Shuru
Apke Nagar Ki App…
கொடைரோடு அருகே சொத்து பிரச்சனையில் தாய் தந்தையை சரமாரியாக வெட்டிய மகன். திண்டுக்கல், கொடைரோடு அருகே, சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த பாண்டி (70) இவரது மனைவி மீனாட்சி (65) இவர்களிடம் இவர்களது மகன் சுருளி(45) நிலம் மற்றும் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஆத்திரமடைந்த சுருளி, தாய் தந்தை இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மையநாயக்கனூர் போலீசார் சுருளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
RAJA
கொடைரோடு அருகே சொத்து பிரச்சனையில் தாய் தந்தையை சரமாரியாக வெட்டிய மகன். திண்டுக்கல், கொடைரோடு அருகே, சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த பாண்டி (70) இவரது மனைவி மீனாட்சி (65) இவர்களிடம் இவர்களது மகன் சுருளி(45) நிலம் மற்றும் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஆத்திரமடைந்த சுருளி, தாய் தந்தை இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மையநாயக்கனூர் போலீசார் சுருளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- 🙏 சிறப்பு பொது சுகாதார பெருநகரம் பழனி4
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.1
- *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்து, மாலை அணிவித்து, பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு* *பெரியகுளம் தொகுதியில் மக்களின் பேராதரவு எங்களுக்கு உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என பேட்டி* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சபரி ஐங்கரன் இன்று பெரியகுளம் தொகுதியில் தனது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் தேவதானப்பட்டியில் இருந்து தேனி பங்களாமேடு வரை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் தேனி பங்களாமேடு பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் சபரி ஐயங்கரனுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசுகளை வெடித்து, மாலை அணிவித்தும் பெண்கள் ஆலத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர் பின்னர் பெரியகுளம் வேட்பாளர் சபரி ஐங்கரன் கூறுகையில் தொகுதியில் மக்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயமாக செய்து கொடுப்போம் இந்த முறை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது தான் எங்களது முதல் பணி பெரியகுளம் தொகுதியில் நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களின் பேராதரவு எங்கள் பக்கம் உள்ளது நாங்கள் தான் வெற்றி பெறுவோம் மக்கள் நல்லவர்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அதனால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வோம் என தெரிவித்தார்1
- பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Corp M4