logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

18 hrs ago
user_Selva
Selva
ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
18 hrs ago

சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

More news from Tamil Nadu and nearby areas
  • தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி  பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    3 hrs ago
  • உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!! 000 கன்னிவாடி அருகே மழை வேண்டி மக்கள் நோய்நொடி இன்றி வாழ வினோத திருவிழா!! உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!
    1
    உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!
000
கன்னிவாடி அருகே மழை வேண்டி மக்கள் நோய்நொடி இன்றி வாழ வினோத திருவிழா!!
உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    1
    மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி! வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண் 2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    1
    அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி!
வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக  காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண்  2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • மீனவர் பிரச்சனை குறித்து தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-- வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார். *தமிழக மீனவர்களை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.
    1
    மீனவர் பிரச்சனை குறித்து
தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:--
வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார்.
*தமிழக மீனவர்களை கண்டித்து,
யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* 
இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை 
தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். 
இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சிறப்பாக நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் குண்டு களித்தனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
    1
    சிறப்பாக நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் குண்டு களித்தனர் 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • பல வண்ண பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்த அஸ்தம்பட்டி மாரியம்மன்! சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு பல வண்ண பட்டாடைகள் அணிவித்து, சந்தன காப்பு அலங்காரம் செய்து வண்ணம் மலர் மாலைகளுடன் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
    1
    பல வண்ண பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்த அஸ்தம்பட்டி மாரியம்மன்!
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு பல வண்ண பட்டாடைகள் அணிவித்து, சந்தன காப்பு அலங்காரம் செய்து வண்ணம் மலர் மாலைகளுடன் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 169 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 7,095 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைப் பட்டா பெறுவதற்காக பழங்குடியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி மனுக்களை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை (Gram Sabha), வன உரிமைக் குழு (FRC), துணை மாவட்ட அளவிலான குழு (SDLC) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான அனைவருக்கும் வன உரிமைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    1
    தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..!
தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..!
தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 169 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 7,095 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைப் பட்டா பெறுவதற்காக பழங்குடியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வனத்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி மனுக்களை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபை (Gram Sabha), வன உரிமைக் குழு (FRC), துணை மாவட்ட அளவிலான குழு (SDLC) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான அனைவருக்கும் வன உரிமைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    11 hrs ago
  • எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை என்றால் குடும்பத்தை காலி செய்து விடுவேன்" – தருமபுரியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுக்காவிட்டால் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன் " என மிரட்டியதாகக் கூறி, மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அருண் பெர்னாண்டஸ், தருமபுரி–சேலம் சாலையில் இந்தியன் வங்கி அருகே "மாதா மெடிக்கல் ஷாப்" என்ற பெயரில் ஆங்கில மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் அருண் பெர்னாண்டஸின் தந்தை, தாய் மற்றும் சகோதரி உயிரிழந்த நிலையில், தனது மனைவியின் குடும்பத்தினரே தற்போது உறவினர்களாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மருந்துக் கடைக்கு அடிக்கடி வந்து பழகியதால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், பொறியியல், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை ஏற்பாடு செய்து தருவதாக கூறி செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அருண் பெர்னாண்டஸின் மருந்துக் கடைக்கு மருத்துவர்கள் வருவதைக் காரணம் காட்டி, அவரின் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருமாறு ராஜ்குமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு, தனக்கு அதுபோன்ற தொடர்போ அல்லது அதிகாரமோ இல்லை என அருண் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். ஆனால், "நீ எப்படியும் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையெனில் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன். மேலும், நீயும் உன் மனைவியும் பணம் வாங்கி ஏமாற்றியதாக பல இடங்களில் அவதூறு பரப்புவேன்" என ராஜ்குமார் மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலால் அச்சமடைந்த அருண் பெர்னாண்டஸ், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி, இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
    1
    எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை என்றால் குடும்பத்தை காலி செய்து விடுவேன்" – தருமபுரியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார்
எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுக்காவிட்டால் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன் " என மிரட்டியதாகக் கூறி, மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அருண் பெர்னாண்டஸ், தருமபுரி–சேலம் சாலையில் இந்தியன் வங்கி அருகே "மாதா மெடிக்கல் ஷாப்" என்ற பெயரில் ஆங்கில மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் அருண் பெர்னாண்டஸின் தந்தை, தாய் மற்றும் சகோதரி உயிரிழந்த நிலையில், தனது மனைவியின் குடும்பத்தினரே தற்போது உறவினர்களாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மருந்துக் கடைக்கு அடிக்கடி வந்து பழகியதால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், பொறியியல், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை ஏற்பாடு செய்து தருவதாக கூறி செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அருண் பெர்னாண்டஸின் மருந்துக் கடைக்கு மருத்துவர்கள் வருவதைக் காரணம் காட்டி, அவரின் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருமாறு ராஜ்குமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு, தனக்கு அதுபோன்ற தொடர்போ அல்லது அதிகாரமோ இல்லை என அருண் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார்.
ஆனால், "நீ எப்படியும் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையெனில் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன். மேலும், நீயும் உன் மனைவியும் பணம் வாங்கி ஏமாற்றியதாக பல இடங்களில் அவதூறு பரப்புவேன்" என ராஜ்குமார் மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலால் அச்சமடைந்த அருண் பெர்னாண்டஸ், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி, இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.