ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது1
- மதுரையில் இன்று தெற்கு மாரட்வீதியில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்குட நன்னீராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் TVK கட்சியைச்சேர்ந்த .M.M கோபிசன் MLA. அவர்கள் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் மிகச்சிறப்பு செய்தனர்1
- மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் விஸ்வநாதன், ரமேஷ், பெருமாள் குமார் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றி நின்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் கூறும் பொழுது கரகோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று இரவு நான்கு மாசி வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.1
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 23 சிலைகள் ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்து கடை தெரு, சின்ன கடை பஜார், ஆண்டாள் கோவில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில் டிஎஸ்பி பாலசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- மதுரை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் - அமைச்சர் நிர்மல்குமார் ,எம்பிகள் பங்கேற்பு மதுரை சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் பணியை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலையம் கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர்,சு. வெங்கடேசன்மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமரன் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர் கூட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவர் பணியை விரைந்து முடித்திடவும் மதுரை கப்பலூர் சுற்றுச்சாலையை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது1
- கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூர் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் மெயின் ரோடு,கிருஷ்ணன் கோவில் ரோடு, புதுக்கிராமம்,எட்டையாபுரம் ரோடு, வழியாக அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் வந்தடைந்தன. இதில் பாஜக, இந்து முன்னணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் இன்று மாலை கோவில்பட்டியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.1
- சிவகங்கையில் அருகே இரட்டை கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான நபர்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டக்காரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்னும் உடற்கூறு ஆய்வு நடைபெறாததால், நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.1
- கூலி நிர்ணயம் செய்யக்கோரி ஶ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் சேலை நெசவு செய்யும் நெசவாளர்கள் வேலை நிறுத்தம் 4 இடங்களில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்.. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை பிரதானமாக நெசவு செய்யப்பட்டு வருகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூறிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 4 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என நெசவாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெசவாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியார்பட்டி தெருவில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.1