ஓரங்கட்டப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி? அதிமுகவில் அரங்கேறும் சினிமாவை மிஞ்சும் காட்சிகள் தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று (மே 11) நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக கூட்டம் நடத்தி வந்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், எம்எல்ஏ பதவியேற்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவினரும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவினரும் சபைக்கு வந்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் பேரவைச்செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல் உள்பட 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில் 36 பேர் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சட்டமன்ற அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்ய சிலர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 13-ம் தேதி தவெக தலைவர் விஜ தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், .திமுக யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலை அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓரங்கட்டப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி? அதிமுகவில் அரங்கேறும் சினிமாவை மிஞ்சும் காட்சிகள் தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று (மே 11) நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக கூட்டம் நடத்தி வந்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், எம்எல்ஏ பதவியேற்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவினரும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவினரும் சபைக்கு வந்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் பேரவைச்செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல் உள்பட 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில் 36 பேர் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சட்டமன்ற அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்ய சிலர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 13-ம் தேதி தவெக தலைவர் விஜ தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், .திமுக யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலை அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். போதிய இருக்கை வசதியின்றி, அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* *தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழத்தில் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் "தமிழ்நாடு சிஎம் 2026" என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இடுப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழம் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிஎம் என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1
- புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!1
- சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1