logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.

5 hrs ago
user_ALL INDIA REPORTER KPA
ALL INDIA REPORTER KPA
ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
5 hrs ago

தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.
    1
    தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிட்டங்கியில் உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், குப்பைகள் நிறைந்து அசுத்தமாகவும் இருந்ததை அமைச்சர் கண்டறிந்தார். இதனைப் பார்த்து அதிருப்தியடைந்த அமைச்சர் வெங்கட்ராமன், அங்கிருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், சொந்த வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வாணிப கழக கிட்டங்கியை எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிட்டங்கியில் உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், குப்பைகள் நிறைந்து அசுத்தமாகவும் இருந்ததை அமைச்சர் கண்டறிந்தார்.

இதனைப் பார்த்து அதிருப்தியடைந்த அமைச்சர் வெங்கட்ராமன், அங்கிருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், சொந்த வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வாணிப கழக கிட்டங்கியை எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    user_Sudharsan
    Sudharsan
    Palani, Dindigul•
    21 hrs ago
  • தேனி மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு மணல்மேடாக காட்சியளிக்கிறது. வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்றை நம்பி வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மற்றும் கண்டமனூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து பெரும்பாலான கிணறுகளில் நீர் சுரப்பது நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் முழுமையாகக் கைவிட்டதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதால், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் நிலையை எட்டியுள்ளன. இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் உள்ளூர் ஊராட்சி நிர்வாகங்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றன. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
    1
    தேனி மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு மணல்மேடாக காட்சியளிக்கிறது. வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்றை நம்பி வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மற்றும் கண்டமனூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து பெரும்பாலான கிணறுகளில் நீர் சுரப்பது நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் முழுமையாகக் கைவிட்டதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதால், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் நிலையை எட்டியுள்ளன. இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் உள்ளூர் ஊராட்சி நிர்வாகங்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றன. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலின் 72-வது பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த உற்சாகமான நிகழ்வில் மொத்தம் 52 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்துகொண்டு தங்களது வேகத்தை வெளிப்படுத்தின. இந்தப் போட்டி பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் பெரிய மாடுகளுக்கான போட்டி 8 கி.மீ தூரத்திற்கும், சின்ன மாடுகளுக்கான போட்டி 6 கி.மீ தூரத்திற்கும், பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டி 4 கி.மீ தூரத்திற்கும் நடைபெற்றது. வெற்றி பெற்ற முதல் நான்கு இடங்களுக்கு ரூ. 30,000, ரூ. 25,000 மற்றும் ரூ. 20,000 உள்ளிட்ட ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு கண்டு ரசித்தனர்.
    1
    சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலின் 72-வது பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த உற்சாகமான நிகழ்வில் மொத்தம் 52 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்துகொண்டு தங்களது வேகத்தை வெளிப்படுத்தின.

இந்தப் போட்டி பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் பெரிய மாடுகளுக்கான போட்டி 8 கி.மீ தூரத்திற்கும், சின்ன மாடுகளுக்கான போட்டி 6 கி.மீ தூரத்திற்கும், பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டி 4 கி.மீ தூரத்திற்கும் நடைபெற்றது. வெற்றி பெற்ற முதல் நான்கு இடங்களுக்கு ரூ. 30,000, ரூ. 25,000 மற்றும் ரூ. 20,000 உள்ளிட்ட ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு கண்டு ரசித்தனர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அங்கு பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அமைச்சரிடம் நேரில் வழங்கினர். தொழிலாளர்கள் அளித்த இந்த மனுவின் மீது பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, போடி பகுதியில் நடைபெறவுள்ள ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
    1
    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அங்கு பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அமைச்சரிடம் நேரில் வழங்கினர்.

தொழிலாளர்கள் அளித்த இந்த மனுவின் மீது பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, போடி பகுதியில் நடைபெறவுள்ள ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.