Shuru
Apke Nagar Ki App…
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனி தொகுதி திமுக வேட்பாளர் சி.வெ கணேசன் ஆதரித்து திட்டக்குடியில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
சந்திரசேகர். D
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனி தொகுதி திமுக வேட்பாளர் சி.வெ கணேசன் ஆதரித்து திட்டக்குடியில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by சந்திரசேகர். D2
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்1
- இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- நாகை அவரித்திடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் ஜவஹிருல்லாவுக்கு தீவிர வாக்கு கேட்டு விடுதலை கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரத்தில் இன்று ஈடுப்பட்டார். மேலும்இந்தியா அளவில் விசிக கட்சி அங்கிகாரம் பெற்றுள்ளது எனவும் .8 தொகுதியில் வேட்பாளர்களை நியமித்துள்ளோம் என கூறினார்3
- நடிப்பை ரசிக்கலாம்; ஆனால் நாட்டை ஒப்படைக்கக் கூடாது” என்ற கருத்தை குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம் என நாகை அருகே மேலப்பிடாகையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேச்சு. நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதாவுக்கு ஆதரவாக, கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மேலப்பிடாகை பகுதியில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அவர், கூட்டணி கட்சிகளின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் அரசியலுக்கு வந்திருப்பது வாக்குகளைப் பிரிப்பதற்காகவா அல்லது மறைமுகமாக அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக அமையுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே உள்ளது. இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான பிரச்சனைகள் குறித்து இதுவரை விஜய் எந்தவிதமான தெளிவான திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்றும், சினிமா வசனங்கள் மட்டும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்க முடியாது என்றும் அவர் விமர்சித்தார். மேலும், பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்த “நடிப்பை ரசிக்கலாம்; ஆனால் நாட்டை ஒப்படைக்கக் கூடாது” என்ற கருத்தை குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்களின் நலனில் செயல்படுவதிலும் முன்னிலையில் உள்ளது என அவர் பாராட்டினார். கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் லதாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த முறை 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியை விட, இம்முறை அதிக வாக்குகளுடன் வெற்றி பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பணியே இந்த தேர்தலில் பெரிய வெற்றியைத் தரும் என்றும், தமிழகம் முழுவதும் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், விசிக கீழ்வேளூர் தொகுதி மாவட்ட செயலாளர் நாக அருட்செல்வன், திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வாஎடிசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை.மாலி, கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன், நாகை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வடவூர் ராஜேந்திரன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காட்டெருமைகள் கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நெல்,சோளம்,மரவள்ளிக்கிழங்கு,தக்காளி,பீன்ஸ்,மிளக,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழித்து வருகின்றன. குறிப்பாக கரியாலூர் ஊராட்சிக்குட்பட்ட புளுவப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர் மற்றும் மிளகு செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் நாசமாகி, பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு வருட உழைப்பும் ஒரு இரவில் அழிகிறது” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவடிப்பட்டு பகுதியில் ஏற்பட்டதாகவும், அப்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். “அப்போது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கும்” எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருந்தால், கல்வராயன் மலைப்பகுதி விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.1