Shuru
Apke Nagar Ki App…
சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சபாநாயகர் தேர்தலுக்காக எதிர்க்கட்சி சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கலுக்கான நேரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Natarajan Pitchaimani
சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சபாநாயகர் தேர்தலுக்காக எதிர்க்கட்சி சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கலுக்கான நேரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1
- தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி *தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி* தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.1
- கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.2
- அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது3
- தமிழக முதலமைச்சர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அன்புமணி ராமதாஸ் தனது குடும்ப உறுப்பினர்களை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அன்புமணியின் குடும்பத்தினர் முதலமைச்சரை நெகிழ்ச்சியுடன் வரவேற்று நலம் விசாரித்தனர். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் இந்தச் சந்திப்பில் ஆலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.1