logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆத்தூர்: கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா- பக்தர்கள் அதிகரிப்பு ஆத்தூர் கைலாசநாதர் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 25) பிரதோஷத்தை முன்னிட்டு, சிவபெருமானுக்கும் நந்தி பெருமானுக்கும் சந்தனம், பால், தயிர், பன்னீர் மற்றும் மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால், கோயில் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

3 hrs ago
user_Kannapiran S
Kannapiran S
Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
3 hrs ago
074db6a8-2e02-425d-a14a-979856d1d3f7
89530f00-ba55-4b34-8769-83f43d67dbd1

ஆத்தூர்: கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா- பக்தர்கள் அதிகரிப்பு ஆத்தூர் கைலாசநாதர் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 25) பிரதோஷத்தை முன்னிட்டு, சிவபெருமானுக்கும் நந்தி பெருமானுக்கும் சந்தனம், பால், தயிர், பன்னீர் மற்றும் மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால், கோயில் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..!
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில்  பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    14 hrs ago
  • தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
    1
    தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா:  கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர்
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில்  பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.
விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம் திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!
    1
    நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம்
திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சாமியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சாமியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வேதபாராயணர் பரந்தாமன் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் சாமியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஊர்கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் சின்னராஜ், கோல்காரர் ரமேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொப்பிடி முருகேசன், பூசாரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் சாமியார் நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
    1
    சாமியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சாமியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது.
இதையடுத்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் வேதபாராயணர் பரந்தாமன் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிஷேக விழாவில் சாமியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவில் ஊர்கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் சின்னராஜ், கோல்காரர் ரமேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொப்பிடி முருகேசன், பூசாரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் சாமியார் நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    4 hrs ago
  • லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    1
    லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்  தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர்  மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்  பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர  விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி  பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர்  அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் நந்தி  மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை
மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓநாய், கொரில்லா குரங்கு பொம்மைள் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு - சேலம் சரக காவல்துறை DIG, தருமபுரி மாவட்ட SP பங்கேற்பு தர்மபுரி மாவட்டம் அரூரில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்த்துணை தலைவர் சந்தோஷ் ஹதிமேனி, மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் மது போதைகளால் நமது உடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கள்ள சாராயத்தினால் மனிதர்களுக்கு நினைவாற்றல். மங்குதல், கண்பார்வை இழப்பு, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம், கல்லீரல், திடீர்மாரடைப்பு, வாந்தி, வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஆகியவை பாதிக்கப்படும் மேலும் நம் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சுயமரியாதையை இழக்க நேரிடும், சமூக விரோத செயல்களில் ஈடுபட வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர், மேலும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு அவர்களுக்கு இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ளச்சாராயத்தை வைத்திருப்பது, தயாரித்ததோ, விற்பதோ, கடத்துவதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம் இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் உண்டு எனவும் மக்களிடமும் தன் குடும்பத்துவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் கள்ளச்சாராயம் மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி ஓவியம் பேச்சுப்போட்டி ஆகிவத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
    1
    கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓநாய், கொரில்லா குரங்கு பொம்மைள் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு - 
சேலம் சரக காவல்துறை DIG, தருமபுரி மாவட்ட SP பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் அரூரில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்த்துணை தலைவர் சந்தோஷ் ஹதிமேனி, மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் மது போதைகளால் நமது உடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கள்ள சாராயத்தினால் மனிதர்களுக்கு நினைவாற்றல். மங்குதல், கண்பார்வை இழப்பு, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம், கல்லீரல், திடீர்மாரடைப்பு, வாந்தி, வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஆகியவை பாதிக்கப்படும் மேலும் நம் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சுயமரியாதையை இழக்க நேரிடும், 
சமூக விரோத செயல்களில் ஈடுபட வழி வகுக்கும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர், மேலும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு அவர்களுக்கு இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
கள்ளச்சாராயத்தை வைத்திருப்பது, தயாரித்ததோ, விற்பதோ, கடத்துவதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம் இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் உண்டு எனவும் மக்களிடமும் தன் குடும்பத்துவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்
கள்ளச்சாராயம் மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி ஓவியம் பேச்சுப்போட்டி ஆகிவத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி
கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் 
பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து  குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Dr A. SUBETHAR
    Dr A. SUBETHAR
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.