திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் கிராவல் மண் அள்ளப்படுவதாக திருச்சி மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படையினர் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொன்னுசங்கம்பட்டி ஆத்துவாரி பகுதியில் ஒரு டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி உதவியுடன் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தபோது இருவர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தாநத்தம் பகுதி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் கர்ணன் மற்றும் புத்தாநத்தம் சின்னு மகன் தங்கராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு ஜேசிபி ஆகிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் கிராவல் மண் அள்ளப்படுவதாக திருச்சி மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படையினர் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொன்னுசங்கம்பட்டி ஆத்துவாரி பகுதியில் ஒரு டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி உதவியுடன் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தபோது இருவர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தாநத்தம் பகுதி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் கர்ணன் மற்றும் புத்தாநத்தம் சின்னு மகன் தங்கராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு ஜேசிபி ஆகிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- திருச்சி மாவட்டம் தொட்டிய வட்டம் காட்டுபுதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்கள் விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த விற்பனையில் ஜிலேபி, நண்டு மற்றும் கடல் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனையாகின. காட்டுபுதூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அசைவப்பிரியர்கள் திரண்டு வந்து, தங்களுக்குத் தேவையான மீன்களை மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் காட்டுப்புத்தூர் பகுதியில் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.1
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.1
- கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே.வைரமுத்து மற்றும் திருமயம் தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் இன்று புதுக்கோட்டை மாவட்ட தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, புதுக்கோட்டையில் அமைச்சரைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பி.கே.வைரமுத்து மற்றும் தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா V. இடையப்பட்டி பஞ்சாயத்து கோவில்பட்டியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சுமார் 1000 பள்ளி குழந்தைகள் தினமும் பயன்படுத்தி வரும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பரவலாக மழை பெய்தவுடன், மழை நீர் வெளியேறிச் செல்ல வழி இல்லாத காரணத்தால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அவல நிலை குறித்து அறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.2