ஆண்டிப்பட்டி அருகே சூறாவளிக் காற்றுக்கு 3500 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்த கழுகு பார்வை காட்சிகள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக் காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காசி, தங்கவேல் மற்றும் சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் செவ்வாழை மற்றும் நாட்டு ரக வாழைகளை பயிரிட்டிருந்தனர். சுமார் 2 ஆயிரம் வாழை மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று இரவு வீசிய கடும் சூறாவளிக் காற்றினால் இந்த 2 ஆயிரம் வாழை மரங்களும் நிலைகுலைந்து அடியோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாகின. இதேபோல், ஆசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியஇருளன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சுமார் 1500 செவ்வாழை மரங்களும் சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. பல மாதங்களாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பலன் தரும் நேரத்தில் இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பல மாத உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. வாழை விவசாயத்திற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்திருந்தோம். அறுவடை செய்து கடனை அடைக்கலாம் என்று இருந்த வேளையில், சூறாவளி காற்று எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள எங்களுக்கு அரசு உடனடியாகப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே சூறாவளிக் காற்றுக்கு 3500 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்த கழுகு பார்வை காட்சிகள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக் காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காசி, தங்கவேல் மற்றும் சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் செவ்வாழை மற்றும் நாட்டு ரக வாழைகளை பயிரிட்டிருந்தனர். சுமார் 2 ஆயிரம் வாழை மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று இரவு வீசிய கடும் சூறாவளிக் காற்றினால் இந்த 2 ஆயிரம் வாழை மரங்களும் நிலைகுலைந்து அடியோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாகின. இதேபோல், ஆசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியஇருளன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சுமார் 1500 செவ்வாழை மரங்களும் சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. பல மாதங்களாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பலன் தரும் நேரத்தில் இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பல மாத உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. வாழை விவசாயத்திற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்திருந்தோம். அறுவடை செய்து கடனை அடைக்கலாம் என்று இருந்த வேளையில், சூறாவளி காற்று எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள எங்களுக்கு அரசு உடனடியாகப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது1
- போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்று காரணமாக முறிந்து விழுந்த வாழை மரங்கள். முந்தல் கிராமத்தில் நேற்று எதிர்பாராத விதமாக வீசிய சூறாவளி காற்று காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முரிந்து விழுந்து சேதம். திருவிழாவிற்கு போடப்பட்ட பந்தல் முற்றிலும் சரிந்து விழுந்து நிலையில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக முடிந்து விழுந்த மின் கம்பங்கள் மரங்கள் சரிந்து விழுந்ததால் வீடுகள் மேற்கூரைகள் சேதம். உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை* தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முந்தல் மலை கிராமம் மற்றும் மேலப் புரவு ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்கள் தமிழக கேரள எல்லை பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முந்தல் கிராமம். இப்பகுதியில் மாங்காய் வாழை தென்னை பாக்கு போன்ற பல்வேறு வர்த்தக பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் எதிர்பாராத விதமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மழை குறைவாக இருந்து நிலையிலும் சூறாவளிக்காற்று காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. இப்பகுதியில் வீசிய திடீர் சூறாவளி காற்று காரணமாக சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை மரங்களில் அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் 20 நாட்களில் விற்பனைக்கு அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்து உள்ளனர். மேலும் இப்பகுதியில் முந்தல் கிராமத்தில் திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தல் வீசிய சூறாவளி காற்று காரணமாக முழுவதுமாக சரிந்து விழுந்தது. அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் சாய்ந்து வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் சாய்ந்து கீழே விழுந்து உடைந்து நொறுங்கி நிலையில் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே கடுமையான கோடை வெயில் கொளுத்தி வந்து நிலையில் நேற்று மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிலையில் வீசியபலத்த சூறாவளி காற்று காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகள் பெருமிழப்பை சந்தித்த நிலையில் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.1
- பணம்Vsபாசம் !!! பணமும்/பாசமும் எதிர்பார்க்க வேண்டிய இடத்தில் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும் !!!1
- இன்று கொடைக்கானலில் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகம் மலர் கண்காட்சி சீசன்தொடக்கத்தின்ஆரம்பம் என்பதால்கூட்டமமும் அதிகமாக காணப்படுகிறது2
- சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனை சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மின்தடை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளான நிலையில் நோயாளிகளுடன் இருந்த உறவினர்கள் விசிறி போன்ற உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தனர் பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு ஜெனரேட்டர் வேலை செய்த நிலையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- Post by முத்துஇருளன்1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது7