logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் : மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும் Salcomp மற்றும் Spark minda நிறுவனத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பதன் (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு தேர்தல் விழிப்புணர்வு பதாகையுடன், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

6 hrs ago
user_Naga Rajan
Naga Rajan
Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
6 hrs ago
8dab3dc1-2b6f-416a-b9a0-725120104e29

காஞ்சிபுரம் : மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும் Salcomp மற்றும் Spark minda நிறுவனத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பதன் (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு தேர்தல் விழிப்புணர்வு பதாகையுடன், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • இரட்டை இலை #admk #KPK #eps
    1
    இரட்டை இலை 
#admk #KPK #eps
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    2
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    1 hr ago
  • சென்னை இராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் காசிமேடு எம்ஜிஆர் குடிசை மாற்று பகுதியில் செங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளை செய்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    சென்னை இராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் காசிமேடு எம்ஜிஆர் குடிசை மாற்று பகுதியில் செங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளை செய்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • புவனகிரி திமுக வேட்பாளர் சரவணன் புவனகிரி நகரில் பகுதி பகுதியாக தீவிர வாக்கு சேகரிப்பு. கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் திமுக கட்சியின் சார்பாக முன்னாள் எம்எல்ஏ துரை கி. சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். புவனகிரி நகர பகுதியில் வார்டு வார்டாக சென்று அப்பகுதி மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். மக்களை சந்தித்த வேட்பாளர் சரவணன் அனைவருக்கும் சால்வை அறிவித்து மரியாதை செய்தார். இதில் திமுக நகர பொறுப்பாளர் ஜெய் கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன், பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.
    1
    புவனகிரி திமுக வேட்பாளர் சரவணன் புவனகிரி நகரில் பகுதி பகுதியாக தீவிர வாக்கு சேகரிப்பு.
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் திமுக கட்சியின் சார்பாக முன்னாள் எம்எல்ஏ துரை கி. சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். 
புவனகிரி நகர பகுதியில் வார்டு வார்டாக சென்று அப்பகுதி மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். மக்களை சந்தித்த வேட்பாளர் சரவணன் அனைவருக்கும் சால்வை அறிவித்து மரியாதை செய்தார்.
இதில் திமுக நகர பொறுப்பாளர் ஜெய் கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன், பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    18 min ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும் பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர்  அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும்  பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று (ஏப்.05) நடைபெற்ற சந்தையில் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் நாட்டுக்கோழிகள் ரூ.400 - 1,300 வரை விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    1
    நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்  நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று (ஏப்.05) நடைபெற்ற சந்தையில் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் நாட்டுக்கோழிகள் ரூ.400 - 1,300 வரை விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர் சௌமியா அன்புமணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தர்மபுரி அடுத்துள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்கு சேகரிப்பு திட்டங்கள், பிரசார முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, “தர்மபுரி தொகுதியில் மக்கள் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக உள்ளது. இந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், வீடு தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு அளிக்கும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றால் தொப்பூர் கணவாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பபோம் என்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளது வத்தல்மலை சுற்றுலா தளம் திட்டத்தை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும் என்றும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் கூறினார் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
    1
    தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர் சௌமியா அன்புமணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தர்மபுரி அடுத்துள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்கு சேகரிப்பு திட்டங்கள், பிரசார முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, “தர்மபுரி தொகுதியில் மக்கள் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக உள்ளது. இந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், வீடு தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு அளிக்கும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றால்  தொப்பூர் கணவாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பபோம் என்றும் 
கிடப்பில் போடப்பட்டுள்ளது வத்தல்மலை சுற்றுலா தளம் திட்டத்தை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 
100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும் என்றும் 
ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் கூறினார்
கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • #cng
    1
    #cng
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.