ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குடியரசு தின விழா இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கொடியேற்றப்பட்ட ஆட்டோ சங்க ஓட்டுநர்கள். தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு குடியரசு தினமான இன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கான நிகழ்வை நடத்தியுள்ளனர். அப்போது இந்திய வரைபடம் மற்றும் இந்திய தேசிய கொடி வர்ணத்தை கோலப்பொடி மூலம் வரைந்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து அரூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக உள்ள சக்திவேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அருகே இருந்த பொதுமக்களுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்திய நாடு குடியரசு நாடாக அறிவித்தும் 76 ஆண்டுகளுக்கு பிறகு 77வது ஆண்டாக தொடரக்கூடிய இந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்த விழாவை சிறப்பித்ததற்கு நாங்கள் பெருமைப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குடியரசு தின விழா இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கொடியேற்றப்பட்ட ஆட்டோ சங்க ஓட்டுநர்கள். தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு குடியரசு தினமான இன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கான நிகழ்வை நடத்தியுள்ளனர். அப்போது இந்திய வரைபடம் மற்றும் இந்திய தேசிய கொடி வர்ணத்தை கோலப்பொடி மூலம் வரைந்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து அரூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக உள்ள சக்திவேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அருகே இருந்த பொதுமக்களுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்திய நாடு குடியரசு நாடாக அறிவித்தும் 76 ஆண்டுகளுக்கு பிறகு 77வது ஆண்டாக தொடரக்கூடிய இந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்த விழாவை சிறப்பித்ததற்கு நாங்கள் பெருமைப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
- Post by Periyasamy1
- உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர். வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர். உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.1
- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இ.ஆர்.சின்னசாமி மற்றும் முன்னாள் வேளாண் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் தலைமையில் இன்று பல்வேறு மாற்று மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை போர்த்தி அதிமுக கட்சி கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழா.1
- குடியரசு தின விழாவில் கருப்பு கொடியை ஏந்தி கிராம சபாவை புறக்கணித்த பிஜேபி ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார். திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர் அங்கு வந்து அதிகாரிகளிடம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் அப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றியும் கிராமம் வளர்ச்சி அடையாத நிர்வாக சீர்கேடு குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் நூறு மனுக்களுக்கு மேல் அளித்தும். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அனுப்பப்படுகிறது அந்த மனு அங்கே கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாக உள்ளது. மீண்டும் மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரும் பட்சத்தில் வேறு ஒரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணைக்கு அனுப்புகின்றனர். இதுவே தொடர் கதையாகி வருகின்றது அந்த மனுவில் தெரிவித்தார்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.1
- இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- Post by Periyasamy1