திருவாடானை அருகே பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையம் திருவாடானை தாலுகா, பாண்டுகுடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட துணை சுகாதார நிலையம் திருவடிமிதியூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.இந்தத் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் யாரும் இல்லாமல் பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் திருவடிமிதியூர், தொத்தார்கோட்டை, கீழவண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, செவிலியர்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே வந்து செல்வதாகத் தெரிவிக்கின்றனர். சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டால் கூட பல கிலோமீட்டர் சென்று சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளதுஎனவே, கிராம மக்களின் நலன் கருதி, இந்தத் துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாகச் செவிலியரை நியமிக்க மாவட்ட மருத்துவத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவாடானை அருகே பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையம் திருவாடானை தாலுகா, பாண்டுகுடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட துணை சுகாதார நிலையம் திருவடிமிதியூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.இந்தத் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் யாரும் இல்லாமல் பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் திருவடிமிதியூர், தொத்தார்கோட்டை, கீழவண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, செவிலியர்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே வந்து செல்வதாகத் தெரிவிக்கின்றனர். சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டால் கூட பல கிலோமீட்டர் சென்று சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளதுஎனவே, கிராம மக்களின் நலன் கருதி, இந்தத் துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாகச் செவிலியரை நியமிக்க மாவட்ட மருத்துவத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருவாடானையில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் "கேப்டன்" விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.திருவாடானை ஒன்றியச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.1
- அம்பேத்கரை சாதித் தலைவர் என குறிப்பிட்ட பேரூராட்சித் தலைவர்? இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் சலசலப்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் (திமுக) தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் ராஜவேலு பேசுகையில், பேரூராட்சி கூட்டரங்கில் முதல்வர் விஜயின் புகைப்படம் அருகே அம்பேத்கரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் எனக் கூறி, அவரது புகைப்படத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கியதாகவும், இதுவரை புகைப்படம் வைக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன், “அம்பேத்கர் உங்களது சாதித் தலைவர் என்பதால் அவரது புகைப்படத்தை வைக்கக் கேட்கிறீர்களா?” என கூறி அம்பேத்கர் புகைப்படத்தை கூட்டரங்கில் வைக்க முடியாது என அவர் தெரிவித்ததார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் ராஜவேலு, “அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். அவரை எப்படி சாதித் தலைவர் என்று கூறலாம்?” என கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மற்றொரு கவுன்சிலர் ஜமிமா பேசுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் பேரூராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதல்வரின் புகைப்படம் வைக்கப்படாததற்கு, கட்சித் தலைவர் சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததே காரணம் என்றும், “அனைவரது மனதிலும் இருந்தால் மட்டும் போதும்” என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். தற்போதைய முதல்வரின் புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, அம்பேத்கர் புகைப்படத்தை பேரூராட்சி நிர்வாகம் வைக்கவில்லை என்றால், தங்களிடம் புகைப்படத்தை வழங்குமாறு சுயேச்சை கவுன்சிலர் ராஜவேலு வலியுறுத்தியதால் கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக பேசினார்.1
- மேலூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன் சிவன் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு! மேலூரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இன்று மாலை 4:00 பிரதோஷ வழிபாடு நடைபெற உள்ளது. பிரதோஷ வழிபாடுக்கு தேவையான தயிர்,பால் மற்றும் அபிஷேகப் பொருட்கள் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். பிரதோஷ வழிபாடு இன்று மாலை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை கோரி விண்ணப்பித்து தகுதி இருந்தும் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.1
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகும் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது : தங்கம் தென்னரசு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே விரிவாக விளக்கியிருந்தேன். சென்னை நகரின் புவியியல் அமைப்பிலேயே, வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பது புரியும். விமான நிலையம் அமைத்திட நாங்கள் நேரடியாக சென்று உடனடியாக பரந்தூரைத் தேர்வு செய்துவிடவில்லை. பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஒரு விமானநிலையத்தை அமைப்பதற்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணங்களினால் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்க இயலாது. வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. பழவேற்காடு ஏரி போன்ற இடங்கள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக கருதப்பட்டன. இதைத்தொடர்ந்து, தெற்குப் பகுதியில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அவை தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை. மேலும் தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாகவே மேற்குப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நேரிட்டது. அப்போது பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த இரு இடங்களுக்கும் இடையில் விரிவான ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பணிகள் துவங்கின. முன்னதாக, ஒரு இடத்தைத் தேர்வு செய்யும்போது தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள், பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்படும்போது அப்பகுதியில் வாழும் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்வு செய்யப்படும் இடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை கணக்கிட்டு உறுதிசெய்யவேண்டும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் நிலத்தின் விலை உள்ளிட்ட பொருளாதார காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. எனவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, இந்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக பரந்தூருக்கே ஒப்புதல் வழங்கியது. அதனால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தாண்டி தனிநபர் விருப்பத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை. இப்போது மாற்று இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய இடத்தை ஆய்வு செய்தாலும் இதே போன்ற சிக்கல்கள் எழும். அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும்; அங்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும். அதே மதிப்பீடுகளை மீண்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும். சிலர் தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அங்கு இரண்டாவது ஓடுபாதை அமைப்பது எப்படி சாத்தியமாகும். சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டால், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை பேரை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அங்கு ஏற்படும் சமூக மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் இதைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. ஏற்கனவே அப்பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக இருக்கும். ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடாகும்.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத்தான் நாங்கள் விளக்குகிறோம் எனக்கூறினார்.1
- திருவாடானை அருகே பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையம் திருவாடானை தாலுகா, பாண்டுகுடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட துணை சுகாதார நிலையம் திருவடிமிதியூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.இந்தத் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் யாரும் இல்லாமல் பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் திருவடிமிதியூர், தொத்தார்கோட்டை, கீழவண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, செவிலியர்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே வந்து செல்வதாகத் தெரிவிக்கின்றனர். சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டால் கூட பல கிலோமீட்டர் சென்று சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளதுஎனவே, கிராம மக்களின் நலன் கருதி, இந்தத் துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாகச் செவிலியரை நியமிக்க மாவட்ட மருத்துவத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1