிவாஜி நகரில் ரூ.6.5 லட்சம் மத்திப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 63KVA புதிய மின் மாற்றி திறப்புவிழா
More news from தமிழ்நாடு and nearby areas
- தடங்கம் பகுதியில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக உள்ளது. இதனை அடுத்து வழக்குகளுக்காக நீதிமன்றம் பொதுமக்களும் வழக்கறிஞர்கள் என அனைவரும் நீதிமன்ற வளாகத்தின் வெளியில் உள்ளனர் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- சமூக நலன் மகளீர் உரிமை துறை சார்பில் ரு, 5.19 கோடி மதிப்பில் தோழி பணிபுரியும் மகளீர் விடுதி கட்டிடம் திறப்பு தருமபுரி அருகே நல்லம்பள்ளியில் ரூபாய் 5.19 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய 'தோழி. மகளிர் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இதனை கானொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்துவைத்தார் இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் குத்து விளக்கேற்றி தோழி மகளீர் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்திரி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.கலாவதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர் நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.1
- *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.1
- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !! கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- தர்மபுரி அண்ணச்சாகரம் அங்காளம்மன் கோயிலில் மகாசிவராத்திரி மற்றும் மயானக்கொள்ளை விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மன் திருவீதி உலா நடந்தது. கோயில் வளாகத்தில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த விழாவையொட்டி பக்தர்கள் பழம், வளையல், குங்குமம், மஞ்சள், புடவை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்ட தாய்வீட்டார் சீர்வரிசையுடன் தட்டு வைத்து அழைப்பு நடந்தது. இதைதொடர்ந்து சுவாமிக்கும் அங்காளம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. இன்று 17ம் தேதி மயானகொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 22ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சடன் பிரேக் அடித்து நின்ற லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் இடுப்பாடுகளில் சிக்கி படுகாயம். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் லாரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாயில் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு __________ பெங்களூர் சென்னை மார்கமாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில், வேலூரில் இருந்து சென்னை மார்கமாக சென்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, "முன்னாள் சென்ற லாரி திடீரென சடன் பிரேக் போட்டு நின்ற காரணத்தினால்" அதன் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த இடுப்பாடுகளில் கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் சிக்கி கொண்டு உயிருக்கு க்கு போராடிக் கொண்டிந்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் இடுப்பாடுகளில் சிக்கியிருந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனரை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுனரின் கால் உடைந்து படு காயத்துடன் இருந்தவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கேட் அருகே சுமார் 30 நிமிடத்திற்க்கு மேல் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னால் சென்ற லாரி டிரைவரின் அஜாக்கிரதையினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பேட்ரோல் காவல்துறையினர் தெரிவித்தனர்.1