logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 hrs ago
user_Karur Wood's Tv
Karur Wood's Tv
Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
3 hrs ago

கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    user_க. சுந்தரேசன்
    க. சுந்தரேசன்
    தொட்டியம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் திருவிழா இன்றுடன் தொடங்குவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவையொட்டி, மூலவர் மதுரகாளியம்மன், விநாயகர், முருகன் மற்றும் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டன. இந்தத் திருவிழா பூஜையில் காட்டுப்புத்தூர், காந்திநகர், கணபதிபாளையம், சீதப்பட்டி மற்றும் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் திருவிழா இன்றுடன் தொடங்குவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவையொட்டி, மூலவர் மதுரகாளியம்மன், விநாயகர், முருகன் மற்றும் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டன.

இந்தத் திருவிழா பூஜையில் காட்டுப்புத்தூர், காந்திநகர், கணபதிபாளையம், சீதப்பட்டி மற்றும் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_Kumar kumar
    Kumar kumar
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    1
    திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    user_Mohanraj
    Mohanraj
    Home help Musiri, Tiruchirappalli•
    10 hrs ago
  • 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
    4
    'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
    1
    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
    user_Reporter Meganathan
    Reporter Meganathan
    Local News Reporter பவானி, ஈரோடு, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.