Shuru
Apke Nagar Ki App…
சிறுமூர் அங்காளம்மனுக்கு 108 பால்குடம் ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் சிறுமூர் கிராமத்தில் குளக்கரையில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கலியுக கண்கண்ட தெய்வம் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு பத்தாம் ஆண்டு 108 பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வடிவேலன்
சிறுமூர் அங்காளம்மனுக்கு 108 பால்குடம் ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் சிறுமூர் கிராமத்தில் குளக்கரையில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கலியுக கண்கண்ட தெய்வம் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு பத்தாம் ஆண்டு 108 பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.1
- பட்டு நெசவு செய்ய முக்கிய பொருளான ஜரிகைகட்டையை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில கைத்தறி தந்தை தோழர் கே எஸ் .பார்த்தசாரதி கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் __________ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை செயலாளர் ஜெ கமலநாதன் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாக ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல் படுத்ததாதால் தமிழ்நாடு முழுவதும் பட்டு நெசவு தொழில் நலிவடைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலமாகவும் பட்டு சேலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, அது மட்டும் இன்றி, ஒரு ஆண்டுகாலமாக பட்டு கைத்தறி நெசவுத் தொழிலுக்கு தேவையான முக்கிய மூல பொருளான ஜரிகை, வெள்ளி, தங்கம் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து கொண்டே போவதால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் உற்பத்தியாளர்களும், பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான ஜரிகை கொள்முதல் செய்ய இயலாமல், நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் எனப் பேசினார். திமுக ஆட்சியில், நெசவாளர் குடும்பங்கள் பட்டினி சாவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என நெசவாளர் தரப்பில் கூறப்பட்டது. நெசவு தொழிலை பாதுகாத்திட கோரி கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கே.எஸ். பார்த்தசாரதி கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முக்கிய கோரிக்கையாக, பட்டு நெசவுக்கு தேவையான ஜரிகை விலையை குறைக்கவும் , தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை ரத்துசெய்யவும், கோறாவிற்கு மான்யம் வழங்குவது போல் ஜரிகைக்கும் மான்யம் வழங்கிடவும், தொடர்ந்து உயரும் கோறா விலையை கட்டுபடுத்தவும், குடிசை தொழிலாக விளங்கும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு GST வரியில் இருந்து விலக்கு அளித்திடவும், ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல்படுத்திடவும், உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மாநில கைத்தறி தந்தை தோழர். K.S. பார்த்தசாரதி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேட்டி ஜெ.கமலநாதன் துணைச் செயலாளர் கைத்தறி சங்கம்2
- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ,தாலுக்கா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் பவானி தாய்-தந்தை இறந்துவிட்டதால் ஆதரவின்றி தவிக்கும் அண்ணன்-தங்கை அரசு உதவ கோரிக்கை வைத்தனர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் திப்பரசன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் விவசாய தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 17) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்வின் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பும், பவானி பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந் துவிட்டதால் அலமேலு கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து கவனித்து வந்தார். இந்தநிலையில் அலுமேலுவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அலுமேலுவுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது. பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை | அரசு மருத்துவ கல்லூரி மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அல மேலு பரிதாபமாக உயிரிழந்தார். தாய்-தந்தை இருவருமே உயிரிழந்துவிட்டதால் ஏழ்மை நிலையில் உள்ள அஸ்வின், பவானி ஆகியோர் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். உறவினர்களும் மும்பையில் இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தாய்-தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் அண்ணன்-தங்கைக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் திருவெண்ணெய்நல்லூரில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் இணைந்து ஒரு மாதத்திற்கான காய்கறி மளிகை பொருள் அரிசி எண்ணெய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காவல்துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு சென்று கொடுத்தனர் அப்போது இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் காவல்துறை சார்பில் நீங்கள் படிப்பதற்கான முழு செலவையும் திருமணத்திற்கான செலவையும் காவல்துறை சார்பில் எங்களால் முடிந்த உதவியை செய்ய நான் தயாராக உள்ளேன் என்று உறுதி அளித்தார்1
- தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.1
- நட்சத்திர தொகுதி காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்... #KPK #சென்னைபுறநகர்மாவட்டம் #சோழிங்கநல்லூர்1
- கிருஷ்ணகிரி - தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. ---------------------------------------------------------------- ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகின்ற தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக்கொண்டு தவநாட்களை அனுசரிக்க துவங்குகிறார்கள். அதேபோன்று, கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருள்ராஜ் அவர்கள் முன்னின்று நடத்தினார். இதில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு, தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை துவங்கினார்கள். தவக்காலத்தை அனுசரிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட்களை தவிர்த்து, சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு, இந்த தவநாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள். இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்வ மக்கள் பங்கேற்று சாம்பல் விபூதி பூசிக்கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1