Shuru
Apke Nagar Ki App…
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉 இறைவன் மிகப்பெரியவர் என்று சிந்தித்து வாழ பழகிக்கொள்ளுங்கள் 👉👉👉
தமிழ்நாடு அரசியல்
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉 இறைவன் மிகப்பெரியவர் என்று சிந்தித்து வாழ பழகிக்கொள்ளுங்கள் 👉👉👉
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by தமிழ்நாடு அரசியல்1
- சாத்தான்குளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக விஷ்வா, இசக்கி அழகுவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால் அவர்களை போலீசார் திருக்குறள் வாசிக்க வைத்தனர்.1
- தூத்துக்குடி தமிழகம் முழுவதும் போலியாக காப்பீட்டு நிறுவனங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான நபர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 20 2 2024 ஆம் ஆண்டு பால்பாண்டியன் சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக மணியாச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் பால்பாண்டி விபத்துக்குள்ளான தனது நான்கு சக்கர சரக்கு வாகனத்திற்கு மோட்டார் வாகன விபத்து காப்பீடு தொகை பெறுவதற்காக HDFC இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வாகன காப்பீடு இருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் இந்த நிலையில் பால்பாண்டி தாக்கல் செய்த காப்பீடு பாலிசி போலியானது என தெரியவந்தது இதைத்தொடர்ந்து HDFC ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மேனேஜர் ராஜேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி நடத்திய விசாரணையில் இணையதளம் மூலம் நான்கு சக்கர வாகனத்தின் பதிவினை இரண்டு சக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தின் கட்டணத்தை செலுத்தி ஒரிஜினலாக காப்பீட்டு பாலிசி எடுத்து அதில் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் பெயர் வாகனத்தின் வகை ஆகியவற்றை மாற்றி போலி காப்பீட்டு பாலிசியை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் மலையடிபட்டியை சேர்ந்த 1,சங்கரலிங்கம், தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த 2,தங்கராஜ் ,திருநெல்வேலி மாவட்டம் இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 3,தங்கபாண்டி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 4,பாலமுருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த5, செந்தில் வேல் முருகன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயரில் போலியாக இணையதளத்தில் காப்பீடு பதிவு செய்து லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது1
- கயத்தாறில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஓன்றிய செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறு மகேஷ்வரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இந்தஓன்றிய செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட அம்மா பேரவைச் துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜ் சிறப்புரையாற்றினார்.இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகோபால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய கழக செயலாளர் மந்திரமூர்த்தி, நகர கழக செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், துணை தலைவர்கள் தங்கத்துரை, சுரேஷ் கண்ணன், இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்ச்சாமி, முன்னாள் எம் எல் ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகனேசன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் குடியரசுபாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மகளிர் அணி செல்லத்தாய், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி மேற்கு , கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன், துறையூர் கணேசன், பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.4
- 🌼சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்🌼 அசார் மற்றும் ராஜகுரு ஆகியோர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வொர்க் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர், கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களிடம் அரசியல் நிலவரங்கள்,சட்டமன்ற நிகழ்வுகள்,தொடர்ந்து 4 முறை பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.உடன் GB.பெரோஸ்கான்,சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மூப்பன் அப்துல் காதர்,செ.க.மு.அலி, நெல்லை சூப்பர் மார்க்கெட் தொ.மு.ச.தலைவர் பேரங்காடி ஐயப்பன்,அமீர் சுல்தான்,தொ.மு.ச. சுந்தரம் ஆகியோர்கள்.1
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்தூரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கோரிக்கை1
- Post by ARULJEGAN1
- Post by தமிழ்நாடு அரசியல்1