இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நீட் (NEET-UG) தேர்வை முன்னிட்டு, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் பயணம் சிரமமின்றி அமைய தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில், பொதுவாக வார நாட்களில் இயக்கப்படும் அட்டவணையின்படி புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் அதிக நெரிசல் இல்லாமல் வசதியாக பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வர்களின் தேவையை கருத்தில் கொண்டு சின்னசேலம் – சேலம் மற்றும் திருப்பத்தூர் – சேலம் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. சின்னசேலத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 11.20 மணிக்கு சேலத்தை சென்றடையும். அதேபோல், திருப்பத்தூரிலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 10.45 மணிக்கு சேலம் வந்து சேரும். அரக்கோணம் பகுதியில் நடைபெற்று வரும் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை – அரக்கோணம் – திருத்தணி வழித்தடங்களில் தற்போதுள்ள அட்டவணைப்படியே ரயில்கள் இயக்கப்படும். அத்துடன், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் ரயில்களும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளன. மற்ற அனைத்து புறநகர் ரயில் வழித்தடங்களிலும் வார நாட்களுக்கான சேவை அட்டவணை அமலில் இருக்கும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர் மற்றும் காட்பாடி உள்ளிட்ட 9 முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்கள் மூலம் ரயில் சேவை, உள்ளூர் போக்குவரத்து மற்றும் தேர்வு மையங்களை அடையும் வழிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நீட் (NEET-UG) தேர்வை முன்னிட்டு, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் பயணம் சிரமமின்றி அமைய தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில், பொதுவாக வார நாட்களில் இயக்கப்படும் அட்டவணையின்படி புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் அதிக நெரிசல் இல்லாமல் வசதியாக பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வர்களின் தேவையை கருத்தில் கொண்டு சின்னசேலம் – சேலம் மற்றும் திருப்பத்தூர் – சேலம் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. சின்னசேலத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 11.20 மணிக்கு சேலத்தை சென்றடையும். அதேபோல், திருப்பத்தூரிலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 10.45 மணிக்கு சேலம் வந்து சேரும். அரக்கோணம் பகுதியில் நடைபெற்று வரும் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை – அரக்கோணம் – திருத்தணி வழித்தடங்களில் தற்போதுள்ள அட்டவணைப்படியே ரயில்கள் இயக்கப்படும். அத்துடன், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் ரயில்களும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளன. மற்ற அனைத்து புறநகர் ரயில் வழித்தடங்களிலும் வார நாட்களுக்கான சேவை அட்டவணை அமலில் இருக்கும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர் மற்றும் காட்பாடி உள்ளிட்ட 9 முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்கள் மூலம் ரயில் சேவை, உள்ளூர் போக்குவரத்து மற்றும் தேர்வு மையங்களை அடையும் வழிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மாநகராட்சிக்கு அருகிலுள்ள பொதுப்பாதைகளில் கட்-அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மல்டர் பாலம் அருகில் மற்றும் மாநகராட்சி குடிநீர் வசதிக்கு அருகிலுள்ள பொதுப் பாதைகளில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் நடமாட்டத்திற்கு சிரமத்தை உண்டாக்குகிறது. மாநகராட்சித் துறை மிக அருகிலேயே இருக்கும் நிலையிலும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன. எனவே, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.3
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் வெள்ளிமலை அருகே அமைந்துள்ள மொட்டையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் நூலகத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நீண்ட நாட்களாக பயன்பாடின்றி மூடப்பட்டிருக்கும் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அத்துடன், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய விளையாட்டு மைதான வசதியை ஏற்படுத்தவும், போதிய பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பசுபதிகோயில் அண்ணா சிலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 131ஆம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆடம்பர தேர்பவனி விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, பங்குதந்தை மற்றும் உதவி பங்கு தந்தை முன்னிலையில் சிறப்பு கூட்டுப்பாடலும் திருப்பலியும் நடைபெற்றன. மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட, புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட ஆடம்பர தேர் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில், பசுபதிகோயில் புனித அந்தோணியார் ஆலயத்தின் அருள் தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம நாட்டாமைகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், இறைமக்கள் மற்றும் புனித அந்தோணியார் கோவில் தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.1
- கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வந்த கடும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த சூழலில், நேற்று இரவு (19.06.2026) விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டாலும், குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த மாநில அளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- முக்கண்ணாமலைப்பட்டியில் அன்னவாசல் காவல்துறையினர் நடை ரோந்துப் பணியிலும், விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கீழபொய்கை பட்டி அருகே உள்ள பொய்கை மலையில் அமைந்துள்ள மாயவதார பெருமாள் கோவிலில் இன்று மதியம் உச்சி கால பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின்போது, சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், இப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் சேவை குழுவினர், தளுகை கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்துகொண்டனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட மேழாத்துகுழி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வபோதகர் ஆகியோர் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர். பின்னர், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பழுதடைந்திருந்த மோட்டார் அகற்றப்பட்டு புதிய மோட்டார் பொருத்தும் பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் வெறும் மூன்று மணி நேரத்திற்குள் புதிய மோட்டார் பொருத்தப்பட்டு கிராம மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த குடிநீர் பிரச்சினை சில மணி நேரங்களிலேயே தீர்வு காணப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களது கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.1