Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ஸ்ரீபெரும்புதூரில் புதிய டிரைலர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலை திறப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை, மாதத்திற்கு 800 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆலை மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகள் மற்றும் வேகமான விநியோகம் வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் டிரைலர் உற்பத்தியில் புதிய தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆலை திறப்பு விழாவில் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.1
- நெற்றியில் நாமமிட்டு, திருவோடு ஏந்தி நூதன முறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் ஆந்திராவில் வழங்குவதைப்போல் தமிழ்நாட்டிலும் உதவித்தொகை உயர்த்தி வழங்கிட கோரி , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மாற்று திறனாளிகள், நெற்றியில் நாமமிட்டு, திருவோடு ஏந்தி நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். _________ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலாஜி அவர்களின் தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நெற்றியில் பட்டை நாமம் இட்டு, திருவோடை கையில் ஏந்தி நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தற்போது சாதாரண ஊனமுற்றோருக்கு 'வருவாய் துறை' மூலம் ரூ.1,500/- ம், கடும் ஊனமுற்றோருக்கு 'மாற்றுத்திறனாளிகள் துறை' மூலம் ரூ.2,000/-மும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இது தற்போதைய விலைவாசி அடிப்படையில் எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் மாதாந்திர உதவித்தொகையை, அண்டை மாநிலமான ஆந்திரா, மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையைப் பொறுத்து ரூ.6,000/-, ரூ.10,000/-, ரூ.15,000/- என மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர ஊக்க தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்று திறனாளிகள் சங்கத்தின் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலைஅருகில்பாஜக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணிசார்பில்பட்டியல், பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது. இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதி பாலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி (55) இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ராசாபுரம் பகுதியில் இருந்து பஞ்ஙம் பிழைக்க தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதிக்கு முன்னோர்களுடன் வந்த நிலையில் தங்கள் கடும் உழைப்பால் ஆடு மாடு கோழி தென்னை என முன்னேறி இன்றுவரை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இவரது அபார வளர்ச்சையை கண்டு இப்பகுதி மக்கள் இவரது சொத்துக்களை அபகரித்து விரட்டிவிட தொடர்ந்து கொலை மிரட்டல் தாக்குதல் இவர்களது சொத்துக்க ள திருடி செல்லுதல் என உச்ச பட்சமாக கடந்த 16. ஆண்டுகளுக்கு முன்னர் இவரது பாட்டியையும் கொலை செய்து விட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் கடுமையாக பாதிப்படைந்த கணேச மூர்த்தி குடும்பத்தார் எதர்க்கும் அசராமல் காவல்நிலையம் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் முதல்வர் பிரதமர் மனித உரிமை ஆணையம் என பல்லாயிரம் புகார்களை அளித்து சட்ட போராட்டம் இன்றுவரை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது சொத்துக்களை அபகரிக்க அரசியல் பிரமுகர்கள் கார்ப்ரேட்டுகள் என தொடர்ந்து மிரட்டியும் அழுத்தம் குடுத்து வருகின்றனர்.ஆனால் தனது சொத்துக்களையும் குடும்பத்தையும் காக்க விளைநிலத்திலேயே வீடு கட்டி குடியிருந்து வருவது மட்டுமல்லாமல் தங்கள் சுய பாதுகாப்பிற்கு சட்ட போராட்டம் நடத்தி அரசு உரிமம் பெற்று தற்பொழுதுவரை துப்பாக்கியுடன் வாழ்ந்து வருகிறார்.இவர் எங்கு சென்றாலும் இவரை தாக்கி கொலை செய்ய மர்ம கும்பல் தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அன்றாட வேளாண்மை பணிகளை செய்யவும் கால்நடைகளை பராமரிக்கவும் வேண்டி. துப்பாக்கியுடன் வலம் வந்து கொண்டு. இருக்கிறார். மேலும் இன்றுவரை எதிரிகளால் தீங்கு விளையும் வகையில் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தாலும் ஒரு சில புகார்கள் தவிற மற்ற புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காத காரணத்தால் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் மீது உயரதிகாரிகளுக்கும் துறை அமைச்சர்கள் வரை புகார் அளித்தால்தான் தீர்வு கிடைத்து வருவதால் இவர் இன்றுவரை சுமார் 3500 க்கும் மேலான புகார்களை பயன்படுத்தி தான் தீர்வு கண்டு இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் ஆலாபுரம் பகுதி ஒருகாலத்தில் நக்சல்களால் பாதிக்கப்பட்டு இன்று வரை அரசின் நலத்திட்ட உதவிகளால் இயங்கி வருவதால் இவரது பாட்டி கொலை செய்யப்பட்ட பொழுதும் இவரது தம்பியை கொலையாளியாக சித்தரித்து காவல்துறையினர் முயற்ச்சித்துள்ளனர் .அதே பாேல கணேச மூர்த்தியையும் சில ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் என கூறி கைது செய்து முடக்க முயற்சித்த சம்பவமும் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கும் இவரது தென்னந்தோப்பு அருகாமயைில் தற்பொழுது. தனியாருக்கு சொந்தமான கிரானைட் குவாரி ஒன்று புதிதாக துவக்கப்பட்டு செயல் பட்டு வரும் நிலையில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் இந்த குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிச் சப்தம் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகள் கால்நடைகள் மனிதர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இந்த குவாரிக்கு லைசன்ஸ் ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வருகிறார்.இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் இவர் 30ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த விவசாய நிலத்தில். வேலிகள் அமைத்தும் அதில் உள்ள தென்னை மரங்க ள அகற்றவும் முயற்சி செய்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.ஆனால் அரசு இயந்திரங்கள் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு தனது நிலத்தை அபகரித்தும் தன்னையே கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவரது செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக சுற்று சூழலுக்கு எதிராக செயல்படும் சட்ட விரோதிகளுக்கு எதிராக ட்ராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் செயல்பட்டு வருவதை போலவும் திரைப்படங்களில் வரும் பெட்டிசன் பெரியாசமி என்ற பெயரில் உள்ள கதாபாத்திரங்களை செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.1
- தருமபுரியில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டத்சத்து சிறுதானிய திருவிழா, கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வேளான்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி தருமபுரியில் வேளான்மை துறை இணை இயக்குனர் மு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய வகை கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் இக்கண்காட்சியில் நெல், ராகி, தினை, கம்பு கருப்பு கவுனி அரிசி வகைகள் விதை ரகங்கள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வகைகள் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அந்த கால மனிதர்கள் சிறுதானிய உணவு வகைகளையே சாப்பிட்டதால் நீண்ட ஆயில்யுடன் வாழ்ந்தனர் ஆனால் இக்கால இளைஞர்கள், குழந்தைகள் நவீன செயற்கை உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வருகிறது ஆகையால் அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக வாழவேண்டும் என கேட்டுக்கொண்டார் பின்னர் சிறுதானிய உணவு பற்றிய விவரங்களையும், பலன்களையும் வேளான்மை துறை அதிகாரிகள் மக்களுக்கு எடுத்துரைத்தனர் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர் மேலும் துனைவேளாம்மை இயக்குனர் ரத்தினம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திம்மா உள்ளிட்ட வேளான்மை துறை அதிகாரிகள் விவசாபிகள் பங்கேற்றனர்1
- Post by Vinayagam Vinayagam1
- காஞ்சிபுரம் புத்த விகாரில் காகம் ஒன்று அமைதியாக தியானம் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தனர். இந்த இடத்தில் ஒரு காகம் ஒன்று ஆட்கள் அதிகமாக உள்ள புத்த விகாரில் மேசைக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதை அருகே இருந்த பொது மக்கள் மற்றும் புத்த பிச்சுகள் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.1
- காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட கழகத்தினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வணங்கினர். ---------------------------------------------------- தமிழக முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் வருகின்ற 24 ம் நடைபெற உள்ளது . அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் பவனி நடைபெற்றது. கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமான. புகழ்பெற்ற இத் திருக்கோவிலில் மாசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டியும், முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளையொட்டி மற்றும் மாவட்ட வெள்ளித்தேர் அலங்கரிக்கப்பட்டு தங்க நிற பட்டாடை உடுத்தி கந்தக்கோட்ட முருகன், அரக்கு நிற பட்டாடை உடுத்தி வள்ளி- தெய்வானை சமேதராக முருகர் வெள்ளித் தேரில் எழுந்தருளினார் . வெள்ளி தேரை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, உள்ளிட்ட அதிமுகவினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர் . இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு வெள்ளி தேரை வடம் பிடித்து உள்பிரகாரத்தில் இழுத்து வந்தனர். பொதுமக்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் கூடி இருந்த பக்தர்களுக்கு புளியோதரை, கேசரி உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் ,மாவட்ட பாசறை செயலாளர் வி ஆர.மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெள்ளி தேர் பவனி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற கோசத்துடன் வெள்ளி தேரை வடம்பிடித்து கோவில் உட்பிரகாரத்தில் இழுத்து வந்தனர்.1