மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.1
- புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இன்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் ஆத்தூர் தலைவாசல் கருமந்துறை பகுதிக்கு புதிய வழித்தடம் பேருந்தை தொடங்கி வைத்தார் மேலும் புதிய பேருந்து ஆத்தூர் பணி மணைக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..1
- இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.1
- கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.1
- திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் 28/08/2026 அன்று திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும், வேளாண் கல்லூரி உருவாக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும், தென்பெண்ணை பாலாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- பட்டா நீலத்தில் பொதுவழி கேட்டு தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்ய முயற்சி: மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார்... திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்பவர் தனது கணவரான ராமலிங்கம் இறந்த பின் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கு பிரித்து பத்திரம் செய்து கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த நிலத்தை வருவாய் துறை மூலம் பட்டா பெற மனு கொடுத்துள்ள நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, கஸ்தூரி, கமலா, சாந்தி ராதா, ருக்கு ஆகியோர்கள் ராஜேஸ்வரி என்பவரது நிலத்தில் பொது வழி கேட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி என்பவரை மிரட்டியும் ஆபாசமாக பேசியும் கட்டையால் தாக்க முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்களும் சென்று விட்டனர். வயதான ராஜேஸ்வரி அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்று தெரியாமல் ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டனர். தனது உறவினர்கள் நேற்று தாக்க வந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை தாக்க முயற்சித்த ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்1
- சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு . சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.1