logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் பழமையான வேம்பு, வாகை, பலா, அசோக உள்ளிட்ட மரங்கள் இருந்தன. இம்மரங்களின் நிழல் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருந்ததோடு, வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தையும் குறைத்தது. இந்நிலையில், நேற்று திடீரென அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டு, அவற்றை வெளியே அள்ளிச் செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சட்டவிரோதச் செயலை அறிந்த இந்து முன்னணி நகரத் தலைவர் சுரேஷ், வட்டாட்சியர் தங்கமணியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர், வெட்டப்பட்ட மரத்துண்டுகளை விற்பனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அனுமதியின்றி மரங்கள் வெட்டியது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், ஏற்கெனவே இதே மருத்துவமனை வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. தேவகோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டதாகக் கடுமையான புகார் எழுந்துள்ளது.

12 hrs ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
12 hrs ago
e9f74164-d79f-409c-877e-ea19555ccae3

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் பழமையான வேம்பு, வாகை, பலா, அசோக உள்ளிட்ட மரங்கள் இருந்தன. இம்மரங்களின் நிழல் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருந்ததோடு, வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தையும் குறைத்தது. இந்நிலையில், நேற்று திடீரென அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டு, அவற்றை வெளியே அள்ளிச் செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சட்டவிரோதச் செயலை அறிந்த இந்து முன்னணி நகரத் தலைவர் சுரேஷ், வட்டாட்சியர் தங்கமணியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர், வெட்டப்பட்ட மரத்துண்டுகளை விற்பனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அனுமதியின்றி மரங்கள் வெட்டியது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், ஏற்கெனவே இதே மருத்துவமனை வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. தேவகோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டதாகக் கடுமையான புகார் எழுந்துள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ராமசாமி என்ற நோயாளி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவருடன் வந்தவர் கொடுத்த மதுவை வார்டில் இருந்தபடியே அருந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பணியில் இருந்த மருத்துவர் இதனை அறிந்ததும் மது அருந்திய ராமசாமியையும், அவருடன் வந்தவரையும் எச்சரித்தார். இதற்கு அந்த நபர், தனக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்புவதாக ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து ராமசாமி மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்திலேயே அந்த நபர் பெண்கள் வார்டுக்கு அருகில் மது பாட்டில் மற்றும் மிக்சருடன் மீண்டும் மது அருந்தத் தொடங்கினார். இந்த தகவலறிந்து அங்கு வந்த மானாமதுரை போலீசார், மது பாட்டில் மற்றும் மிக்சருடன் இருந்த ராமசாமியை பிடித்து வழக்குப்பதிவு செய்வோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும், பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
    1
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ராமசாமி என்ற நோயாளி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவருடன் வந்தவர் கொடுத்த மதுவை வார்டில் இருந்தபடியே அருந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பணியில் இருந்த மருத்துவர் இதனை அறிந்ததும் மது அருந்திய ராமசாமியையும், அவருடன் வந்தவரையும் எச்சரித்தார். இதற்கு அந்த நபர், தனக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்புவதாக ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து ராமசாமி மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்திலேயே அந்த நபர் பெண்கள் வார்டுக்கு அருகில் மது பாட்டில் மற்றும் மிக்சருடன் மீண்டும் மது அருந்தத் தொடங்கினார். இந்த தகவலறிந்து அங்கு வந்த மானாமதுரை போலீசார், மது பாட்டில் மற்றும் மிக்சருடன் இருந்த ராமசாமியை பிடித்து வழக்குப்பதிவு செய்வோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும், பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • நமது பகுதியில், கடல் இறாலை விட நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை, நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கும் சாத்தியக்கூறுகளை இங்கு காட்டுகிறது.
    1
    நமது பகுதியில், கடல் இறாலை விட நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை, நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கும் சாத்தியக்கூறுகளை இங்கு காட்டுகிறது.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜிவ் நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பிரதோஷ விழா நடந்தேறியது. இதில், நத்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் உலா நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜிவ் நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பிரதோஷ விழா நடந்தேறியது. இதில், நத்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த வழிபாட்டைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் உலா நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 min ago
  • திருச்சி மாவட்டம் பிடாரபட்டியைச் சேர்ந்த ராகினி (26) தனது ஒரு வயது குழந்தை மற்றும் தங்கை கலைமதி ஆகியோருடன் மணப்பாறையிலிருந்து திரும்பி, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறி பிடாரபட்டிக்குச் சென்றுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் கூட்டத்துடன் ஏறியுள்ளனர். அப்போது, இவர்களுக்குப் பின்னால் நின்ற ஒரு மூதாட்டி, ராகினியின் ஒரு வயது மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாயத்தை கட்டிங் பிளேடு மூலம் அறுத்துள்ளார். இந்தச் செயலை பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராகினியின் தங்கை கலைமதி உடனடியாக கூச்சலிட, அருகிலிருந்த பொதுமக்கள் அந்த மூதாட்டியைப் பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி தஞ்சை கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி செல்வி (65) என்பதும், அவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகினி அளித்த புகாரின் பேரில் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 65 வயதான ஒரு மூதாட்டி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகைக்காக, நகையின் கயிற்றை அறுத்த மூதாட்டி, நகைக்காக எது வேண்டுமானாலும் செய்வார் என்ற பேச்சு பொதுமக்களிடையே நிலவியது. மேலும், அந்த மூதாட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் பிடாரபட்டியைச் சேர்ந்த ராகினி (26) தனது ஒரு வயது குழந்தை மற்றும் தங்கை கலைமதி ஆகியோருடன் மணப்பாறையிலிருந்து திரும்பி, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறி பிடாரபட்டிக்குச் சென்றுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் கூட்டத்துடன் ஏறியுள்ளனர். அப்போது, இவர்களுக்குப் பின்னால் நின்ற ஒரு மூதாட்டி, ராகினியின் ஒரு வயது மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாயத்தை கட்டிங் பிளேடு மூலம் அறுத்துள்ளார்.

இந்தச் செயலை பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராகினியின் தங்கை கலைமதி உடனடியாக கூச்சலிட, அருகிலிருந்த பொதுமக்கள் அந்த மூதாட்டியைப் பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி தஞ்சை கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி செல்வி (65) என்பதும், அவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகினி அளித்த புகாரின் பேரில் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 65 வயதான ஒரு மூதாட்டி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகைக்காக, நகையின் கயிற்றை அறுத்த மூதாட்டி, நகைக்காக எது வேண்டுமானாலும் செய்வார் என்ற பேச்சு பொதுமக்களிடையே நிலவியது. மேலும், அந்த மூதாட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழக வெற்றிக்கழகத்தின் திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் புதிதாகப் பொறுப்பேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக்கழகத்தின் மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகானந்தம் உட்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மாவட்ட வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய கருத்துக்களையும் எடுத்துரைத்தனர். மேலும், புதிய மாவட்ட ஆட்சியருக்கு, மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் மற்றும் ஒன்றியச் செயலாளர் முருகானந்தம் தலைமையிலான நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்துகளும் பொன்னாடைகளும் அணிவிக்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
    1
    தமிழக வெற்றிக்கழகத்தின் திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் புதிதாகப் பொறுப்பேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக்கழகத்தின் மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகானந்தம் உட்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மாவட்ட வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய கருத்துக்களையும் எடுத்துரைத்தனர். மேலும், புதிய மாவட்ட ஆட்சியருக்கு, மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் மற்றும் ஒன்றியச் செயலாளர் முருகானந்தம் தலைமையிலான நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்துகளும் பொன்னாடைகளும் அணிவிக்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தமிழக அரசு தொடங்கியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்திருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டது. அப்போது, அங்கு வந்திருந்த பக்தர்களிடம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் தங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஏதேனும் இடையூறுகள் அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டால், சிங்கப்பெண் படையினருக்கு தகவல் அளித்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கே வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு காவல் நிலையம் சென்று தீர்வு காணப்பட்டு வந்த நிலையில், இனி உங்கள் இடம் தேடி வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பெண் படையினர் உறுதி அளித்தனர். இந்தப் புதிய அதிரடிப்படையினருடன் பெண்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
    1
    தமிழக அரசு தொடங்கியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்திருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டது. அப்போது, அங்கு வந்திருந்த பக்தர்களிடம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் தங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஏதேனும் இடையூறுகள் அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டால், சிங்கப்பெண் படையினருக்கு தகவல் அளித்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கே வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு காவல் நிலையம் சென்று தீர்வு காணப்பட்டு வந்த நிலையில், இனி உங்கள் இடம் தேடி வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பெண் படையினர் உறுதி அளித்தனர். இந்தப் புதிய அதிரடிப்படையினருடன் பெண்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    14 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே அமைந்துள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம், விபத்துகள் ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் அவசரகால உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஊழியர்களுக்குக் கற்பிப்பதாகும். இந்த முகாம் புராஜெக்ட் மேலாளர் செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே அமைந்துள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம், விபத்துகள் ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் அவசரகால உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஊழியர்களுக்குக் கற்பிப்பதாகும். இந்த முகாம் புராஜெக்ட் மேலாளர் செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில், முதன்மைக் காவலர் அழகர் ₹500 லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் காரில் இருந்த வெளிமாநில மதுபான பாட்டிலைப் பறிமுதல் செய்த காவலர் அழகர், ₹500 பேரம் பேசி லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, பறிமுதல் செய்த அதே மதுபான பாட்டிலை மீண்டும் பயணிகளிடமே திருப்பிக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். லஞ்சம் வாங்கிய காவலர் அழகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில், முதன்மைக் காவலர் அழகர் ₹500 லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் காரில் இருந்த வெளிமாநில மதுபான பாட்டிலைப் பறிமுதல் செய்த காவலர் அழகர், ₹500 பேரம் பேசி லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, பறிமுதல் செய்த அதே மதுபான பாட்டிலை மீண்டும் பயணிகளிடமே திருப்பிக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். லஞ்சம் வாங்கிய காவலர் அழகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.