logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நெல்லை மாவட்டம் சேரன்மகா தேவி மனோ கல்லூரி பட்டமளிப்பு விழா சேரன்மாதேவி கோவிந்தபேரியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட சிப்காட் சிறப்பு வருவாய் அலுவலர் சிவகாமி கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த 180 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

3 hrs ago
user_S.Maria selvam
S.Maria selvam
சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
3 hrs ago
bd0d2119-469c-4ffb-823c-97d246a7f764

நெல்லை மாவட்டம் சேரன்மகா தேவி மனோ கல்லூரி பட்டமளிப்பு விழா சேரன்மாதேவி கோவிந்தபேரியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட சிப்காட் சிறப்பு வருவாய் அலுவலர் சிவகாமி கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த 180 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கயத்தாறு தாலுகா தலையால் நடந்தால் குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் தொடக்கம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சங்கர் நகர் கங்கைகொண்டான் பார்த்திங்களா ராஜா பெருங்குடி வழியாக தலையால் நடந்தால் கிராமத்திற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பஸ்களில் இந்த 9 எல் என்ற வழித்தடத்தில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், தலையால் நடந்தால் குளம் கிளைச் செயலாளர் பால்பண்ணைமுத்து, ஏ.சி.பால்முருகன்,கவிதா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பேச்சியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் வள்ளிவேல், முத்துமாலை, பலவேசமுத்து, இமானுவேல், முத்துக்குமார், ஊர் நாட்டாண்மைகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    4
    கயத்தாறு தாலுகா தலையால் நடந்தால் குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் தொடக்கம்
கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சங்கர் நகர் கங்கைகொண்டான் பார்த்திங்களா ராஜா பெருங்குடி வழியாக தலையால் நடந்தால் கிராமத்திற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பஸ்களில்  இந்த  9 எல் என்ற வழித்தடத்தில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், தலையால் நடந்தால் குளம் கிளைச் செயலாளர் பால்பண்ணைமுத்து, ஏ.சி.பால்முருகன்,கவிதா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பேச்சியம்மாள்,  மற்றும் கட்சி நிர்வாகிகள் வள்ளிவேல், முத்துமாலை, பலவேசமுத்து, இமானுவேல், முத்துக்குமார், ஊர் நாட்டாண்மைகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது இந்நிலையில் இன்று விடுமுறை தினமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது இதனால் ஐந்தருவி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது
    1
    தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது இந்நிலையில் இன்று விடுமுறை தினமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது இதனால் ஐந்தருவி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஓட்டப்பிடாரம் அருகே நான்கு வழி சாலையில் தவறான திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு -புதியம்புத்தூர் போலீசார் விசாரணை ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுதாகர் (40)என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியபுரம் பாலத்தில் சுதாகர் தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த மாருதி ஆல்ட்டோ கார் அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயர்ந்தார். சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (40 )என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்
    1
    ஓட்டப்பிடாரம் அருகே நான்கு வழி சாலையில் தவறான திசையில் சென்ற  இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில்  இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு -புதியம்புத்தூர் போலீசார் விசாரணை 
ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுதாகர் (40)என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியபுரம் பாலத்தில் சுதாகர்  தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிரே வந்த மாருதி ஆல்ட்டோ கார் அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயர்ந்தார்.
சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (40 )என்பவரிடம்  விசாரணை செய்து வருகின்றனர்
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
    1
    த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா.
தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது  த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தூத்துக்குடி மழைக்கால நிவாரணம் உயர்வு தொழிலாளர்கள் கொண்டாட்டம் தூத்துக்குடி உப்பளதொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது மேலும் இந்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உட்பட தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூபாய் 5000 இலிருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத்தை ரூபாய் 5000 லிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்கபடும் என சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதைத்தொடர்ந்து மழைக்கால நிவாரணத் தொகையை 7000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி முடுக்கு காடு பகுதியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உப்பள தொழிலாளர் ராமலட்சுமி தலைமையில் பெண் உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் மழைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உடன் உட்பள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மழைக்கால நிவாரணத்தை அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு தான் என்று இருக்கும் அரசாணையை ரத்து செய்து குடும்பத்தில் கணவன் மனைவி உட்பள தொழிலாளர்களாக இருந்தால் அவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் முடங்கி கிடக்கும் உப்பள தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்தி உப்பள தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் மேலும் உப்பளங்களில் உப்பள தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உட்பள தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் உபகரணங்கள் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் மழைக்கால நிவாரணத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
    1
    தூத்துக்குடி மழைக்கால நிவாரணம் உயர்வு தொழிலாளர்கள் கொண்டாட்டம் 
தூத்துக்குடி உப்பளதொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை 
இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது மேலும் இந்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உட்பட தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர் 
இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூபாய் 5000 இலிருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் 
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத்தை ரூபாய் 5000 லிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்கபடும் என சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
இதைத்தொடர்ந்து மழைக்கால நிவாரணத் தொகையை 7000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி முடுக்கு காடு பகுதியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உப்பள தொழிலாளர் ராமலட்சுமி தலைமையில் பெண் உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் 
மழைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உடன் உட்பள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மழைக்கால நிவாரணத்தை அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு தான் என்று இருக்கும் அரசாணையை ரத்து செய்து குடும்பத்தில் கணவன் மனைவி உட்பள தொழிலாளர்களாக இருந்தால் அவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 
மேலும் முடங்கி கிடக்கும் உப்பள தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்தி உப்பள தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் 
மேலும் உப்பளங்களில் உப்பள தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உட்பள தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் உபகரணங்கள் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
மேலும் மழைக்கால நிவாரணத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • குற்றால அருவிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்த வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.
    3
    குற்றால அருவிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்த வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.
    user_News
    News
    Kovilpatti, Tuticorin•
    5 hrs ago
  • தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    1
    தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    1
    குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.