logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 126வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. இரா. ரேவதி, பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் திரு. சங்கர், வட்டாட்சியர் திரு. யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

1 hr ago
user_Thanjavurnews
Thanjavurnews
Local News Reporter தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு•
1 hr ago
775a8fd4-8be1-4170-879c-9d3cc6db466d

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 126வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. இரா. ரேவதி, பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் திரு. சங்கர், வட்டாட்சியர் திரு. யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

More news from India and nearby areas
  • மும்பை-கோவா நெடுஞ்சாலையில் நேம்ளே பகுதியின் எரண்டவாக்வாடி அருகே இன்று பிற்பகல் சுமார் 2:15 மணியளவில் ஒரு பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில், ஒரு தார் கார் முற்றிலுமாக நொறுங்கியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே அல்லது சாவந்த்வாடி துணை மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கோவா பாம்ப்போலி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. கோவா சலிகான் கிரியில் இருந்து கண்காவலி பிரவண்டே நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜிஏ-03-ஏஎம்-8478 பதிவு எண் கொண்ட தார் கார், நேம்ளே நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், கார் சாலையை விட்டு வெளியேறி மோதியது. இந்த விபத்தில், 58 வயதான திருமதி. நானோட்கர் (கிரி, கோவா) மற்றும் 54 வயதான விலாசினி சடார்டேகர் (பிரவண்டே, கண்காவலி) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், சாவந்த்வாடி துணை மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். ஓட்டுநர் சன்னி நானோட்கர் (36, கிரி, கோவா), உஜ்வாலா காம்ப்ளி (48, கிரி, கோவா) மற்றும் பாண்டுரங் நானோட்கர் (65, கிரி, கோவா) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்கு துணை மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவா பாம்ப்போலிக்கு மாற்றப்பட்டனர். எனினும், கோவாவில் சிகிச்சை பெற்று வந்த பாண்டுரங் நானோட்கர் உயிரிழந்தார். சமூகக் கடமை அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துணை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிக்ஷகர் டாக்டர் சந்தீப் சாவந்த், டாக்டர் கிரிஷ் சௌகுலே, டாக்டர் நிகில் அவதூத், செவிலியர்கள் திருமதி. கோசாவி மற்றும் திருமதி. நாயக் உள்ளிட்டோர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் தலைமை கான்ஸ்டபிள்கள் ஹனுமந்த் தோத்ரே, மனோஜ் ராவத், பிரியா நாயக், நிலேஷ் நாயக் ஆகியோர் விரைந்தனர். சமூக ஆர்வலரும் சிவசேனா துணை மாவட்டத் தலைவருமான சேவியர் பெர்னாண்டஸ் மற்றும் நேம்ளே கிராம மக்களும் உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன், காயமடைந்தவர்கள் வாகனத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு, சாவந்த்வாடி துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சமூகக் கடமை அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் சதீஷ் பாக்வே, சைலேஷ் நாயக், ரவி ஜாதவ், லட்சுமண் கதம், ரூபா முத்ராலே மற்றும் நோயாளி நலக் குழு உறுப்பினர் தேவியா சூர்யாஜி ஆகியோர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினர். அதேவேளையில், நோயாளி நலக் குழு உறுப்பினர்களான திரு. சூர்யாஜி மற்றும் ரவி ஜாதவ் ஆகியோர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். போலீஸ் ஆய்வாளர் அமோல் சவாண் மருத்துவமனைக்கு நேரில் சென்று அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார். உயிரிழந்தவர்களுக்கு அடுத்தகட்ட சடங்குகள் நடைபெற்று வருகின்றன, மேலும் சாவந்த்வாடி போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    மும்பை-கோவா நெடுஞ்சாலையில் நேம்ளே பகுதியின் எரண்டவாக்வாடி அருகே இன்று பிற்பகல் சுமார் 2:15 மணியளவில் ஒரு பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில், ஒரு தார் கார் முற்றிலுமாக நொறுங்கியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே அல்லது சாவந்த்வாடி துணை மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கோவா பாம்ப்போலி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

கோவா சலிகான் கிரியில் இருந்து கண்காவலி பிரவண்டே நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜிஏ-03-ஏஎம்-8478 பதிவு எண் கொண்ட தார் கார், நேம்ளே நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், கார் சாலையை விட்டு வெளியேறி மோதியது. இந்த விபத்தில், 58 வயதான திருமதி. நானோட்கர் (கிரி, கோவா) மற்றும் 54 வயதான விலாசினி சடார்டேகர் (பிரவண்டே, கண்காவலி) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், சாவந்த்வாடி துணை மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். ஓட்டுநர் சன்னி நானோட்கர் (36, கிரி, கோவா), உஜ்வாலா காம்ப்ளி (48, கிரி, கோவா) மற்றும் பாண்டுரங் நானோட்கர் (65, கிரி, கோவா) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்கு துணை மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவா பாம்ப்போலிக்கு மாற்றப்பட்டனர். எனினும், கோவாவில் சிகிச்சை பெற்று வந்த பாண்டுரங் நானோட்கர் உயிரிழந்தார்.

சமூகக் கடமை அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துணை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிக்ஷகர் டாக்டர் சந்தீப் சாவந்த், டாக்டர் கிரிஷ் சௌகுலே, டாக்டர் நிகில் அவதூத், செவிலியர்கள் திருமதி. கோசாவி மற்றும் திருமதி. நாயக் உள்ளிட்டோர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் தலைமை கான்ஸ்டபிள்கள் ஹனுமந்த் தோத்ரே, மனோஜ் ராவத், பிரியா நாயக், நிலேஷ் நாயக் ஆகியோர் விரைந்தனர். சமூக ஆர்வலரும் சிவசேனா துணை மாவட்டத் தலைவருமான சேவியர் பெர்னாண்டஸ் மற்றும் நேம்ளே கிராம மக்களும் உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன், காயமடைந்தவர்கள் வாகனத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு, சாவந்த்வாடி துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சமூகக் கடமை அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் சதீஷ் பாக்வே, சைலேஷ் நாயக், ரவி ஜாதவ், லட்சுமண் கதம், ரூபா முத்ராலே மற்றும் நோயாளி நலக் குழு உறுப்பினர் தேவியா சூர்யாஜி ஆகியோர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினர். அதேவேளையில், நோயாளி நலக் குழு உறுப்பினர்களான திரு. சூர்யாஜி மற்றும் ரவி ஜாதவ் ஆகியோர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். போலீஸ் ஆய்வாளர் அமோல் சவாண் மருத்துவமனைக்கு நேரில் சென்று அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார். உயிரிழந்தவர்களுக்கு அடுத்தகட்ட சடங்குகள் நடைபெற்று வருகின்றன, மேலும் சாவந்த்வாடி போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    19 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே க.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை அடுத்த சீகம்பட்டி கிராமத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹30.08 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சீகம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை தார் சாலை அமைப்பதற்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் பழைய சாலை அகற்றப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலைப் பணியைத் தொடங்காமலும், அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமலும் இருந்துள்ளனர். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் க.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது. வருகின்ற 29 ஆம் தேதிக்குள் சாலைப் பணிகள் தொடங்கப்படாவிட்டால், மறுநாள் ஜேசிபி இயந்திரம் கொண்டு நாங்களாகவே ஜல்லிக்கற்களை அகற்றி விடுவோம் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகள் முன்னிலையில் கடுமையாக எச்சரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே க.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை அடுத்த சீகம்பட்டி கிராமத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹30.08 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சீகம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை தார் சாலை அமைப்பதற்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் பழைய சாலை அகற்றப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலைப் பணியைத் தொடங்காமலும், அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமலும் இருந்துள்ளனர்.

இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் க.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

வருகின்ற 29 ஆம் தேதிக்குள் சாலைப் பணிகள் தொடங்கப்படாவிட்டால், மறுநாள் ஜேசிபி இயந்திரம் கொண்டு நாங்களாகவே ஜல்லிக்கற்களை அகற்றி விடுவோம் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகள் முன்னிலையில் கடுமையாக எச்சரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    8 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே போடுவார்பட்டியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அதை அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. கடந்த சம்பா பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது போடுவார்பட்டியில் சுமார் 15,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ள நிலையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல்லை மூடி பாதுகாக்க போதிய தார்ப்பாய்கள் இல்லை என்றும், சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து நெல் கருகி வீணானது. அண்மையில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயியும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் பேசுகையில், நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும் அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது என்றும், ஆரம்ப காலத்தில் இருந்தே தார்ப்பாய் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் மூடப்படாமல் விடப்பட்டு பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்துவிட்டன என்றும் கூறினார். இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாகப் பிரித்து சீரமைத்து வருவதாகவும், தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தொடர் கோரிக்கையாகும்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே போடுவார்பட்டியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அதை அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. கடந்த சம்பா பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது போடுவார்பட்டியில் சுமார் 15,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ள நிலையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல்லை மூடி பாதுகாக்க போதிய தார்ப்பாய்கள் இல்லை என்றும், சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து நெல் கருகி வீணானது. அண்மையில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயியும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் பேசுகையில், நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும் அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது என்றும், ஆரம்ப காலத்தில் இருந்தே தார்ப்பாய் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் மூடப்படாமல் விடப்பட்டு பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்துவிட்டன என்றும் கூறினார்.

இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாகப் பிரித்து சீரமைத்து வருவதாகவும், தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தொடர் கோரிக்கையாகும்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பெரியார் நகர் பகுதியில், தீயணைப்பு நிலையம் எதிரில் அமைந்துள்ள வள்ளலார் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இலைகள், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் மற்றும் பாலிதீன் குப்பைகள் போன்ற பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அடைப்பின் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் வாய்க்காலை முறையாகப் பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பெரியார் நகர் பகுதியில், தீயணைப்பு நிலையம் எதிரில் அமைந்துள்ள வள்ளலார் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இலைகள், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் மற்றும் பாலிதீன் குப்பைகள் போன்ற பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அடைப்பின் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் வாய்க்காலை முறையாகப் பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Premkumar prem Prem
    Premkumar prem Prem
    Engineer விருத்தாசலம், கடலூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாடானை ஓரிக்கோட்டை ஊனமுற்றோர் பள்ளியில் சிறப்பான விருந்து ஒன்று நடைபெற்றது.
    1
    தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாடானை ஓரிக்கோட்டை ஊனமுற்றோர் பள்ளியில் சிறப்பான விருந்து ஒன்று நடைபெற்றது.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • திருவாடானையில் திங்கட்கிழமைகளில் வாரந்தோறும் ஒருமுறை நடைபெறும் வாரச்சந்தை இன்று செயல்படுகிறது. இந்தச் சந்தையில் அனைத்து வகையான காய்கறிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன.
    1
    திருவாடானையில் திங்கட்கிழமைகளில் வாரந்தோறும் ஒருமுறை நடைபெறும் வாரச்சந்தை இன்று செயல்படுகிறது. இந்தச் சந்தையில் அனைத்து வகையான காய்கறிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அத்துடன், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அத்துடன், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • நேற்று (ஜூன் 21, 2026) இரவு 8.30 மணியளவில், தொண்டி துணை மின் நிலைய ஊழியர்களான அஜித் மற்றும் அழகுமலை கண்ணன் இருவரும் மதுபோதையில் தொண்டி அரசு மருத்துவமனைக்கு அருகே ஜப்ரான் என்ற நபரிடம் தகாத வார்த்தைகளில் பேசி தாக்க முயன்றனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த தொண்டி காவல் ஆய்வாளர் கனகராஜ் விசாரித்தபோது, முழு மதுபோதையில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் காவல் ஆய்வாளரையும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்க முயற்சித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தொண்டி மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் சுமார் இரண்டு மணி நேரமாக வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டித்து, இடையூறு ஏற்படுத்தி அராஜகப் போக்கில் ஈடுபட்டனர். இந்தச் செயல் தொண்டி மக்கள் அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டி காவல் நிலையத்தில் ஒன்றுகூடி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். மதுபோதையில் ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரை தாக்க முயன்று அராஜகப் போக்கில் ஈடுபட்ட இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது என்றும் வலியுறுத்தப்பட்டது.
    1
    நேற்று (ஜூன் 21, 2026) இரவு 8.30 மணியளவில், தொண்டி துணை மின் நிலைய ஊழியர்களான அஜித் மற்றும் அழகுமலை கண்ணன் இருவரும் மதுபோதையில் தொண்டி அரசு மருத்துவமனைக்கு அருகே ஜப்ரான் என்ற நபரிடம் தகாத வார்த்தைகளில் பேசி தாக்க முயன்றனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த தொண்டி காவல் ஆய்வாளர் கனகராஜ் விசாரித்தபோது, முழு மதுபோதையில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் காவல் ஆய்வாளரையும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்க முயற்சித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், தொண்டி மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் சுமார் இரண்டு மணி நேரமாக வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டித்து, இடையூறு ஏற்படுத்தி அராஜகப் போக்கில் ஈடுபட்டனர். இந்தச் செயல் தொண்டி மக்கள் அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டி காவல் நிலையத்தில் ஒன்றுகூடி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். மதுபோதையில் ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரை தாக்க முயன்று அராஜகப் போக்கில் ஈடுபட்ட இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது என்றும் வலியுறுத்தப்பட்டது.
    user_Aasil
    Aasil
    Local News Reporter திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    20 hrs ago
  • சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உள்ள உடையார்சேர்வை அருகே, மிதமான மழையின் காரணமாக ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த மரம் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சொகுசு கார் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இந்தக் கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினரான மோகனுக்கு சொந்தமானது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. மரம் சாய்ந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறை சீரமைக்கும் வகையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உள்ள உடையார்சேர்வை அருகே, மிதமான மழையின் காரணமாக ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த மரம் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சொகுசு கார் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இந்தக் கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினரான மோகனுக்கு சொந்தமானது.

இந்த எதிர்பாராத சம்பவத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. மரம் சாய்ந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறை சீரமைக்கும் வகையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    54 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.