logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் ஆத்தூர் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது சேலம் மாவட்டம் ஆத்தூர் திமுக கட்சி அலுவலகத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் திமுக நிர்வாகிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடத்தினார் அப்பொழுது ஆத்தூர் சட்டமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் திமுக நிர்வாகிகள் பம்பரமாக செயல்பட வேண்டும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் நாம் வெற்றி பெற செய்து அவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் மேலும் மாவட்ட செயலாளர் நானே நிற்பது போல் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் நகர செயலாளர்கள் அதிகமான வாக்குகளை அவர்களுடைய ஒதுக்கப்பட்ட பகுதியில் வாங்கி தர வேண்டும் அப்படி இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

5 hrs ago
user_Selva
Selva
ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
5 hrs ago
d5c1645a-6d99-4e14-b3c5-4f330ecc3533

சேலம் ஆத்தூர் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது சேலம் மாவட்டம் ஆத்தூர் திமுக கட்சி அலுவலகத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் திமுக நிர்வாகிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடத்தினார் அப்பொழுது ஆத்தூர் சட்டமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் திமுக நிர்வாகிகள் பம்பரமாக செயல்பட வேண்டும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் நாம் வெற்றி பெற செய்து அவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் மேலும் மாவட்ட செயலாளர் நானே நிற்பது போல் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் நகர செயலாளர்கள் அதிகமான வாக்குகளை அவர்களுடைய ஒதுக்கப்பட்ட பகுதியில் வாங்கி தர வேண்டும் அப்படி இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் அறிமுக கூட்டம். இன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே விளக்கமாக பேசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, வருகின்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தகுதிகளிலும் திமுக வெற்றி பெற, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    1
    சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் அறிமுக கூட்டம். இன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே விளக்கமாக பேசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, வருகின்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தகுதிகளிலும் திமுக வெற்றி பெற, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    44 min ago
  • பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    1
    பத்து தோல்வி பழனிச்சாமியை 
மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 
அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும்.
மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். 
இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • எடப்பாடி அருகே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத ஆர்.ஓ பிளான்ட்... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆவனிப் பேரூர் கீழ்முகம் ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் ஆர்வோ பிளான்ட் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அம்மன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் ஆர்ஓ பிளான்ட்கட்டி முடிக்கப்பட்டது... இரண்டு குடிநீர் ஆர்ஓ பிளான்டுகளும் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளாகியும் குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன் பாட்டிற்கு விடப்படவில்லை... பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் ஆர்ஓ பிளான்ட் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படாததால் அரசு பணம் பல லட்சம் விரய மாகி உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண் டும் என யூனியன் பிடிஓ மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மக்களின் பயன் பாட்டிற்கு ஆர்ஓ பிலான்டடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.‌.. கோடை வெயில் பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க போடிநாயக்கன்பட்டி மற்றும் செட்டிங்குறிச்சி அம்மன் கோவில் ஆகிய இரு இடங்களிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆர் பிளான்டில் குடிநீர் ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
    1
    எடப்பாடி அருகே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத ஆர்.ஓ பிளான்ட்... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆவனிப் பேரூர் கீழ்முகம் ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் ஆர்வோ பிளான்ட் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல்  எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அம்மன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் ஆர்ஓ பிளான்ட்கட்டி முடிக்கப்பட்டது...
இரண்டு குடிநீர் ஆர்ஓ பிளான்டுகளும் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளாகியும் குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன் பாட்டிற்கு விடப்படவில்லை...
பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் ஆர்ஓ பிளான்ட் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படாததால் அரசு பணம் பல லட்சம் விரய மாகி உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண் டும் என யூனியன் பிடிஓ மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மக்களின் பயன் பாட்டிற்கு ஆர்ஓ பிலான்டடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.‌..
கோடை வெயில் பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க போடிநாயக்கன்பட்டி மற்றும் செட்டிங்குறிச்சி அம்மன் கோவில் ஆகிய இரு இடங்களிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆர் பிளான்டில் குடிநீர் ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    1 hr ago
  • Post by பெரியசாமி
    2
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுக படுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    1
    ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுக படுத்தி
பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    4 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை  சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது  மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சௌமியா அன்புமணி வருகை புரிந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சௌமியா அன்புமணி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு மாவட்ட எல்லையில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சௌமியா அன்புமணி வருகை தந்தவுடன், அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பாமக கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஊர்வலமாக வந்து வேட்பாளரை வரவேற்றனர். வருகை புரிந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொண்டர்கள் புடைச்சூழ ஊர்வலமாக வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    1
    தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சௌமியா அன்புமணி வருகை புரிந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சௌமியா அன்புமணி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு மாவட்ட எல்லையில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சௌமியா அன்புமணி வருகை தந்தவுடன், அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும், பாமக கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஊர்வலமாக வந்து வேட்பாளரை வரவேற்றனர். வருகை புரிந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொண்டர்கள் புடைச்சூழ ஊர்வலமாக வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.