logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா பூங்குளம் பகுதியில் வனப்பிறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வாணியம்பாடி அருகே ஆலங்காயம் வனத்துறை, இயற்கை அரண்கள் குழு ஆகியோர் இணைந்து 5000 பனை விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நடும் விழா. திருப்பத்தூர் வாணியம்பாடி தாலுகா பூங்குளம் கிராமம் வனப்பகுதியில் இன்று ஆகஸ்ட் 26)ஆலங்காயம் வனத்துறை, இயற்கை அரண்கள் குழு ஆகியோர் இணைந்து 5000 பனை விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் வனசரக அலுவலர் சேகர், தலைமை வகித்தார். வானவர் வெங்கடேசன், அரசு மருத்துவர் ஜனார்தன், வேர்கள் அறக்கட்டளை தலைவர் வடிவேல் சுப்பிரமணியன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை அரண்கள் குழு தலைவர் தமிழ்வாணன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் கலந்துகொண்டு இயற்கையை காப்போம்.. எதிர்காலத்தை உருவாக்குவோம்! என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர் ஏ. வேலு, பசுமை தாயகம் அறக்கட்டளை நிறுவன தலைவர் மு.பெ.சத்யராஜ், நம் மக்களின் குரல் நிறுவனர் ராதா கிருஷ்ணன்,குழு உறுப்பினர்கள்,வனத்துறையினர், விவசாய சங்கத்தினர், திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 5000 பனை விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நட்டனர்.முடிவில் பசுமை தாயகம் அறக்கட்டளை தலைவர் என்.செங்குட்டுவன் நன்றி கூறினார்.

9 hrs ago
user_Yuvaraj Tirupattur Dist News R
Yuvaraj Tirupattur Dist News R
Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
9 hrs ago
59a728cb-3e66-4842-8dfe-5575cc1691b7

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா பூங்குளம் பகுதியில் வனப்பிறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வாணியம்பாடி அருகே ஆலங்காயம் வனத்துறை, இயற்கை அரண்கள் குழு ஆகியோர் இணைந்து 5000 பனை விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நடும் விழா. திருப்பத்தூர் வாணியம்பாடி தாலுகா பூங்குளம் கிராமம் வனப்பகுதியில் இன்று ஆகஸ்ட் 26)ஆலங்காயம் வனத்துறை, இயற்கை அரண்கள் குழு ஆகியோர் இணைந்து 5000 பனை விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் வனசரக அலுவலர் சேகர், தலைமை வகித்தார். வானவர் வெங்கடேசன், அரசு மருத்துவர் ஜனார்தன், வேர்கள் அறக்கட்டளை தலைவர் வடிவேல் சுப்பிரமணியன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை

35bd2eac-6336-4486-827c-9f57f31994e2

அரண்கள் குழு தலைவர் தமிழ்வாணன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் கலந்துகொண்டு இயற்கையை காப்போம்.. எதிர்காலத்தை உருவாக்குவோம்! என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர் ஏ. வேலு, பசுமை தாயகம் அறக்கட்டளை நிறுவன தலைவர் மு.பெ.சத்யராஜ், நம் மக்களின் குரல் நிறுவனர் ராதா கிருஷ்ணன்,குழு உறுப்பினர்கள்,வனத்துறையினர், விவசாய சங்கத்தினர், திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 5000 பனை விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நட்டனர்.முடிவில் பசுமை தாயகம் அறக்கட்டளை தலைவர் என்.செங்குட்டுவன் நன்றி கூறினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ  அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர்
*திருப்பத்தூர் மாவட்டம்*
*தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்*
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    1
    லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்  தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர்  மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்  பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர  விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி  பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர்  அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் நந்தி  மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை
மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்  டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
    1
    காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் 
நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு கூட்டம்.


காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 
குடிமக்கள் 
நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு
நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக
சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் 
டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம் திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!
    1
    நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம்
திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சாமியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சாமியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வேதபாராயணர் பரந்தாமன் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் சாமியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஊர்கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் சின்னராஜ், கோல்காரர் ரமேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொப்பிடி முருகேசன், பூசாரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் சாமியார் நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
    1
    சாமியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சாமியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது.
இதையடுத்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் வேதபாராயணர் பரந்தாமன் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிஷேக விழாவில் சாமியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவில் ஊர்கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் சின்னராஜ், கோல்காரர் ரமேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொப்பிடி முருகேசன், பூசாரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் சாமியார் நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    4 hrs ago
  • மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..!
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில்  பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    14 hrs ago
  • காவேரிப்பட்டணம்கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில்  தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்தவிஜயகாந்தின் பிறந்த நாள்விழா காவேரிப்பட்டணம் பனந்தோப்பு அருகில்  கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
    1
    காவேரிப்பட்டணம்கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில்  தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்தவிஜயகாந்தின் பிறந்த நாள்விழா


காவேரிப்பட்டணம் பனந்தோப்பு அருகில்  கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.