" செல்லாத ஓட்டுக்களால் " எந்தப் பயனும் இல்லை : முன்னாள் முதல்வர் எடப்பாடி பேச்சு மதுரை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 19 பேர் திமுகவில் போட்டியிடுகின்றனர். இந்தச் செல்லாத ஓட்டுகளால் எந்தப் பயனும் இல்லை என்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிண்டலாகப் பேசினார். அதிமுக ஆட்சியில் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம் எனக் குறிப்பிட்ட அவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், வங்கி கணக்கில் நேரடியாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாகப் பிரிட்ஜ் மற்றும் 3 காஸ் சிலிண்டர்கள் மானியமாக வழங்கப்படும் என்றும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் 5 லட்சம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் பட்டியலிட்டார். ஆண்களும் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும், அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். திமுகவில் ஆட்களே இல்லை எனக் குறிப்பிட்ட அவர், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் பேசினார். அதிமுக அரசு எப்போதும் சிறுபான்மையினரை இமை போல் பாதுகாத்தது என்றும், அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க ஆதரவு அளித்தது அதிமுகதான் என்றும் கூறினார். இதற்கிடையே பிரச்சாரத்தின் போது வந்த ஆம்புலன்ஸிற்கு வழிவிடச் சொல்லி, அது சென்ற பின் தனது உரையைத் தொடர்ந்தார்.
" செல்லாத ஓட்டுக்களால் " எந்தப் பயனும் இல்லை : முன்னாள் முதல்வர் எடப்பாடி பேச்சு மதுரை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 19 பேர் திமுகவில் போட்டியிடுகின்றனர். இந்தச் செல்லாத ஓட்டுகளால் எந்தப் பயனும் இல்லை என்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிண்டலாகப் பேசினார். அதிமுக ஆட்சியில் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம் எனக் குறிப்பிட்ட அவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், வங்கி கணக்கில் நேரடியாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாகப் பிரிட்ஜ் மற்றும் 3 காஸ் சிலிண்டர்கள் மானியமாக வழங்கப்படும் என்றும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் 5 லட்சம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் பட்டியலிட்டார். ஆண்களும் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும், அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். திமுகவில் ஆட்களே இல்லை எனக் குறிப்பிட்ட அவர், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் பேசினார். அதிமுக அரசு எப்போதும் சிறுபான்மையினரை இமை போல் பாதுகாத்தது என்றும், அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க ஆதரவு அளித்தது அதிமுகதான் என்றும் கூறினார். இதற்கிடையே பிரச்சாரத்தின் போது வந்த ஆம்புலன்ஸிற்கு வழிவிடச் சொல்லி, அது சென்ற பின் தனது உரையைத் தொடர்ந்தார்.
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.1
- மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.1
- காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கும், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். *அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது* ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தல் முன்னிட்டு தமிழகத்தினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர் கட்சித் தலைவர் , தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக அமரக்கூடிய எடப்பாடி யார் அவர்கள் என்னை திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக என்னை அறிவித்தார்கள். அறிவித்தவுடன் அவர்களை நேற்று தினம் தூத்துக்குடியில் சந்தித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் களப்பணி பற்றிகளையும், ஏழு சட்டமன்ற தொகுதி வெற்றி பெறுவது பற்றியும் ஆலோசனை வழங்கினார். இன்றைய தினம் ஆவியூரில் எனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து தற்போது காரியாபட்டியில் உள்ளேன். இந்த தொகுதியிலே பல நிலவரங்கள் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் கள நிலவரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் 35 ஆண்டு காலம் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதாரண கூலி வேலை பார்த்து டிரைவராக இருந்து. இன்றைக்கு ஒரு சட்டப்பேரவையின் உறுப்பினராகி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் அந்த இரண்டு ஆண்டு காலத்திலும் சாத்தூர் மக்களிடையே என்னை எப்படி பார்த்தார்கள் நான் எப்படி அவர்களிடம் நடந்து கொண்டேன் என்பது அந்த தொகுதி மக்களுக்கு தெரியும். உங்களை எதிர்த்து நிதி அமைச்சர் போட்டியிடுகிறார் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் நிற்கிறார், ஸ்டாலின் நிற்கிறார், உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அண்ணா திமுகவில் சாதாரண தொண்டரும் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற வரலாற்றை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நான் வெற்றியை வந்து. நான் எப்படி களப்பணி ஆற்றுவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள், உள்ளத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், உயரத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், நான் களத்தில் மோதணும் நினைத்தால் வெற்றி ஒன்று இலக்காகதான் இருக்கும். நான் எல்லாத்தையும் சந்தித்து எல்லாத்தையும் பார்த்து எல்லாரிடமும் ஆலோசனை நடத்தி விட்டு தொகுதி நிலவரம் அனைத்தும் எனக்கு தெரியும் 1996 -ல் ஐயா தங்கபாண்டியன் அவர்கள் வேட்பாளராக இருக்கும்போது, அண்ணாச்சி சுந்தரபாண்டியன் அவர்கள் இருக்கும்போது இந்த தொகுதியும் எனது கால் படாத இடங்கள் கிடையாது. எதுவென்றாலும் நான் ஓப்பனாக பேசுவேன், எதிலும் நேர்மையாக இருப்பேன், யாரை எதிர்த்தாலும் நேர்மையாக தான் எதிர்ப்பேன், யாரை ஆதரித்தாலும் நேர்மையாக தான் ஆதரிப்பேன், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக தொண்டர்கள் உண்மையிலேயே எந்தவித பிரதிபலனும் அடையவில்லை ஒரு சில பேர் அவர்களுடைய சுய லாபத்திற்காக 24 ஆண்டுகள் இந்த கட்சியை வந்து பாழாக்கி பந்தகாடாக்கி வைத்துள்ளார்கள். நான் முன்னாள் நிர்வாகிகள் அனைவருடன் பேசி திருச்சுழி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு தேவையானது செய்வேன். ஒரு சில புல்லுருவிகள் இருந்து கட்சியை வாலாக்கனும் , பாலக்கனும் என்று நினைக்கிறார்கள் நான் அதை விடவே மாட்டேன் அதற்கு ஒரு முடிவு காலம் கட்டி தான் இந்த திருச்சுழி தொகுதியில் இருந்து வெளியேறுவேன்.1
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,1
- ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .1
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1
- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 30.03.2026 திங்கட்கிழமை சந்திர சோமவார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1