Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றப் பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த திருச்சி பகுதியைச் சேர்ந்த பெரோஸ்அகமது என்ற குற்றவாளியை போலீசார் திருச்சியில் கைது செய்துள்ளனர். நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஷேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் அடங்கிய போலீஸ் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, திருச்சியில் பதுங்கியிருந்த அவரைப் பிடித்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பிடியாணையினை நிறைவேற்றினர். கைது செய்யப்பட்டுள்ள பெரோஸ்அகமது மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் மற்றும் 4 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Natarajan Pitchaimani
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றப் பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த திருச்சி பகுதியைச் சேர்ந்த பெரோஸ்அகமது என்ற குற்றவாளியை போலீசார் திருச்சியில் கைது செய்துள்ளனர். நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஷேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் அடங்கிய போலீஸ் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, திருச்சியில் பதுங்கியிருந்த அவரைப் பிடித்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பிடியாணையினை நிறைவேற்றினர். கைது செய்யப்பட்டுள்ள பெரோஸ்அகமது மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் மற்றும் 4 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.1
- திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.1
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் அனைத்தும் வேகமாக பட்டா நிலங்களாக மாறி வருவதால், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வழியின்றி ஆடு வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறுகள் மற்றும் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததும் இந்தத் தொழில் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் உள்ள தங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நல வாரியம் மூலம் தேவையான உதவிகளை வழங்கி, ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேய்ச்சலுக்கு செல்ல வழி இல்லாததால் ஆடு வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேல்ராஜ் என்பவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.1
- 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.4
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் குடோன் வைக்கப்பட்டிருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், குப்பைகளுடனும் சுகாதாரமற்று இருந்ததைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா? உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள இரண்டு கிட்டங்கிகளிலும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு, எடை, சுகாதாரம் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றைச் சரிபார்த்தார். மேலும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் உணவுப் பொருள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து, அவர்கள் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு, சீனி மற்றும் மைதா ஆகியவற்றை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள் மிகவும் தரமற்றதாகவும், சேதமடைந்தும், பழையதாகவும் இருந்ததைக் கண்ட அமைச்சர், அவற்றை உடனடியாக மாற்றி, தரமான பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள் பைகள் மிகவும் தரமற்று இருப்பதாக ஊழியர்கள் தனக்கு அனுப்பிய ஆடியோ புகாரை, அங்கிருந்த பணியாளர்களிடமே அமைச்சர் நேரடியாகப் போட்டுக் காட்டினார். இதனால் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தவெக செயலாளர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.2
- அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், தமிழக முதல்வர் விஜய்க்குப் பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் விஜய் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்திருந்தால், அவர்கள் உருப்படியான யோசனைகளை வழங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் நம்பிக்கையை இவ்வாறு சிதைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார், வேலை தேடி வரும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தெருக் கோடியில் நிற்க வைக்கலாமா என்றும் முதல்வர் விஜய்யை நோக்கிக் கடுமையாக வினவியுள்ளார்.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் இரண்டு பாம்புகள் விளையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிட்னி விளையாட்டு மைதானத்திற்கு பொதுமக்கள் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் விளையாடுவதற்கும் வந்திருந்தனர். அப்போது மைதானத்தின் புதர் பகுதியில் சலசலப்பு சத்தம் கேட்டதை அடுத்து, அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், இரண்டு சாரைப்பாம்புகள் தங்களை மறந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்புகள் விளையாடுவதை இடையூறு செய்யாமல் சிறிது நேரம் காத்திருந்தனர். அதன்பின்னர், அந்த இரு சாரைப்பாம்புகளையும் பத்திரமாக உயிரோடு பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.1