Shuru
Apke Nagar Ki App…
தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம் நிகழ்வில் சிறப்பு திருப்பலி,தியானம் செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம் நடைபெற்றது.இந்நகழ்வு இராம்நகர் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் பனிமய மாதா திருத்தல அருள்பணி சுவக்கீன் கலந்து கொண்டு சிறப்புச் செய்தி கொடுத்தார்.இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடு, குணமளிக்கும் வழிபாடு, தவக்கால திருப்பலி ஆகியவை நடைபெற்றது.இத்தியானத்தில் திருத்தொண்டர் மிக்கேல் ராஜ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Devakottaigani news
தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம் நிகழ்வில் சிறப்பு திருப்பலி,தியானம் செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம் நடைபெற்றது.இந்நகழ்வு இராம்நகர் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் பனிமய மாதா திருத்தல அருள்பணி சுவக்கீன் கலந்து கொண்டு சிறப்புச் செய்தி கொடுத்தார்.இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடு, குணமளிக்கும் வழிபாடு, தவக்கால திருப்பலி ஆகியவை நடைபெற்றது.இத்தியானத்தில் திருத்தொண்டர் மிக்கேல் ராஜ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேவகோட்டை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி தனது தந்தைக்கு மிக சிறியலான பூரண கும்பம் வழங்கி அசத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாடியார் வீதியில் நகை பட்டறை தொழில் செய்து வரும் முருகானந்தம் என்பவர் மிக மிக குறைந்த அளவு கொண்ட தங்கத்தில் பொங்கல் பானை கரும்பு அடுப்பு கரண்டி உள்ளிட்ட வில் செய்து தனது மகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் அதேபோல் காரைக்குடி பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற தனது தந்தைக்கு சாந்தி கல்யாண விழாவில் மகன் முருகானந்தம் வெள்ளி பரிசு வழங்கினார் அதில் பானை,இலை,தேங்காய் உள்ளிட்ட இரண்டு சென்டி மீட்டர் உயரம்,3½ கிராம்,அளவு கொண்ட வெள்ளியில் மிக சிறிய அளவில் கும்பம் செய்து தாய்,தந்தையருக்கு வழங்கி தனது திறமையை பரிசாக வழங்கினார், பாண்டியன் சித்ரா தம்பதியினர் அதனைப் பெற்றுக் கொண்டு தனது மகனின் திறமையை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார். தனது திறமையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையை கண்டு பல்வேறு தரப்பினர் பாராட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- மானாமதுரை அருகே இளைஞர் ஆகாஷ் மரணத்துக்கு நீதி கோரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தும் சாலை மறியல் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டதால் மதுரை–ராமேஸ்வரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.1