Shuru
Apke Nagar Ki App…
இசை மழை...............................................
NAMADHU ARASU(Krishna M Com)
இசை மழை...............................................
More news from தமிழ்நாடு and nearby areas
- சென்னை ஆர்.கே நகர் மேற்கு பகுதி திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா பகுதி செயலாளர் வழக்கறிஞர் எஸ் ஜெப தாஸ் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் , தேர்தல் பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர் அருகில் கிழக்குப் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இயேசுவின் உயிர்ப்பு தினமான ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி மற்றும் குருக்கள் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1
- தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர் சௌமியா அன்புமணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தர்மபுரி அடுத்துள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்கு சேகரிப்பு திட்டங்கள், பிரசார முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, “தர்மபுரி தொகுதியில் மக்கள் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக உள்ளது. இந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், வீடு தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு அளிக்கும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றால் தொப்பூர் கணவாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பபோம் என்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளது வத்தல்மலை சுற்றுலா தளம் திட்டத்தை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும் என்றும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் கூறினார் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.1
- தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவிலின் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த த வெ க சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின் வாசிக்கப்படும் கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார். உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.1
- நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜவாஹிருல்லா நாகூரில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். நிகழ்ச்சியில் நாகை நகர திமுக செயலாளர் மாரிமுத்து நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்1
- சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் பிருந்தா தேவி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியாளராக அருண் தம்புராஜை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்ததை தொடர்ந்து, இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஆட்சியருக்கு மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.1
- சென்னை முழுவதும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக காலை உணவு விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆர்.கே நகர் தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரம் சிற்றுண்டி சிறு வியாபாரிகள் தங்கள் மற்றும் சிமெண்ட் மூலம் அடுப்பு செய்து அதில் உணவுகளை சமைத்து விற்பனை செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.1
- Amazing Talent ❤️❤️❤️1
- பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் எம்பி செந்தில் |குமார் மனு தாக்கல். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் முன்னாள் எம்பி டாக்டர் டி.என்.வி. எஸ். செந்தில் குமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், இன்று கூட்டணி கட்சியினருடன் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்று, பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். இதில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1