உசிலம்பட்டி சட்டமன்ற தேர்தலுக்கு த வெ க வேட்பாளர் விஜய் வாக்கு சேகரிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதியில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் ஆசியுடன் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி வேட்பாளர் எம். விஜய் அவர்கள் குப்பனம்பட்டி வடுகபட்டி ராமநாதபுரம் கண்ணியம் பட்டி கட்ட தேவன் பட்டி ஈச்சம்பட்டி தும் கொண்டு திடியன் சிந்துபட்டி வேப்பனூத்து மற்றும் கிராமம் கிராமமாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது விஜய் பேசியது தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் முதலமைச்சராக பதவி ஏற்ற உடன் மக்கள் உரிமைத் தொகை மாதத்திற்கு 2500 ரூபாயும் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் மேலும் . சேடபட்டி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை உசிலை சட்டமன்ற தொகுதியில் இரண்டு தொழிற்சாலை கட்டப்படும் .மகளீர் அரசு கலைக் கல்லூரி கட்டப்படும் என்று தெரிவித்தார் . ஆகையால் மக்களே விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்குகளை சேகரித்தார்.
உசிலம்பட்டி சட்டமன்ற தேர்தலுக்கு த வெ க வேட்பாளர் விஜய் வாக்கு சேகரிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதியில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் ஆசியுடன் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி வேட்பாளர் எம். விஜய் அவர்கள் குப்பனம்பட்டி வடுகபட்டி ராமநாதபுரம் கண்ணியம் பட்டி கட்ட தேவன் பட்டி ஈச்சம்பட்டி தும் கொண்டு திடியன் சிந்துபட்டி வேப்பனூத்து மற்றும் கிராமம் கிராமமாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது விஜய் பேசியது தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் முதலமைச்சராக பதவி ஏற்ற உடன் மக்கள் உரிமைத் தொகை மாதத்திற்கு 2500 ரூபாயும் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் மேலும் . சேடபட்டி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை உசிலை சட்டமன்ற தொகுதியில் இரண்டு தொழிற்சாலை கட்டப்படும் .மகளீர் அரசு கலைக் கல்லூரி கட்டப்படும் என்று தெரிவித்தார் . ஆகையால் மக்களே விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்குகளை சேகரித்தார்.
- Post by முத்துஇருளன்1
- மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (மே.1) காலை நடைபெற்ற நிலையில் நண்பகலில் வைகை கரையோரமுள்ள ஓபுளா படித்த்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்து கள்ளழகர் வேடமடைந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீர்த்தவாரி நிகழ்வை முடித்து தங்களுடைய விரதத்தை நிறைவு செய்தனர் கொண்டனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப் பகுதியில் கூடியிருந்தனர்.1
- இன்று கொடைக்கானலில் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகம் மலர் கண்காட்சி சீசன்தொடக்கத்தின்ஆரம்பம் என்பதால்கூட்டமமும் அதிகமாக காணப்படுகிறது2
- சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனை சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மின்தடை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளான நிலையில் நோயாளிகளுடன் இருந்த உறவினர்கள் விசிறி போன்ற உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தனர் பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு ஜெனரேட்டர் வேலை செய்த நிலையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார வள மையம், திருப்பத்தூர் வட்டார வள மையம், அனுமந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம் விசாலயன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட காலம் கல்விப் பணியாற்றி ஓய்வுபெறும் முதுகலை வேதியியல் ஆசிரியர் எட்வின் அவர்களுக்கு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேவகோட்டை ஆசிரியர் நல சங்கம், பாரதி தமிழ் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் ,தேவகோட்டை தாலுகா சதுரங்க கழகம், தேவகோட்டை தனி பயிற்சி மையம், தேவகோட்டை கே எம் எஸ் சிந்தனைச் சோலை மற்றும் தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கம் சார்பில் சிறப்பான பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. நெகிழ்ச்சியான பாராட்டுரை ராம் நகர் கே எம் எஸ் நூலகம் பகத்சிங் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட சக ஆசிரியர்கள், திரு. எட்வின் அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவையை வெகுவாகப் பாராட்டினர். அவர்கள் பேசுகையில், "வேதியியல் பாடத்தை வெறும் மனப்பாடம் செய்யும் பாடமாக மாற்றாமல், மாணவர்களின் வாழ்வியலோடு இணைத்துச் சொல்லிக் கொடுத்தவர் எட்வின். குறிப்பாக, கடினமான வேதி வினைகளை (Chemical Reactions) மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவர் கையாண்ட விதம் தனித்துவமானது" என்று புகழாரம் சூட்டினர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் எட்வின் அவர்களிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களை இன்று உயர்ந்த நிலையில் இருத்துவதற்கு அடித்தளமிட்ட ஆசிரியருக்கு, அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகளை வழங்கித் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.விழாவின் இறுதியில் பேசிய ஆசிரியர் எட்வின், தனது பணிக் காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு நல்கிய சக ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்திற்கும், அன்பு காட்டிய மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்த விழாவில் பயின்ற மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஆசிரியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.1
- *திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 3006 விளக்குகள் இயற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.*1
- Post by Natarajan Pitchaimani1
- Post by முத்துஇருளன்1